உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. குடிலன் வீழ்ச்சி

ஆட்சி என்பது இரண்டு பக்கமுள்ள ஒரு கொடுவாள். அதன் ஒரு புறம் கூர்மை வாய்ந்தது; எதிர்த்தோரை அடங்கொண்டு சாடுவது; அழிவு செய்வது. ஆனால், அதற்கு மற்றொரு புறம் உண்டு. அது அக்கூர்மைக்கு வலுவும் பாதுகாப்பும் அளிப்பது. அழிவைத் தடுத்து ஆக்கத்தை உண்டு பண்ணும் நற்பக்கம் அதுவே! ஹைதரின் செயலாட்சியில் இந்த இரு பக்கங்களையும் தெளிவாகக் காணலாம். ஆனால், குந்திராவ் போன்றோர் ஆட்சியில் வாளின் ஒரு புறமே செயலாற்றிற்று. அவர்கள் கூரியபுறத்தால் அழிவு செய்தனர். அதனை வலுப்படுத்த, மட்டுப்படுத்தவில்லை. மொட்டைப் பக்கத்தின் அருமையை அவர்கள் அறியமாட்டார்கள். குந்திராவைத் தனக்கு மேல் உயர்த்திவிட்ட ஹைதருக்கு இது விரைவில் அனுபவ உண்மையாயிற்று.

ஆளத் தெரிந்தவர் கையில் குந்திராவ் ஓர் ஒப்பற்ற ஆட்சிக் கருவியாகச் சமைந்தான். ஹைதரின் கீழ் அவன் செயலாளராக இருக்கும் போது அவன் நிலை இதுவே. அவன் திறமையறிந்து ஹைதர் அவனைத் தன்னிடம் வேலைக்கமர்த்தினான். குடிகள் மீது வரி விதிப்பதில் - விழுவில்லாமல் வரி வசூலிப்பதில் இம்மியும் பிசகாமல் கணக்கு வைத்துக் கொள்வதில் குந்திராவுக்கு ஈடு யாரும் இல்லை. இதைக் கண்டே ஹைதர் அவனுக்குப் படிப்படியாக உயர்வு தந்து, இறுதியில் அவனைத் தன் நம்பகமான அந்தரங்கச் செயலாளனாக்கிக் கொண்டான். ஆனால், இந்நிலை அடைந்த பின், ஒப்பற்ற ஆட்சிக் கருவியான அவன் அத்துடன் அமையாமல், ஆட்சியையே கைப்பற்றும் பேரார்வம் கொண்டான். பெருந்தன்மை மிக்க ஹைதர் இங்கும் அவனுக்கு உதவினான். அந்நிலையிலும் அவனுக்கு உண்மை யுடனிருந்து, தன்னிலும் அவனை உயர்த்தி ஆதரவு தர