உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரும்பு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

69 தெய்வம் தந்த தண்டனை சரியான தண்டனை. குமுதாவுக்குக் காலரா கண்டுவிட்டது. வாந்தி பேதிக்கு இலக்கானாள், அந்த வஞ்சகி ! கருப்பு மனம் படைத்த அந்தத் தாசியின் ஆபாச வாழ்க்கை அழிந்தது. என் சாபம் என்ன சாமான்யமானதா? ஏமாந்துபோனவன் கொடுத்த சாபமல்லவா ? கைவிடப்பட்ட வீரனின் கோபாக்கினிக்கு அந்தக் கொலைகாரி இரையாக வேண்டி யதுதானே நியாயம் ! அவள் சாகும்போது நான் அருகில்தான் இருந்தேன் ; என்னை இரண்டுமூன்று முறை பார்த்தாள். அந்த இராட்சசியின் முகத்தில் விழிப்பதே பாபம் என்று கருதி. அந்த இடத்தை விட்டுப் போய்விட்டேன். பொழுது போவதற் குள் குமுதா போய்விட்டாள். நான் என்னைக் கல்யாணம் செய்துகொண்டு ஊர்வலம் போகப் போகிறதாகச் சொல்லி, அதிலே தனக்கு ஆசையிருப்பதாக நடித்த அந்த நாசக்காரி பாடையில் பவனி போனாள். அதைப் பார்த்து நான் மகிழ்ந்தேன். உத்தண்டி மாமா கதறினார். தெருவில் புரண்டார். பாவம், பெற்ற தோஷம் ; புலம்பினார். அந்த விபச்சாரியை இவர் ஏன் பெற்றார் ? குமுதா இறந்துபோன அன்றிரவே நானும் கண்ணம்மாவும் ஒரு திட்டம் தயாரித்தோம். அதை அமுலுக்குக் கொண்டுவர அதுவே ஏற்ற நாளாயிற்று. அந்தத் திட்டந்தான் என்னை இவ் வளவு பெரிய அதிர்ஷ்டக்காரனாக ஆக்கிவிட்டது. இப்பொழுது என்னைப் பாருங்கள், நான் வண்டிக்கார வீரனா? உலகநாதர்: அவளா வண்டிக்கார வீரன்தான் ! என் உப்பைத் தின்றவன்தா ன் இந்த வேலை செய்துவிட்டான். அவனைக் கோபித்துக்கொண்டு பயன் என்ன? எல்லாம் அந்தத் தாடகை செய்தவேலை. கண்ணம்மா என்னைக் கடவுளாகப் பாவிப்பதாகச் சொன்னாளே ! இந்த வேலை செய்துவிட்டாள் ? வீரனுக்கும் விபச்சாரி கண்ணம்மா வுக்கும் எத்தனை நாள் தொடர்பு ? ஒருவேளை நான் குமுதாவைக் காதலித்தது அவளுக்குப் பிடிக்கவில்லையா? அதை என்னிடம் நேரில் சொல்லியிருக்கலாமே ! நான் என்ன உலகத்தில் இல்லாத தவறு செய்துவிட்டேன் ? ஊரார் மெச்ச வாழ்ந்த என் குடும்பத் தின் பரம்பரைப் புகழுக்கு இழுக்கு வந்துவிட்டதே ! கடவுளே ! அடக் ஒருவேளை என்னைவிட வீரன் அழகு என்பது கண்ணம்மாவின் எண்ணமா? விகாரமாயிருப்பதற்காக நான் என்ன செய்ய முடியும்? நான் அழகு இல்லாதவன்தான்; ஒத்துக்கொள்ளு கிறேன். எனக்கு உணர்ச்சியில்லை என்று யாராவது கூற முடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/75&oldid=1699726" இலிருந்து மீள்விக்கப்பட்டது