பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 493

பின்பற்றி அனந்த மில்ஸ்களும் அனந்தமாயத் தரிகளும் விவசாய விருத்திக் கருவிகளும் உழைப்பாளிகளும் நாளுக்குநாள் பெருகி தேச சிறப்பும் மக்கள் சுகமுமடைந்து வருகின்றார்கள். அங்கும் சில நாட்களுக்கு முன் சாதி வித்தியாசம் பாராட்டி வந்துள்ள இந்துக்களென்போர் இந்தியராம் பௌத்தக் கூட்டத்தோர் யாவரும் தங்கள் பொய்யாய சாதிபேதக்கட்டுகளுக்கும் சமய பேதமதப் புறட்டுக்கும் சம்மதியாது எதிரிகளாகவே இருந்தபடியால் அவர்கள் யாவரையும் சண்டாளர்கள் என்றும் தாழ்ந்த சாதியோர் என்றும் வகுத்து அவர்களை முன்னேறவிடாதப் பல பாடுகளைப் படுத்திவந்தார்கள். அவர்கள் யாவரும் ஒன்று கூடி ஓர் சென்ஸெஸ் காலத்தில் நீதிநெறியமைந்த ராஜாங்கத்தோரை நோக்கி எங்களை சண்டாளர் என்று சென்ஸசில் குறிக்கப்படாதென முறையிட்டதின்பின் சாதிபேதமுள்ள இந்துக்களென்போரே முயன்று அவர்களை நாமசூத்திராள் என்றழைக்கலாமென்றபோது அப்பெயரையும் அவர்கள் சட்டை செய்யாது தங்கள் பூர்வ நிலையையுணர்ந்து பௌத்தர்களெனக் கண்டறிந்து தற்காலம் அறுபதினாயிரத்திச் சில்லரைபேர் பௌத்தர்களாகித் தங்களுக்கென்று மடங்கட்டிக் கொண்டும் தங்களுக்குள்ளாகவே குருக்களை நியமித்துக் கொண்டும் கருணைதங்கிய மிஷனெரிமார்களின் கலாசாலையிலும் தங்களே ஏற்படுத்திக் கொண்ட கலாசாலைகளிலுங் கற்றுத் தேர்ந்து மாஜிஸ்டிரேட்டுகளாகவும் ஜர்ஜ்ஜிகளாகவும், பாரிஸ்டர்களாகவும், கவுன்ஸல் மெம்பர்களாகவும் நியமனம் பெற்று வரும் அப்பௌத்தர்களானோர் யாவருஞ் சுகமுற்ற வாழ்க்கையடைந்து வருகின்றார்கள். அதினினும் இன்னோர் கட்டுப்பாடு அவர்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவைகள் யாதென்னிலோ தங்களைச் சண்டாளரென்றும் தாழ்ந்த சாதியோரென்றுங் கூறி அலைக்கழித்து வந்த சாதியோடும் எவ்வகை வேலையிருப்பினும் அவர்களிடம் போய் செய்யவுங் கூடாது அவர்களுக்கு அடங்கவுங் கூடாது என்பதே முடிவான நிபந்தனையைச் செய்துக் கொண்டு சகல சாதியோரைவிட வித்தையிலும் விவசாயத்திலும் சிறந்தே வருகின்றபடியால் வடயிந்தியம் வித்தையிலும் விவசாயத்திலும் சிறந்தே வருகின்றது. தென்னிந்தியாவிலோ வித்தையிலும் விவசாயத்திலும் முனைந்து உழைப்பவர்களும் சோம்பலற்றவர்களும் இந்துக்களென்போரால் தாழ்ந்த சாதியென்று வகுக்கப்பட்டுள்ளவர்களே யாவர்.

அவர்களோ இச்சாதி வேஷமிட்டுள்ளோர் மத்தியில் எத்தகையாக விளங்குகின்றார்களென்னில் தாயையேனுங் கழுதையையேனுங் குதிரையையேனும் மாட்டையேனுந் தங்களருகில் வைத்துக் கொண்டு தடவிகொடுப்பார்கள். இத்தாழ்த்தப்பட்டுள்ளவனைக் கண்டவுடன் சீறிச்சினந்து தூரவிலகச் செய்து வருவதுடன் அவர்களுக்கு வெளுத்து கொடுக்கும் வண்ணார்களை இவர்களுக்கு வெளுக்கவிடாமலும், அவர்களுக்கு சவரஞ்செய்யும் அம்மட்டர்களை இவர்களுக்குச் செய்யவிடாமலும், அவர்கள் மொண்டு குடிக்குந் தண்ணீரை இவர்களை மொண்டு குடிக்கவிடாமலும், கெடுத்து அசுத்தமுண்டாகச் செய்து, கொல்லுவதற்கான வழிவகைகளைத் தேடுவதுடன் தங்கள் விவசாயத்திற்குப் பண்ணையாட்களாக சேர்ந்துள்ளவர்களையோ நாளெல்லாம் உழைத்தபோதினும் அரைவயிற்றுக்கேனுங்கஞ்செட்டாது வதைத்து கொல்லாமற் கொல்லும் வழிவகைகளைத் தேடுவார்களன்றி அவர்களைச் சுகதேகிகளாகவும் சுத்ததேகிகளாகவும் உலாவக் கண்ணால் பார்க்கவே சகியார்கள். இத்தகையக் கொடுநெஞ்சர் பார்வையிலும் படுபாவிகள் மத்தியிலும் விவசாயிகள் சீர்குலைந்து சீரழிந்து பல தேசங்களுக்குஞ் சென்றவர்கள் போக எஞ்சியுள்ளவர்களோ எங்கும் போவதற்கில்லாமல் வஞ்சகர்கள் ஒப்பந்தங்களில் சிக்கிக் கொண்டு பாம்பின் வாய்ப்பட்ட தேரைபோல் தயங்கி நிற்கின்றார்கள்.

இத்தகைய காலத்தில் நீதியும் நெறியுங் கருணையுமைந்த பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் இத்தென்னிந்தியாவின் விவசாய விருத்தியும் வித்தியா விருத்தியும் பலுகவேண்டுமென்று கருதி வேண பணவுதவியும், கருவிகளு