காற்று மூளை வரைபடம் 589
அட்டவணை 2 காற்று மூளை வரைபடம் 589 உயரம் (அடி) அடர்த்தி (ராத்தல்/கன அடி) உயரம் அடி அடர்த்தி (ராத்தல்/கனஅடி) 0 0.0765 80.000 0.00277 10.000 0.0564 90.000 0.001676 20.000 0.0407 100.000 0.001023 30.000 0.0286 110.000 0.000637 40.000 0.0188 120.000 0.000404 50.000 0.01165 130.000 0.000260 60.000 0.00722 140.000 0.000170 70.000 0.00447 150.000 0.000113 இவ்வுயரத்தைத் தாண்டிச் செல்வதற்கு, பலூனுக் குள் கூடுதலாக வளிமத்தைச் செலுத்தவேண்டும். இதன் காரணமாக அதன் எடை கூடுகிறது. ஒரு சாதாரணநாளில் வெவ்வேறு உயரங்களில் காற்றின் அடர்த்தியை அட்டவணை 2இல் காணலாம். பலூன்கள் உயரும்போது. நிலையான மிதப்பு விசையைப்பெற,அதில் அடைக்கப்படும் வளிம அடர்த்தியையும் அதன் காரணமாகப் பலூனின் கொள்ளளவையும் மாற்றி அமைக்க வேண்டும். இத னால் மிகு உயரப் பலூன்களில் அதன் பெரும உயரத்தை அடையும் முன்பு குறைவான அளவிற்கே வளிமங்கள் நிரப்பப்படுகின்றன. தி.அ.சங்கர் நூலோதி, Arnold M. Kuethe, Chuen-yen chow, Foundation of Aerodynamics - Bases of Aerodynamic Design, Third Edition, John Wiley & Sons, New York, 1976. காற்று மூளை வரைபடம் மூளை, தண்டுவட டம் ஆகிய பகுதிகளைப் படமெடுத்து நோய் அறிய முயலும்போது மருத்துவர்கள பயன் படுத்தும் பல முறைகளில் காற்று மூளை வரைபடம் அல்லது மூளை வளிவரைபடம் ( air encephalography or pneumo encephalography) என்பதும் ஒன்றாகும். 1912இல் லக்கெட் (Luckett) எனும் மருத்துவர் தலையில் அடிபட்ட நோயாளி ஒருவரின் தலையுள் காற்று இருப்பதைக் கண்டறிந்து மருத்துவ உலகுக்கு அறிவித்தார். வயிற்றுப் பகுதியில் குத்துக்காயம் விழும்போது குடல் கிழிபட்டு அதனின்று வெளிப்படும் காற்று வயிற்றுப் பகுதியையும் நெஞ்சுப் பகுதியையும் பிரிக்கும் உதர விதானத்தில் (diaphragm) சேரும் நிலையை எக்ஸ்கதிர்ப் படங்களில் 1918இல் எதிர் பாராத விதமாகக் கண்ட வால்டர் டாண்டி என்பார் இதே அடிப்படையில் மூளைப் பகுதியிலும் காற்றைச் செலுத்தி மூளைப் படங்கள் எடுக்க முயன்றதன் விளைவே காற்று மூளை வரைபட முறையாகும். இம்முறையில் அடிப்படையாகச் சில உண்மைகள் உள்ளன. எக்ஸ்கதிர்ப் படங்களில் காற்று கருநிற மாகத் தெரியும் என்பது இதில் முதலாவதாகும். எனவே குறிப்பிட்ட மூளைப் பகுதிகளை ஒட்டிக் காற்றைச் செலுத்தி நிறுத்தினால் அப்பகுதிகள் எக்ஸ் கதிர்ப் படங்களில் கருநிறமாகவோ, கருங்கோடு களால் வரையை ற செய்யப்பட்டோ தெளிவாகத் தெரியும். உடலினுள் செலுத்தப் பெறும் காற்று விரை வில் இரத்தத்தில் சேர்ந்து வெளியேறிவிடும். எனவே க்காற்று. மூளைப் பகுதிகளில் நெடுங்காலம் நிலைத் திருந்து துன்பம் தர வாய்ப்பு இல்லை. ஆனால், இரத்தக் குழாய்களிலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருக்கும் இடங்களில் காற்றுச் செலுத்தப் பட்டால், அக்காற்று இரத்தக் குழாய்களுள் பெரு மளவில் விரைந்து புகுந்து மூளை போன்ற முக்கிய மான பகுதிகளுக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தைத் தடைசெய்து பெருந்தீங்கு விளைவிக்கலாம். சூழலின் வெப்பநிலைக்குச் சூடேறும்போது காற்று அளவில் விரியும். எனவே. ஆய்வு செய்யும் மருத்துவர்கள் இவ்வுண்மையைக் கருத்திற் கொண்டு தக்க அளவான காற்றையே பயன்படுத்த வேண்டும். மேலும் மூளையுள் செலுத்தப்படும் காற்று இவ்வாறு