பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
13. மறைந்து கிடக்கும் மனித சக்தி!

மனிதனுக்குள் மறைந்திருக்கும் மகாசக்தியைப் போல் மற்ற எந்த உயிரினங்களுக்கும் இல்லை.

அவ்வாறு இல்லையென்றால், காட்டிலே மிருகங்களுக்கு ஆதிகாலத்தில் இரையாகிப் போனவர்கள், இன்று அவைகளை ஆட்டிப் படைத்து, அடிமையாக்கி, அரசாண்டு கொண்டி ருப்பார்களா?

வெறும் வாயுடன், விரிந்து கிடக்கும் சமுத்திரம் போன்ற ஒருவயிற்றுடன் மட்டும் ஒரு மனித உயிர் பிறந்துவிடவில்லை. உள்ளுக்குள்ளே ஓராயிரம் சக்திகளை உருவாக்கி, உருட்டித் திரட்டிக் கொண்டுதான், ஜெகத்திலே ஜனித்திருக்கின்றது

ஆனால், அந்த அபாரமான அறிவாற்றலை அற்பத்தனமான சுகத்திற்கும்; அழிந்து போகும் பணத்திற்கும் வீணாக செலவழித்துக் கொண்டு மிருகங்களாய் அலைகின்றார்கள் மனிதர்கள்.

ஒரு மனிதன் தனக்குள்ளே தேங்கிக் கிடக்கும் சக்திகளையும் சாமர்த்தியங்களையும், திறமைகளையும் பெருமைகளையும் தெரிந்து கொள்ள முடிவதில்லை. முயல்வதுமில்லை. விரும்புவதுமில்லை.