பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34


இல்லாவிட்டாலும் துன்பம். என்றாலும், நாம் அதைப் பக்குவமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

விளையாடும் போது, பந்துடன் இருந்தால் மோதல். பந்துப் பக்கமே போகாவிட்டால், பார்ப்பவர்களுக்குக் கேலி. அது ஆண்மையற்ற ஒருவராய் அடுத்தவருக்குக் காட்டி விடுமே!

ஆகவே, பந்தை விளையாடவும் வேண்டும். ஆனால் பதைபதைப்பு குழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.

ஆசை நமக்கு வேண்டும். ஆனால் அது நம்மை அவதிக்குள்ளே ஆழ்த்தி விடக் கூடாது.

பொருள் நமக்கு வேண்டும். ஆனால் அதுநம்மை பாடாய் படுத்தி விடக் கூடாது.

நமக்கு எதிரிகள் உண்டு. எதிர்ப்புகள் உண்டு. தாக்கும் சக்திகள் உண்டு. தடுக்கும் சக்திகளும் உண்டு. இவற்றையெல்லாம் மனதில் எண்ணி, நாம் சர்வ ஜாக்ரதையாக விளையாட வேண்டும் என்பது போலவே, உலகில் வாழ வேண்டும் என்பதை உணர்த்தவே, விளையாட்டில் பந்துகள் இடம் பெற்றிருக்கின்றன.

இதை நாம் இப்படியும் கொள்ளலாம்.

உலகிலே நன்மை தீமை என்ற இரண்டு எதிரெதிர் சக்திகள் இருக்கின்றன. நல்ல தெய்வங்கள். கெட்ட சாத்தான்கள் என்ற இரண்டும் இருக்கின்றன, அவைகளுக்கிடையே மனிதர்கள் பந்தாக உதை படுகின்றனர். விளையாடப்படுகின்றனர்.