பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 ) சுந்தர சண்முகனார்


எவ்வளவு மகிழ்ச்சி கொள்வாளோ- அவ்வளவு மகிழ்ச்சி கொண்டாள்; காதலுடன் அழுது கொண்டே பரதனைத் தழுவிக் கொண்டாள்:

தூய வாசகம் சொன்ன தோன்றலை
தீய கானகம் திருவின் நீங்கிமுன்
போயினான் வரக் கண்ட பொம்மலாள்
ஆய காதலால் அழுது புலம்பினாள்

(117)

கைகேயி கோசலையின் மைந்தனுக்குக் கொடுமை செய்திருந்தும், அவள் மகனைக் கோசலை தழுவிக் கொண்டது படிப்பதற்குச் சுவையாயுள்ளது.

பின்னால் வரப்போவதை அறிந்தவர் போல முன்னாலேயே சொல்வதும் செய்வதும் ஆகிய முன்னோட்டம் காப்பியத்தில் மிகவும் சுவை நல்கும் பகுதியாகும். மற்றும், ஒருவர்க்கொருவர் தமது உரிமையை விட்டுக் கொடுப்பதும், தமது துன்பத்திற்குக் காரணமானவர்களையும் போற்றி வணங்குதலும் இன்ன பிற மாற்றங்களும் மேலும் சுவையூட்டும் கூறுகளாம்.