உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரும்பு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

86 மனுஷன் - எனக்குச் சகோதரன் மாதிரி ! அவன் மனசு வச்சாத் தான் என்னைக் காப்பாத்த முடியும். ஒரு குல ஸ்திரீ அஞ்சுபேர் வரை ஆடவாளிடம் தொடர்பு வச்சிக்கலாம்னு நம்ம பாரதமே சொல்லுதடி! கேளடி என் பிராண நாயகி பத்து வருஷம் பதினைந்து வருஷம்னு என்னை ஜெயில்லே போட்டுட்டா - அப்ப கவலைப்பட்டுக்கிட்டுதானே இருப்பே ? அந்தக் கவலையில்லாமே இரண்டு பேரும் சந்தோஷமாயிருக்க சம்மதம் கொட்டி! அய்யர் கெஞ்சினார். நாராயணியின் மௌனம் நீடித்தது. அய்யருக்குச் சிறிது நம்பிக்கை பிறந்தது. நாராயணி தனக்காகத் தன்னைத் தியாகம் செய்யத் தீர்மானித்துவிட்டதாகக் கருதினார். "அவர் எங்கும் போய்விடவில்லை. அடுத்த அறையிலேதான் இருக்கிறார் ! இப்போதே வரச் சொல்றேண்டி ; மறுபடியும் அவரை விரட்டாதே ! என்று கூறியபடி கிருஷ்ணய்யர் வெளியே ஓடினார். ஏதோ நாராயணி கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள். ஒரு முடிவோடு எழுந்து நின்று நாயுடுவின் வரவை எதிர்நோக்கி னாள். நாயுடுவும் ஆவலோடு உள்ளே நுழைந்தார். நாராயணி அவர் முகத்தை ஏக்கத்தோடு பார்த்தாள். "வந்து விட்டேன் நாராயணி ! நான் எங்கும் போகவில்லை. பக்கத்து அறையிலேதான் இருந்தேன். நீ என் உறுதியைச் சோதிப்பதற்காகவே பிடிவாதம் செய்தாய் என்பதைப் புரிந்து கொண்டேன்' என்று பல்லை இளித்தபடி அவளது பக்கம் வந்து நின்றார் நாயுடு. அவர் பேசி முடிப்பதற்குள்ளாக நாராயணி அவரது கைகளைப் பிடித்துக்கொண்டு "என்னை எப்போதும் வைத்துக் காப்பாற்றுவீர்களா? என்று திடீரெனக் கேட்டுவிட்டுத் தேம்பி அழுதாள். இதுபோன்ற வார்த்தை அவளிடமிருந்து வெளியாகும் என எதிர்பார்க்காத நாயுடுவும் திடுக்கிட்டார். "உண்மையாகவே கேட்கிறேன் என்னை உங்களிடம் ஒப் படைத்தவனை - இன்றுமுதல் புருஷன் என்கிற நிலையிலே வைத்து நான் பூஜிக்கப் போவதில்லை. இனி நீங்கள்தான் எனக்குக் கதி ! நீங்கள்தான் எனக்குப் பதி ! நான் உங்களுக்கு மனைவியாக இருக் கும் பாக்கியம் பெற்றவள் அல்லதான் ! ஆனாலும், உங்கள் அடிமையாக இருக்கிறேன். மீண்டும் அந்தப் பாவியின் கையிலே ஒப்புவிக்காமல் இருப்பதாக எனக்கு வாக்குக் கொடுங்கள். நாராயணியின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் நிறை வேற்றுவேன் என்று சொல்லித் தீரவேண்டிய நேரம் அது !அதனால் நாயுடு தலையசைத்தார்! " 'துண்டுக் கரும்பு கேட்டவனிடம் தோட்டத்தையே எடுத்துக்கொள் என்பது போல் இருக்கிறது நாராயணி, உன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/92&oldid=1699714" இலிருந்து மீள்விக்கப்பட்டது