பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79


இவ்வாறு தங்கள் எதிர்கால வாரிசுகளை வாழ்க்கைக்குத் தயார் செய்தார்கள் சிவப்பிந்தியர்கள். காட்டு வாழ்க்கைக்கு வேட்டையாடுவது முதற் குறிக்கோள். எதிரிகளோடு, சண்டை போடுவது இரண்டாவது ஆற்றல். தற்காப்போடு வாழ்வது மூன்றாம் கலை.

இந்த மூன்று கலைகளிலும் முனைப்புடன் திகழ, இத் தகைய போர் விளையாட்டு அவர்களுக்கு உதவியிருக்கிறது.

ஆகவே, விளையாட்டு என்பது அதில் ஈடுபடுவோரை வாழ்க்கைக்குத் தகுந்த முறையில் தயார் செய்கிறது என்பதையே நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

அதற்காகப் பயிற்சி பெறுபவர்கள் அனைவரும் தவறு செய்யாமலேயே கற்றுக் கொள்வர்களா என்றால் அதுதான் இல்லை.

மனிதப்பண்பினை விளக்க வருகின்ற மேதைகள் இப்படிக்கூறுவார்கள் தவறு செய்வது மனிதப் பண்பு என்று.

தவறு செய்வது சரிதான் என்று அனுமதித்துக் கொண்டே போனால், வாழ்க்கையே தவறிப் போய்விடும் அல்லவா!

தவறு நேர்வது இயற்கை தான். தவறினைத் தவிர்த்து வாழ்வதுதான் மனிதத்தனம். புத்திசாலித்தனமாகும்.

'தவறுகள் இப்படித்தான் நேரும். நாம் மிகவும் எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும்' என்று சுட்டிக் காட்டுவது விளை யாட்டுக்களில் அதிகமாகவே உண்டு.

தெரியாமல் நேர்வது தவறு. தெரிந்து செய்வது குற்றம்" என்ற விளக்கத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.