அறிவுச் சுடர்
43
தம்மை என்றும் சிறியர் என்றெண்ணாதவர் ஒரு சிலர் உண்டு; இவர்களே முற்றிலும் சிறுமை உடைய ஒரு சிலரும் ஆவர்!
ஜி. கே. செஸ்டர்ட்டன்.
போலிப் பகட்டினால் இதுவரை யாரும் பெருமை பெற்ற
ஸாமுவேல் ஜான்ஸன்.
தில்லை.
பெருத்த குற்றங்கள் பெரியாருக்கே உரிய சிறப்புரிமையாம். லாருஷ்ஃவூகோல்ட்.
சிலர் பெரியாராய்ப் பிறக்கின்றனர். சிலர் பெருமையை ஆக்கிக் கொள்கின்றனர்; இன்னும் சிலர்மீது பெருமை திணிக்கப் படுகிறது.
ஷேக்ஸ்பியர்.
பெரியார் பெரியாராயிருப்பதன் காரணம் நாம் அவர் களிடம் மண்டியிடுவதுதான்.நாமும் நிமிர்ந்து நிற்போம்.
தக்கார் தகவிலர் ஆதல் அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.
29. நகைத்திறம்
ஸ்டர்னர்.
திருவள்ளுவர்.
நீண்ட ஆயுளுக்கு நன்மருந்தாக உடற்பயிற்சி, நகைப்பு ஆகிய இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். என்னளவில், நான் தயங்காமல் நகைப்பையே தேர்ந்தெடுத்துக் கொள்ளுவேன்.
ஸர் சார்லஸ் வில்ஸன்.
ஒரு நகைத் துணுக்கை விளக்கமுயன்றால் போதும், நகைத் திறத்தைக் கொலை செய்ய வேறு எதுவும் வேண்டாம்.
மாக்ஸ் ஈஸ்ட்மன்.