உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அம்மையப்பன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 தி வேதாளம்: ஸ்வாமிகளுக்கு காணிக்கைகள் வந்தி ருக்கிறது நிறைய. அதை எடுத்து வந்தேன்... மாய்கை : வேதாளம். காணிக்கை...வாழ்க பக்தர்கள்! எவ்வளவு வேதாளம்: கணக்கற்ற பொன் நாணயங்கள். மாய்கை: சந்தோஷம்! அதோ இருக்கிறது உண்டியல். [வேதாளம் போதல்] பூபதி : சாமிகள் பொன்னைத்தொடுவது கிடையாதோ சாமி: விஷம் - விஷம்!!...... பூபதி: அந்த விஷத்திலே வளருவது தானே இந்த விருக்ஷம்!... சாமியாரே! வெளிநாடு சென்று திரும்பி யிருக்கும் எனக்கு நீர் ஓர் வெகுமதி தரவேண்டும் - தரு வீரா? சாமி: வெகுமதியா? என்ன பூபதி. பூபதி: அந்த புதையலை என் கண்ணிலே காட்ட வேண்டும். சாமி: புதையல்? பூபதி: பொன்னோ வைரமோ அல்ல சாமியாரே... உம்மிடம் புதைந்து கிடக்கும் அந்த ரககியத்தைத்தான் கேட்கிறேன்... சாமி : ரகசியம்! பூபதி: ஆமாம் இப்போதாவது சொல்லக் கூடாதா? சாமி: உயிரை வாங்காதீர்; இருபது வருடமாய் போய் இருந்தீரே இப்போது இங்கு ஏனய்யா வந்தீர்...? பூபதி : ஏன் வந்தேன- சொல்கிறேன், நீரும் இருபது ஆண்டுகளாகத்தான் அந்த ரகசியத்தை மறைத்துக் கொண்டு வாழ்கிறீர்! ஹ-ஹ. ஹ- சாமியாரே ர குதிரை தன் ஆகாரத்தை கோணியிலே மறைத்துக் கொண்டு சாப் பிட்டாலும் அது கொள் என்று தெரியாமலா போய் விடுகிறது. ஹ-ஹ-ஹ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/12&oldid=1700424" இலிருந்து மீள்விக்கப்பட்டது