பக்கம்:அருமையான துணை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பதிப்புரை

ழுத்துச் செல்வர் வல்லிக்கண்ணன் அவர்களின் படைப்புகள் ஏராளம். அவற்றுள் இதழ்களில் வெளிவந்து தொகுப்பு நூல்களில் இடம்பெறாதவை பல. அவற்றை சுவைக்கும் அணுகி இந்நூலில் அடங்கும் பன்னிரெண்டு சிறு கதைகளை அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு அவர்களின் நல்லாசிகளோடு இந்நூலினை வெளிக்கொணர்கிறோம்,

கடந்த அரை நூற்றாண்டுக் காலமாகப் பல்லாயிரக்கணக்கான வாசகர்களிடம் தம்முடைய எழுத்துக்களின் பொருள் பொதிந்த உரையாடல்களின்மூலம் முற்போக்குச் சிந்தனைக்கு வளம்கூட்டி வருபவர் திரு. வல்லிக்கண்ணன் என்பதை யாவரும் அறிவர்.

எழுத்துச் செல்வரின் 71ஆவது பிறந்த நாள் நிறைவின் போது இந்நூலை வெளிக்கொணர்வதில் கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் பெருமிதம் அடைகின்றது. நாங்கள் நடத்திவரும் இலக்கிய நண்பர் வட்டத்திற்கு உறுதுணையாக விளங்கிவரும் மூத்த எழுத்தாளர்களுள் முதல்வராகத் திகழ்வதோடு ஆண்டுதோறும் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு சிறப்புரைகள் வழங்கிவரும் திரு. வல்லிக்கண்ணன் அவர்களின் இலக்கியப்பணி மேலும் பல்லாண்டுகாலம் சிறந்தோங்க அவருக்கு எங்கள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் இந்நூலினை உருவாக்கும் பணியில் எங்களே ஈடுபடுத்தி, ஊக்குவித்த முற்போக்கு இலக்கியச்

v
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/7&oldid=966431" இலிருந்து மீள்விக்கப்பட்டது