66
அறிஞர் அண்ணா நினைவஞ்சலி
அந்தக் குறைபாட்டில் அழகு பச்சையை, அழியும் மாயை என்று நீ அறைந்தாயல்லவா என்றது? பச்சை!
மேலும் விளக்கம் தேவையோ என்று பச்சை நிறம் பரிவோடு கேட்டது!
ஆம். என்றான் அந்தத் தஞ்சாவூர் பொம்மை! அறிவுப் பசியால் அலைபவனல்லவா அவன்.
பச்சை மேலும் பேசிற்று! தம்பி, பாதை சரியாக இருக்குமானால், அந்தப் பாதையிலே போகின்ற வாகனங்களை, அறிவுறுத்தக் காட்டுகின்ற நிறம் கூட பச்சையல்லவா என்றது?
அது மட்டுமா? கற்களிலே மிகச் சிறந்த கல்லெனக் கூறுவது எது?
மண்ணகம் வாழ்த்துவது - மக்களெலாம் போற்றுவது -எது?
மரகதப் பச்சையன்றோ! அது பற்றிய விளக்கத்தை மேலும் கூறட்டுமா? கேள்!
மாதவி!
குறிஞ்சிப் பாட்டெனும் இலக்கியத்தில் பெரும் புலவர் கபிலர் "பைங்குருக்கத்தி' என்ற ஓர் கொடியைக் குறிப்பிட்டார்.
அக் குறுக்கத்தி, ஒரு கொடி அழகு தவழ, நெடிது நீண்டு வளரும்!
பற்றுக் கொம்பின்றி, அது தானே பற்றிப் படராத பான்மையது!
வேறு கோல் கொண்டு பந்தரிட்டு; அதன் மேல் குருக்கத்தியை ஊன்றி, ஆறு காட்ட வேண்டும்.
அப்போது தான்; அது நன்கு வளரும்! படரும்! தப்பாது தழைக்கும்!
இக் கொடி படரும் பந்தருக்கு;'சங்க காலத்தில் மாதவி'பந்தர், என்ற பெயருமுண்டு!
மாதவிக் கொடியின் நிறம்; கண்ணைக் கவரும் நல்ல பச்சை நிறமுடையது தம்பி!