பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


உழைப்பவன்' என்ற படத்தின் ஒரு பாடல்.

'காமம்' என்றால் விருப்பம். அதை ஆட்சி செய்பவள் காமாட்சி!

கமலத்தில் வீற்றிருந்து உள்ளத்தை ஆள்பவள் கமலாட்சி!

விரிந்த வியனுலகை ஆள்பவள் விசாலாட்சி!

தண்ணீரில் தூங்காத மீன்போல தரணியை ஆள்பவள் மீனாட்சி!

அதனைப் போல, என் வீட்டு ராஜாங்கம் உன் கையிலே - தெய்வங்கள் பேசாதோ உன் சொல்லிலே முத்தாரமே' என்று ஆற்றுதல் என்பது அலந்தார்க்கு உதவுதல்' என்ற தத்துவத்தை 'ஆயிரம் கண்ணுடையாள்' படத்திலே பாடித் தாலாட்டியுள்ளார் கவிஞர்.

'காம சாஸ்திரம்' என்ற படத்திலே 'அன்பு' என்பது தன் கிளை செறா அமை என்ற உயர்ந்த பாசத்திலே, திருக்குறள், பாரதி, காமராஜர், அறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் போன்றவர் பண்புகளை எடுத்துக் காட்டாகக் காட்டி, மக்களைப் பின்பற்ற வைத்துள்ளார் கவிஞர்.

'மீனவ நண்பன்' என்ற படப் பாடலிலே, 'அறிவு என்பது பேதையர் சொல் நோன்றல்' என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தியுள்ளார் கவிஞர்.

'செறிவு என்பது கூறியது மாறா அமை’ என்ற வாழ்க்கை நலத்தின் செறிவான கருத்துக்களைக் 'காதல்கிளிகள்'. என்ற படப் பாடலிலே கவிஞர் செப்புகின்றார்.

தமிழக அரசின்தங்கப்பதக்கம் பெற்ற 'கிழக்கே போகும் ரயில்' என்ற படத்தின் ஒரு பாடல், நீரோடை போலவே சிரித்தாடி ஓடி, சிந்துபாடி நம்மைக் களியூட்டுகிறது.

'நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை' என்ற மாண்புக்கு முரசு கொட்டி, காஞ்சி பட்டு, கஸ்தூரி பொட்டு, திருமகள், தென்குமரி, திருக்குற்றாலம், பூம்புகார், கண்ணகி, போன்றவற்றின் உட்பொருள் உணர்வுகளை 'வயசுப் பொண்ணு' என்ற படத்தில் விளங்க வைத்துள்ளார் கவிஞர்.

127