பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல்

31

இராமன் முன்னால் கூறியது போலவே, சீதை வந்ததால், பின்பு எல்லையற்ற துன்பம் வந்ததைச் சொல்ல வேண்டுமா!

சுமந்திரன் மீட்சிப் படலம்

எம தூதன்

யான் நாட்டிற்குத் திரும்ப முடியாது; நீ தேரை ஒட்டிக் கொண்டு அயோத்தி செல்க என்று சுமந்திரனிடம் இராமன் கூறியதும் சுமந்திரன் கூறுகிறான்: கல் மனம் உடைய யான், மிகவும் வருந்திக் கொண்டிருக்கும் தயரதனிடம், நீ சொல்வதை அறிவிக்கச் செல்லவா? அல்லது எம தூதனாகச் செல்லவா?- என்கிறான்.

வன்புலக் கல்மன மதியில் வஞ்சனேன்
என்பு உலப்புற உடைந்து இரங்கும் மன்னன்பால் உன்புலக் குரிய சொல் உணர்த்தச் செல்கெனோ? தென்புலக் கோமன் தூதின் செல்கெனோ?

(22)

தென் புலம் = தென் திசை; கோமன் = தென் திசை யின் காவலனாகிய எமன். 'திசை என்னும் வடசொல்லுக்குப் பதிலாக, தென்புலம்’ எனப் ‘புலம்’ என்னும் தமிழ்ச் சொல்லைக் கம்பர் கையாண்டுள்ளார். தென் புலத்தார்’ எனத் திருவள்ளுவரும் கூறியுள்ளாரே. எம துரதனாகச் செல்லவா?- என்று சுமந்திரன் முன்னர்ச் சொல்லியவாறே பின்னர்த் தயரதன் இறந்து விட்டான்.

பயந்த மூவர்

அயோத்திக்குத் திரும்ப இருக்கின்ற சுமந்திரனிடம், இராமன், என்னைப் பெற்றெடுத்த தாயர் மூவர்க்கும், எனது குறையாத- குறைவு இல்லாத நீண்ட- பெரிய வணக்கத்தை அறிவிப்பாயாக என்று கூறினான்.