உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




76

அப்பாத்துரையம் - 41

பேரளவு சமயப் பற்றுடனே சிறிதளவு சிற்றின்ப அவாவை எந்த அளவில் எந்த முறையில் சேர்த்தால் மனச்சான்றின் தொல்லை குறையக் கூடும். அந்த அளவுக்கு மிகக் குறைந்த கட்டற்ற இன்ப நுகர்வு பெருகக்கூடும். அந்த அளவுக்குப் பெருகும்போதே அந்த விழுக்காடறிந்து அவற்றை மேற் கொள்வதில் திரு. சார்லி மார்க... ஒப்பற்ற திறம் பெற்றுள்ளார்! ராபர்ட் ஃவர்சைத்.

அவரை மக்கள் மாசற்றவர் என்கிறார்கள் - ஆம் அவர் தொழுநோய் அந்த அளவுக்கு முதிர் நிறைவுடையதாயிருக்க வேண்டுமே!

கவன்ட்ரி பாட்மோர்.

சாவினாலேயே திருத்தம் பெறத்தகும் மந்திரிகளுள் வால்டோ ஒருவர்.

ஸாக்கி.

மாகி (மார்கரட்), ஸ்காட்லந்துக்காரரின் மிக உயர்ந்த பண்பு எது என்பதனை நீ மறந்து விட்டாய்! கெடுதி பயக்கலாம் என ஐயுறத் தகும் எதனையும் அவர்கள் செய்ய மாட்டார்கள்! ஜே.எம்.பாரி.

மனைவி : அன்ப, இது முற்றிலும் பொருளற்றதாகவல்லவா தோற்றுகிறது?

கணவன்: ஆம், அன்பே! அங்ஙனம் தோற்றுவது உண்மையே. ஆயினும் அதனாலேயே அது நல்ல சட்ட மாயிருக்கப் படாது என்று கூறிவிட முடியாது.

சர் வால்டர் ஸ்காட்.

செல்வருக்குத் தனிச் சட்டமுண்டு; மிகுசெல்வருக்கு

அதனினும் வேறான தனிச் சட்டம் உண்டு.

ஒரு பெரியார். ஒருவன் எவ்வளவு நல்லவனாயிருந்தாலுஞ் சரி, ஒவ் வொரு செயலையும் ஒவ்வொரு எண்ணத்தையும் சட்டத்தை ஆராய்ந்து பின்பற்றியே அவன் செய்தாலும் சரி, அவன் வாழ்க்கையில் சட்டம் குறுக்கிட்டும் தூக்குத் தண்டனைக்குரிய குற்றத்திற்குப் பத்துத் தடவையாவது ஆளாக்காமலிராது.

மாண்டேய்ஸ்.