கால நிலையியல் 505
துடன் புயல்கள் உருவாகும்போது வேவு விமானங் களை அனுப்பி அவற்றின் போக்கையும், தன்மை களையும் கண்காணிக்கின்றனர். மேல் வளிமண்ட டலத் தில் கதிரியக்கத்தின் அளவுகளைக் கண்டுபிடிக்கவும் வை பயன்படுத்தப்படுகின்றன. உணர் விண்வெளித் தொழில் நுட்பம், கணிணியியல், செய்தித் தொடர்பு கருவிகள், மின்-ஒளி கருவிகள் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத் தின் காரணமாக வானிலையைக் கண்காணிக்கும் கருவிகளும், முறைகளும் பெரிதும் மேம்பட்டுள்ளன. தரையிலிருந்தும் விண்வெளியிலிருந்தும் கருவிகள் சேகரிக்கும் தகவல்களுடன், மரபு முறைகளில் எடுக்கப்படும் அளவீடுகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டு வானிலை முன்னறிவிப்புகள் உருவாக்கப்படுகின்றன. ரேடியோ அலைகளைப் பயன்படுத்தும் ராடார் கண்ணுக்குத் தெரியும் ஒளி அல்லது அகச்சிவப்புக் கதிர், லேசர் கற்றைகளைப் பயன்படுத்துகிற லைடார். ஒலி அலைகளைப் பயன்படுத்துகிற சோடார் ஆகிய கருவிகள் செயலுறு (active) தொலை உணர்வு அமைப்புகள் எனப்படும். அவை கதிர்களை அனுப்பி அக்கதிர்கள் ஏதாவது ஒரு தடையின் மேல் பட்டு மீண்டு வரும்போது பதிவு செய்து தடையின் தொலைவு, அது நகரும் திசை, அதன் வேகம் ஆ ஆகிய வற்றைக் கண்டுபிடிக்கின்றன. இவற்றின் மூலம் முகில்களில் மழைத் துளிகள் உருவாவது, அவை உருவாகும் உயரம், அவற்றின் இயக்க வேகமும் சையும் ஆகியவற்றைப் பல நூறு கிலோ மீட்டர் தொலைவிலிருந்தே கண்டுபிடிக்க முடியும். ராடார்கள் 0.01-10 செண்ட்டிமீட்டர் வரை அலைநீளமுள்ள நுண்ணலைகளைப் பயன்படுத்து கின்றன. லைடார்கள் ஏவும் ஒளிக் கதிர்கள் மிகவும் சிறிய அலைநீளமுள்ளவை. எனவே இவை நுண் துகள்களையும் கண்டுபிடிக்க உதவும். ஆனால் இவை சில கிலோமீட்டர் நெடுக்கத்திற்கே செயல்படக் கூடியவை. இவற்றால் வெப்பநிலை வேறுபாட்டால் காற்றில் ஏற்படும் குழப்பங்களைக்கூடக் கண்டுபிடிக்க முடியும். சோடார்கள் ஒலி அலைகளை வீசும். இவை வெப்பநிலை வேறுபாட்டுக் குழப்ப மண்டலங் களைக் கண்காணிக்க உதவும். இவை தரையை ஒட்டிய வளிமண்டலத்தை ஆராய்வதில் பெருந்திறன் பெற்றுள்ளன. எனவே நகரப் பகுதிகளில் உள்ள வளி மண்டலத்தில் மாசுப் பொருள்கள் கலப்பதை ஆராய் வதற்கு இவை மிகவும் ஏற்றவை. இத்தகைய கருவி கள் தற்போது செய்திகளில் வைத்து அனுப்பப் படுகின்றன. நுண் அலைகளை வீசி அவை பிரதிபலித்து வரும் போது அவற்றின் ஆற்றலையும், அலை வடிவங் களையும் ஆராய்ந்து கடல் அலை உயரங்கள், பனிப் பாறைகளின் வயது,தடிமன், பனிப்பொழிவுகளின் தடிமன், காற்றோட்டங்கள் போன்ற தகவல்களைக் கண்டுபிடிக்க முடிகிறது. செயலற்ற