காப்புறை உலோகம் 327
பின்னர் உடலின் வளம் குன்றாமல் இருக்க, புரதம், மாவு, கொழுப்பு ஆகிய சத்துப் பொருள்கள் நிறைந்த வகையில் உணவுப் பொருள்கள், பழம். கீரை, பால், இறைச்சி, மோர் போன்றவை அமைய வேண்டும். ஏனெனில் புரதம், காயம் ஆற்றும் முக்கிய பொருளாகும்; வைட்டமின் C புண்ணை இணைத்துப் பிணைக்கும் நுண்நார்களை மிகுதியாக உண்டு பண்ணுகிறது. வைட்டமின் A புண்திசுக்களை நன்கு வளரச் செய்கிறது. வைட்டமின் B புண் ஆறும் செல் மண்டலச் செயலில் வளமும் வளர்ச்சியும் கொடுக்கிறது. இவற்றையுணர்ந்து ஆவன செய்வது நோயாளிக்கு நலம் பயக்கும். செந்தூய்மை முறையைக் வகை கடைப்பிடிப்பதன் மூலம் புண் அமுகல் தடுக்கப்படுகிறது. எனினும், தோலின் பள்ளம், சிறுநீர், மலம், தொண்டை, மூக்கு, வாய்ப்பகுதி, சுழிவேற்றச் சுரப்பி, கோழை இவற்றில் தொற்று நோய்க் கிருமிகள் கண்ணுக்குத் தெரியாமல் உள்ளன. இவற்றால் அறுவைப் புண்ணும் அழுகி ஒழுகத் தொடங்கும். புண் பகுதியில் இரத்தம் மிகுதியாகத் தேங்கிவிடின் அழுகல் விரைவில் தோன்றும். எனவே காயப்பட்ட திசு அடுக்குகள் பிறழாமல் வடிகால் வைத்துத் தையலிட்டு ஒவ்வொரு கட்டத்திலும் செந்தூய்மை முறைகளை மேற்கொள்வ தோடு நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளையும் போதிய அளவில் அவ்வப்போது அளிக்க வேண்டும். இவ்வாறு புண் அழுகாமல் ஆற்றுவது மிகுந்த நன்மையளிக்கும். அறுவை முடிந்து சில நாளில் காயம் ஆறியவுடன் தொடர்புடைய கவனிப்புப் பணிகள் மேற்கொள்ளப் படும். நல்ல இரத்த ஓட்டம் உள்ள பகுதிக்குத் தொடர் கவனிப்பு சில வாரங்களே போதும். சான்றாக, தோல் தொடர்பான கட்டிகள் காயங்கள் இதில் அடங்கும். ஆனால், வயிறு, குடல் ஆகிய உறுப்புகளை, மீண்டும் சீராகப் பணி நடைபெறும் வரை, சில மாதங்கள் கவனிக்க வேண்டும். இரத்த ஓட்டம் குறைவான எலும்பு, நாண், மூட்டைச்சுற்றி இறுக்கும் நாண் (ligament) இவையனைத்தும் சில மாதங்கள் முதல் ஆண்டு வரையான கண்காணிப்பில் பயிற்சி முறைகள், கண்காணிப்பு முறைகள் மேற் கொள்ள வேண்டும். நீண்ட நாளில் ஆறிய தசை வற்றி, வலிவிழந்து விடுவதை மீண்டும் சீராக்கவும், வேலை முறை இயக்கம் நடைபெறவும் நடைப்பயிற்சி அளிக்க வேண்டும். காப்பு விளக்கு } 'வி.நடராஜன் இது பதினெட்டாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப் பட்டது. பெரும்பாலும் நிலக்கரிச் சுரங்கங்களில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது. இதில் காப்புறை, உலோகம் 327 மீத்தேன் என்னும் வளிமத்தை பயன்படுத்துகின்றனர். எரிபொருளாகப் இங்கிலாந்தைச் சார்ந்த சர். ஹம்பிரி டேவி விளன்னி. ஜார்ஜ் ஸ்டீஃபன்சன் போன்றோரால் அமைக்கப்பட்ட முதல் காப்பு விளக்கு (safety lamp) நிலக்கரிச் சுரங்கத்திற்குப் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டது. சுரங்கங்களில் ஒளியைக் கொடுக் கவும் திடீரென்று வரும் வளிமத்தால் தீப்பற்றிக் கொள்ளாமல் இருக்கும் வகையிலும் வடிவமைக் கப்பட்டது. அமெரிக்காவில் கோயில்லர், ஊல்ப் ஆகிய இரண்டு வகைக் காப்பு விளக்குகள் பயன்படுத்தப் பட்டன. சுரங்கப் பாதுகாப்பு ஆலோசகர்களால் பாதுகாப்பானது என இது உறுதி செய்யப்பட்டது. ஓர் உலோகத்தால் உருவாக்கப்பட்ட அடிப்பகுதியில் எரிபொருள் நிரப்பப்பட்டு அதன் மேல் ஒரு திரி பொருத்தப்பட்டு வெளிப்பகுதியில் கண்ணாடியால் உருவாக்கப்பட்ட உருளை வடிவ அமைப்பின்மேல் கம்பியாலான கவசம் பொருத்தப்பட்டிருக்கும். இதை ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிலையாக நிறுத்துவதற்கு ஏற்ற விதத்தில் ஒரு காந்தம் பொருத்தப்பட்டு இருக்கும். இதிலிருந்து வரும் எரிந்த புகை,பற்றிக் கொள்ளும் வெப்ப நிலையைவிடக் குறைந்த வெப்ப நிலையில் கம்பிக் வெளிவரும் வகையில் பொருத்தப்பட்டு இருக்கும். கவசம் விளக்கின் ள்ளே இருக்கும் மீத்தேன் என்னும் வேதி வளிமம் காற்றுடன் கலந்து நன்றாக எரியும். அதில் இருக்கும் திருகைச் சரி செய்து மாற்றும்போது நீல நிறத்தில் விளக்கு எரியும், மீத்தேன் வளிமம் மிகுதியாகும்போது ஒளியின் அளவு கூடும். அப்போது 5% மீத்தேன் பயன்படும். பட்டறிவு உடையவர்கள் 1% மீத்தேன் வளிமத்தைக் கொண்டு விளக்கை எரியவைக்க முடியும். நல்ல காற்று இருக்கும்போது விளக்கு ஒளியுடன் விளங்கும், காற்று குறையும்போது ஒளி மங்கலாக இருக்கும். இவ்விளக்கு எரிவதற்கு ஏறக்குறைய 16% ஆக்சிஜன் காற்றில் இருந்தால் போதும். வை. இலக்குமி நாராயணன் நூலோதி. Baumeister, A. Avallone, Baumeister III, Marks' Standard Hand Book for Mechanical Engineers, Eighth Edition, McGraw-Hill Book Company, 1978. . காப்புறை உலோகம் விலை குறைந்த, உறுதி வாய்ந்த மூல உலோகத் திற்கு (base metal) விலை மிகுந்துள்ள தேவையான வோகத்தின் பண்புகளைப் பெறச் செய்ய உலோகக் உ