46
அப்பாத்துரையம் - 41
கசியாக் குழல்களிலிருந்து ஒரு சக்தி வெடித்து நாடி நரம்புகள் எங்கும் பரவுகிறது. அது தொட்ட இடமெல்லாம் உயிர் தருகிறது. கெரால்டு ஹெர்டு.
நகைக்க முடியாத மனிதன் துரோகம், சூழ்ச்சி, அழிமதி ஆகியவற்றுக்கே உரியவன். அவன் வாழ்நாள் முழுவதுமே ஒரே சூழ்ச்சியாக இருக்கும் என்று கூறினால் மிகையாகாது.
கார்லைல்.
நகைத்திறன் உரையாடலாகிய உணவுக்குச் சுவையூட்டும்
உப்பு - அதுவே உணவாய் விடாது.
நகைமன் இயன்மாதணி; பலர்நாடும்
ஹாஸ்லிட்.
தகை; ஒரு நாவுரைச் சால்பு.
பெருநகையும் ஆன்ற பெரியார் உரையும்
கவிஞர் போப்.
ஒருதகையாம் ஒண்மைத் திறத்தே - சிறுதகையார்
தேறாச் சிறுநகை செப்பமறச் சிரழிக்கும்
மாறாப் பழிசூழும் மற்று.
நகைச்சுவை மணிகள்
ஷேக்ஸ்பியர்.
இந்நூலில் புதியனவும் நல்லவுமாக எவ்வளவோ உள்ளன வாம்.ஆனால் அந்தோ, நல்லன எவையும் புதியன அல்ல; புதியன எவையும் நல்லன அல்ல!
லெஸ்ஸிங்.
சுவடிகளை இரவல் கொடுக்காதேயுங்கள்; அதனை எவரும் திருப்பிக் கொடுப்பது கிடையாது. என்னுடைய நூல் நிலையத்திலுள்ள நூல்கள் யாவுமே இரவலாகப் பிறர் கொடுத்தவைதான்!
அனதோல் ஃபிரான்சு.