உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 காகிதப்‌ பூ

160 காகிதப்பூ காசுங் இனப்பெருக்கம். ஏப்ரல் - ஜூன் வரை களின் இனப்பெருக்க காலமாகும். காட்டுக்காகம். டிசம்பர் - ஏப்ரல் வரை இந்தியாவிலும், மார்ச்-மே வரை வட இந்தியாவிலும் இனப்பெருக்கம் செய் கிறது. அடைகாக்கும் பறவைகள் தட்டையான கூடுகளை நிலத்திலிருந்து 15 மீட்டர் உயரத்தில் மரக்கிளைகளில் கட்டுகின்றன. இமாமலையில், 5500 மீட்டர் உயரத்திலும் காக்கைக் கூடுகள் காணப் பட்டன. உயிரிகளின் மயிர், தென்னை நார், பஞ்சு, குச்சி போன்றவற்றை ஒன்று சேர்த்து வட்டவடி வத்தில் குழிவான கூட்டை அவை கட்டுகின்றன. ஆணும்,பெண்ணும் சேர்ந்தே கூடு கட்டுகின்றன. அடைகாத்தலும் இவ்வாறே நிகழ்கிறது. காகம் ஏமாறும்போது குயில், அதனு டைய கூட்டில் முட்டையிட்டு விடும். காகத்தின் முட்டைகள் குயிலின் முட்டைகளைவிடச் சிறியவை. அடைகாக்கும் காகத் துக்கு அந்த வேற்றுமை புலப்படுவதில்லை. ஏறத் தாழ 13 குயிலின் முட்டைகள் கூட ஒரு காகத்தின் கூட்டில் இருக்கும். ரேவன் கூடு கட்டுவது மிகவும் விந்தையானது. சுற்றுப்புறச் சூழ்நிலையின் வெப்பத்திற்குத் தக்க வாறு வளரும் குஞ்சுகளுக்குத் தேவையான வெப்பத் தைப் பெறும் முறையில் அது கூடு கட்டும்.இளங் காக்கைகளுக்குத் தேவையான நீர் கொடுத்தும், செரித்த உணவைத் தந்தும் அவற்றைத் தூய்மையாக வளர்க்கும். பெண் காக்கை இளம் காக்கைகளைக் குளிக்கச் செய்வதுடன், தன் இறக்கைகளால் அவற் றின் ஈரத்தை உலர்த்தவும் செய்யும். நாற்பது நாளுக்குப் பின்னர் குஞ்சுகள் பறந்து செல்கின்றன. க.மு.நடராஜன் காகிதப் பூ இது அந்தி மந்தாரை குடும்பத்தைச் சேர்ந்த Gur@au வில்லா (bougainvilla) என்னும் ஒரு பேரினமாகும். இதில் ஏறத்தாழ பன்னிரண்டு சிற்றி னங்கள் அடங்கும். இவை தென் அமெரிக்காவைத் (பிரேசில் ) தாயகமாகக் கொண்டவை. குறுஞ்செடி களாகவோ, தடித்த கொடிகளாகப் பலவித ஆதாரங் களைப் பற்றிக் கொண்டு வளரும் செடியினங் களாகவோ காணப்படுகின்றன. லைகள் தனியிலைகளாகக் காம்புடன் காணப் படுகின்றன. மாற்றிலை அடுக்கம் கொண்டவை. முட்டை, நீள்முட்டை அல்லது வேல் வடிவமுள் ளவை. பொதுவாக இலைகள் முழுமையானவையாக இருக்கும். மலர்கள் சிறியவை. பூவடிச் செதில்களால் மறைக்கப்பட்டவை. இச்செடியின் பூவடிச் செதில் கள் சிறப்பானவை. இவை வெளிர் சிவப்பு, கருஞ் சிவப்பு, ஆரஞ்சு, ஊதா, பழுப்பு, வெள்ளை