78
வருமே, இந்த நிலையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்களாம்.
மன்னன் இறந்ததும், ரிஷ்லுவை வெட்டிப் போடுவதா, நாட்டைவிட்டு விரட்டுவதா?
ரிஷ்லு தொலைந்ததும், யாரார் எந்தெந்தப் பதவிவகிப்பது?
இவைகளெல்லாம் கூடப் பேசப்பட்டனவாம்.
ரிஷ்லுவுக்கும் உள்ளூரப் பயம்தான்.
மன்னனோ அனைவரையும் ஏமாற்றிவிட்டான்--பிழைத்துக்கொண்டான். ரிஷ்லு, மகிழ்ந்தான்--சதிபேசியவர்கள் மீது பாய்ந்தான்.
மற்றோர் சமயத்தில், மன்னனுக்கும் மேரிக்கும் மிகுந்த நேசம் இருந்தது--மன்னனுக்குச் சரியான தூபமிட்டு ரிஷ்லுவை விரட்டிவிடும்படி ஏவினார்கள் தாயார். தாயும் மகனும் பேசிக்கொண்டிருந்த தனி அறைக்குச் செல்லவும் ரிஷ்லுவுக்கு அனுமதி கிடையாது. ரிஷ்லுவுக்கு அச்சமாகிவிட்டது. எனினும், கடைசி நேரத்தில் மன்னன் ரிஷ்லுவைக் கைவிட மறுத்துவிட்டான். மேரி மனமுடைந்து, இனி நமது திட்டம் பலிக்காது என்று தெரிந்துகொண்டு ஓய்ந்தே போனாள்.
அவ்விதமான 'பிடி' இருந்தது ரிஷ்லுவுக்கு, மன்னனிடம்.
எந்த மங்கையின் விழியும் மொழியும் மன்னனுக்கு மது ஆகிவிடுவதில்லை, என்பது ரிஷ்லுக்கு தெரிந்திருந்தபோதிலும் இலேசாக அச்சம் தட்டியபடி இருந்தது.
முன்னம் இரு மங்கையர் மன்னன் மனதைக் கெடுக்க முயன்ற சம்பவம், இந்த அச்சத்தை வளர்த்தது. எனவே, மன்னனைப் பெண்களுடன் பழகவிடுவது, எப்போதாவது ஆபத்தாக முடிந்துவிடக்கூடும் என்று எண்ணினான் ரிஷ்லு, ஆனால் மன்னன், தனியனாக எப்படி இருப்பான்; சோர்வு