178
அறிஞர் அண்ணா நினைவஞ்சலி
அவர்களை மேலே இருக்கிற சக்தி கூர்ந்து கவனிக்கிறது.
ஆட்டம் போட நினைத்தப் பனித்துளி: அறுந்து போகின்ற தறிநூலைப் போல் நைந்து, கொஞ்சம் கொஞ்சமாகச் சாய்கிறது. இதற்காக இரக்கப்படுகிறவர்கள் யாருமில்லைல:
அதோ, தொடுவானத்தில் - அன்புக் கரங்கள் பனித் துளியின் தலையை வருடுகின்றன.
உன்னுடைய பிறப்பு இறப்பில் முடிவதில்லை.
என்னைப்போல நீ, மறுநாள் தோன்றுவாயென்று அதற்கு வாழ்த்துரை வழங்குகின்றது.
எளியவர்களுக்கு, இது போல்தான் அண்ணாவும் வாழ்த்துரை வழங்கினார்.
குகையில் நெளிந்து கொண்டிருக்கும் - இருட்டிலேயே வாழ்க்கை நடத்தும் - சிறிய பூச்சிகளாக மனிதன் வாழுகிறான்.
குகையின் இடுக்கில் பாய்ந்து வரும் சூரிய ஒளியை, அந்த பூச்சிகள் தாங்குகின்ற சக்தியற்றவைகளாக உள்ளன.
ஒளியிழை சிறிதளவு வந்தால் கூட பூச்சிகள் ஓடி ஒளிகின்றன.
மனிதன் இப்படித்தான் இன்று வாழ்கிறான் பாவம்!
நல்ல கருத்துக்களில் ஒர் அணுவைக் கூட அவனால் ஜீரணம் செய்ய முடியவில்லை.
அவனைத் தூக்கி விடுகின்ற சக்தி எங்கிருந்து வரும்? இந்த கேள்வியை, இன்று தத்துவம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
கந்தல் துணி வழியாகப் பிய்த்துக் கொண்டு வெளியே வரும் ஒளியைப்போல் - சிதறியிருக்கும் மேகத்தின் வழியாக, ஒளி தொடுவானிலிருந்து புறப்படுகிறது.
அதனைக் கண்டு எந்த மனிதனும் பயந்து ஒடுவதில்லை. ஆனால், கருத்தைக் கண்டு பயந்து ஒடுகிறான்.