வகைத் (passive) கால நிலையியல் 505 தொலை உணர் கருவிகள் பொதுவாகப் புவியைச் சுற்றி வருகிற செயற்கைக் கோள்களிலும் புவி நிலைப்புச் செயற்கைக் கோள்களிலும் பொருத்தப் படுகின்றன. கண்ணுக்குத் தெரியும் ஒளியின் மூலம் எடுக்கப்பட்ட ஒளிப் படங்கள் நன்கு தெரிந்த செய் மதிப் பதிவுகள் ஆகும். அவை முகில் உருவாக்கங்கள், நீர்ப் பரப்புகள், மலைகள், தாவரப் பரப்பு மாற்றங் கள், பனி மூடிய பரப்புகள் ஆகியவற்றைப் பதிவு செய்கின்றன. கீழ்ச் சிவப்புக் கதிர்களை உணரும் கருவிகள் இரவு, பகல் இரு நேரங்களிலும் படங் களையும். பதிவுகளையும் எடுக்கின்றன. மேகங் களிலும், தரையிலும் பட்டுத் திரும்பிவரும் கீழ்ச் சிவப்புக் கதிர்களிலிருந்து அப்பரப்புகளின் வெப்ப நிலையைக் கண்டுபிடிக்க முடிகிறது. இவ்வாறு வளி மண்டலம், கடல்கள் ஆகியவற்றின் வெப்பநிலைப் பரவீட்டைச் செங்குத்துத் தளத்திலும் கிடைத் தளங்களிலும் கண்டுபிடிக்கலாம். செயற்கைக் கோள்களில் உள்ள பிற செயலற்ற கருவிகள் நீர் ஆவி, கார்பன்டை ஆக்சைடு, ஓசோன். நுண்துகள்கள் ஆகியவற்றை அளவிடுகின்றன. இவை திரட்டுகின்ற கோடிக்கணக்கான தகவல்களைக் கணிப் பொறிகள் பகுப்பாய்வு செய்து மிக விரைவாக வானிலையை மதிப்பிடுகின்றன. செயற்கைக் கோள் கள் உலகளாவிய வகையில் தட்பவெப்பநிலைகள் நடந்துகொள்ளும் விதத்தைக் கண்காணிக்கின்றன. இதுவரை மனிதரால் எட்ட முடியாமல் போனமை யால் வானிலைப் பதிவுகளே செய்யப்பட்டிராத . பகுதிகளைக்கூடச் செய்மதிகளின் உதவியால் கண் காணிக்க முடிகிறது. தரையிலும், விமானங்களிலும், செயற்கைக் கோள்களிலும் பொருத்தப்பட்டுள்ள கருவிகள் புவியை ஒட்டி நிகழ்கிற சிறிய அளவிலான வானிலை மாற்றங்களையும் மிகு நுட்பத்துடன் அள விடுகின்றன. உலக வானிலைக் கண்காணிப்பு அமைப்பின் பதிவு நிலையங்கள் வழக்கமான வானிலைப் பதிவு களைத் தமக்குள் விரைவாகப் பரிமாறிக் கொள் கின்றன. எனினும் இந்தப் பதிவுகள் G தோராய மானவையாகவும். காலத்தாலும், இடத்தாலும் பெருமளவு பிரிக்கப்பட்டவையாகவும் உள்ளன. பதிவு நிலையங்கள் நெருக்கமாக அமைந்திராத காரணத் தால் ஏறத்தாழ 500 கிலோமீட்டர் சதுரத்தைவிடச் சிறிய பகுதிகளில் தோன்றும் வானிலை மாற்றங் களை அவற்றால் சரியாகக் கணிக்க முடிவதில்லை. இப்போதுள்ள கணிப்பொறி முறைகளால் சிறிய புயல் கள், மழைமேக முகப்புகள் போன்ற சிறிய நிகழ்வு களை நுணுக்கமாகக் கணிக்க இயலவில்லை. ஆ ஆகவே பல மணி நேரங்கள் அல்லது சில நாள்கள் என்னும் அளவில் செய்யப்படும் வானிலை முன்னறிவிப்பில் பல தவறுகள் தோன்றுகின்றன.இட்போது 48 மணி நேரம் வரை ஏறக்குறைய சரியாக முன்னறிவிப்புச் செய்ய முடிகிறது.