ஆகிய பல்வேறு வண்ணங்கள் கொண்டிருக்கும். இவை அல்லி வட்ட இதழ்களை ஒத்து எடுப்பாகவும் எழிலாகவும் இருக்கும். இப்பூவடிச் செதில்கள் காகிதத்தைப் போன்ற தன்மையுள்ளவை. எளிதில் வாடாதவை. எனவே இவை காகிதப் பூச்செடிகள் எனப்படுகின்றன. பல்வேறு வண்ணமுள்ள எழில்மிக்க பூவடிச் செதில்கள் மலர்களைச் சுற்றிக் கொத்துக் கொத் தாகக் காணப்படும். இவை வளர்க்கப்படும் தோட் டங்கள், பூங்காக்கள், நந்தவனங்கள் எழிலுடன் மனம் கவரும் விதத்தில் உள்ளன. தோட்டங்களில் பாத்திகளின் ஓரம், வேலி, வளைவு, கூரை இவற்றின் மீது வளர்ப்பதற்கு இவை ஏற்றவையாக உள்ளன. பெரிய மரங்களின் கீழே இதன் தண்டுத் துண்டை ஊன்றி வளர்த்தால், அம்மரங்களைப் பற்றி வளரும். செடிகளின் இலைக் கோணங்களில் கோண மொட்டுடன் கூடுதலாக ஒரு மொட்டும் காணப்படு கிறது.கோண மொட்டுகளிலிருந்து கிளைகள் உண்டா கின்றன. கூடுதல் மொட்டுகள் முள்களாக மாறு கின்றன. இம்முள்களைப் பற்றுங் கொக்கிகளாகக் கொண்டு இச்செடி படர்ந்து வளர்கிறது. பூவடிச் செதில்களின் வண்ணமும் அமைப்பும் அவற்றிற்கு ஈடு செய்யும் அளவில் அமைந்துள்ளன. மூன்று பூவடிச் செதில்கள், ஒரு மலர்த்தொகுப்பைச் சார்ந் துள்ளன. மலர்களின் காம்புகள் பூவடிச் செதில்களில் லை மைய நரம்புடன் இணைந்துள்ளன. மலர்கள் ஓர் அடுக்கு இதழ்கள் கொண்டவை. இவ்விதழ்கள் இணைந்து குழாய் வடிவமாக உள்ளன. மகரந்தங்கள் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ளவை. இணையாதவை : சூற்பை மேல் மட்ட மானது. வளர்ப்பு முறை. இச்செடிகள் உறைபனி இல்லாத இடங்களிலேயே நன்கு வளரும். முன்பு குறிப்பாக, போகெய்ன் வில்லா ஸ்பெக்டாபிலிஸ் (B.Specto- philis).போ. க்ளேப்ரா (B.Glabra) ஆகிய சிற்றினங் கள் பெருமளவில் வளர்க்கப்பட்டன. போ. ட்ரால்லி என்னும் சிற்றினமும் தற்போது பெருவாரியாக வளர்க்கப்படுகிறது. பாதி அல்லது நன்கு முதிர்ந்த தண்டின் துண்டுகளைத் தொட்டிகளில் நட்டு இச் செடியை வளர்க்கலாம். கோடைக் காலத்தில் இவற்றை நிலத்தில் வளரச் செய்யலாம். அடுத்த வசந்தத்தில் இச்செடிகள் பூக்கத் தொடங்கும். செடி கள் வளரும்போது அவற்றின் முளைகள், மொட்டு களை வெட்டலாம். வெட்டுகளையும், காயங்களை யும் இச்செடி நன்கு தாங்கிக் கொள்ளும் தன்மை யுடையது. காகிதப்பூச்செடியின் குறிப்பிடத்தக்க வகைகள் வெண்பனி என்னும் வகை போ. க்ளேப்ரா சிற்றினத்தைச் சேர்ந்தது. பூவடிச் செதில்கள் சற்றுச்