பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 29


ஆயிரம் பெயர்க் கூச்சலிடுவதில் அன்னிதேச சரக்குகளைத் தருவித்து அதினால் சீர்பெறும் ஐயாயிரம் பெயர்களை ஆதரிப்பவர்கள் யார். துரும்புங் கலந்து தண்ணீரைத் தேக்குமென்னும் பழமொழிக்கிணங்க வியாபாரச் சிந்தையில் விரோதத்தைப் பெருக்குவதால் அன்னிய வியாபாரம் கெட்டு நம்முடைய முயற்சியும் நழுவும்.

- 1:3; சூலை 3, 1907 -

முயற்ச்சியுடையார் இகழ்ச்சி யடையாரென்னு முதுமொழிக்கிணங்க சீர்திருத்தக்காரர்கள் தாமெடுத்த முயற்சியில் கண்ணோக்கம் வைக்காமல் அன்னியதேச சரக்குகளை வாங்கக்கூடாதென்றும் அச் சரக்குகளை நெருப்பிலிட்டு கொளுத்துவதும் ஆகிய செயல்களை யாராயுங்கால் கைப்பணமிருந்தும் பட்டிணி, கலியாணம் செய்தும் சன்னியாசி என்பதுபோல் சுதேச சீர்திருத்தம் என்பதுபோய் சுதேச போர்வதமாக முடியும்போற் காணுகின்றது.......(மீதி தெளிவில்லை )

- 1:5; சூலை 17, 1907 -

பொது சீர்திருத்தத்தை நாடுவோர் தென்னிந்தியாவிலுள்ள சகலக்குடிகளும் நடுநிலமை நாடி சகலர் சுகத்தையும் கருதுகின்றார்களா அன்றேல் சுயப்பிரயோசனத்தைக் கருதி சுருசுருப்பிலிருக்கின்றார்களா என்பதேயாம். காரணம், இவ்விந்துதேசமானது ஆயிரத்தியைன்னூறு வருஷங்களுக்குமுன் நீர்வளம் நிலவளமோங்கி சகலகுடிகளின் அன்பின் பெருக்கத்தினாலும் நீதியின் ஒழுக்கங்களினாலும் ஒற்றுமெயுற்று, வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கமாகும் சித்தசுத்தியினிற்கும் சுகவாழ்க்கையால் குடிகள் அரசர்களைப் பாதுகாத்தலும் அரசர்கள் குடிகளைக்காத்தலுமாகிய செயலுற்றிருந்தார்கள். அக்காலத்தில் மிலேச்சரென்னும் ஓர் கூட்டத்தார்கள் குமானிடரென்னுந் தேசத்தில் வந்து முதலாவது குடியேறி யாசக சீவனத்தால் பல இடங்களிலும் பரவி இத்தேசபாஷைகளையுங்கற்று தொழில்களுக்கென்று வகுத்திருந்தப் பெயர்களை கீழ்ச்சாதி மேற்சாதி என மாறுபடுத்தி சிற்றரசர்களையும் பெருங்குடிகளையுந் தங்கள் வயப்படுத்திக்கொண்டு தாங்களே உயர்ந்த சாதிகளென்றும் மற்றவர்கள் அவர்கள் சொற்படி அடங்கி நிற்க வேண்டும் என்றும் அவர்களுக்கு அடங்காமல் எதிர்த்தவர்களை தாழ்ந்த சாதியாரென்றும் வகுத்து தேசசிறப்பையும் ஐக்கியத்தையும் வேறுபடுத்தி தங்கள் சுயப்பிரயோசனத்தை விருத்தி செய்து வருங்கால் மகமதியர்கள் வந்து குடியேறி மற்றும் பாழாக்கினார்கள். அவர்களுக்குப்பின் கிரேக்கர் போர்ச்சுகீயர் பிராஞ்சியர் வந்து குடியேறினார்கள். இவர்களோ வேண்டிய பொருட்களை ஆராய்ந்து கொண்டு போய் தங்கடங்கள் தேசங்களைச் சிறப்பித்துக் கொண்டார்கள். கடைசியில் ஆங்கிலேயர் வந்து குடியேறினார்கள் இவர்கள் வந்து தங்கள் செங்கோல் நிருத்தி ஒரு தேசங்களைவிட்டு மறுதேசங்களுக்குப் போகுங் கப்பல் சுகங்களையும், இரயில் பாதை சுகங்களையும், வித்தியாசாலை சுகங்களையும், வைத்தியசாலை சுகங்களையும், உத்தியோக சுகங்களையும் கொடுத்து சகலரையுந் தங்களைப்போல் சுகமடையச்செய்து வருகின்றார்கள். இவ்வகை செங்கோலைப்பெற்ற ஆங்கில விவேகிகள் தங்களாற்கூடிய சீர்திருத்தஞ்செய்து சுத்திகரித்து வந்தபோதிலும் ஆயிரத்தைந் நூறு வருடங்களுக்கு முன் வந்து குடியேறிய மிலேச்சர்களாலும் சாதிகளென்னுந் துர்நாற்றங்களும்.......(வரிகள் தெளிவில்லை)

ஆடுகள் கசாயிக்காரனை நம்பி பின் செல்லுவதுபோல் தங்கள் சுயப்பிரயோசனங்களுக்காய் நம்மையும் நமது தேசத்தையும் கெடுத்துவரும் சத்துருக்களைப்பின் பற்றுவோமானால்.

- 1:8; ஆகஸ்டு 7, 1907 -

தற்காலம் நாமடைந்திருக்கும் கிஞ்சித்துவ சுகமுங்கெட்டு சீரழிவது திண்ணம். ஆதலின் கல்வி கேள்விகளால் மிகுத்து சுதேச சீர்திருத்தத்தை நாடும் தேசாபிமானிகள் ஒவ்வொருவரும் இத்தேசம் யாரால் க்ஷீணதிசையடைந்த