768 கீரி
768 கீரி கரி பாலூட்டிகள் வகுப்பில் னுண்ண வரிசையில் வைவர்ரிடே (viverridae) என்னும் குடும் பத்தைச் சார்ந்தது. ஆஃப்ரிக்காவில் எத்தியோப்பியப் பகுதிகளிலும், கீழ்த்திசை நாடுகளிலும் சுமார் இருபது இனங்களாகக் கீரிகள் பரந்து காணப்படுகின்றன. ஹெர்பெஸ்டஸ் இக்நியுமன் என்னும் இனத்தைச் சார்ந்தவை மட்டும் ஐரோப்பாவில் வாழ்கின்றன. கீரியின் தோல் வெளிர் சாம்பல் நிறம் உடையது. இது நடக்கும்போது பாதம் முழுதும் தரையில் படியும். ஐந்து கால் விரல்களில் முதல் விரல் சிறியதாக இருக்கும். வால் நீளமானது. பின்கால்களின் கணுக் காலிலும் பாதங்களிலும் மயிரில்லை. ஃபாரோவின் பை என்று தவறுதலாக எகிப் தியர்கள் கீரிக்குப் பெயர் வைத்துள்ளனர். பார்வைக்கு இது பூனை போல் இருக்கும். எலித்தொல்லையைப் போக்கக் கரும்புக் கொல்லைகளில் கீரிகளை வளர்ப்ப துண்டு. கீரி எவ்வித அச்சமும் இன்றி மிகக் கொடிய நச்சுப்பாம்பையும் எதிர்த்துத் தாக்கவல்லது என்றும்; பாம்புக்கடியால் கீரியின் உயிருக்கு எவ்வித ஊறும் விளைவதில்லை என்றும், பாம்போடு சண்டையிட்ட பிறகு ஏதோ ஒரு செடியின் இலையை நச்சு முறிவுக் காகத் தின்னும் என்றும் மேற்கு இந்திய தீவுகளில் வாழும் பழங்குடி மக்கள் நம்புகின்றனர். ஹெர்ப்பெஸ்டஸ் ஆல்பிகேன்டா என்னும் இனத்தைச் சேர்ந்த கீரிக்கு வெள்ளை நிற வாலுண்டு. கீரி வகைகள் அனைத்தும் ஒரே துணைக் குடும்பத் தைச் சேர்ந்தவை என்றாலும், கால் விரல்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, சைனிக்டிஸ் என்னும் பேரினத்தில், முன் கால்களில் ஐந்தும் பின்கால்களில் நான்குமாக விரல்கள் உள்ளன. மற்றொரு பேரினமாக டியேகேல் கீரியின் எல்லாக் கால்களிலும் நான்கு விரல்களே உள்ளன. இதன் வால் மயிரடர்ந்து பாதங்கள் மயிரால் மூடப்பட்டிருக்கும். இவை எண்ணிக்கையில் குறைந்து அரிதாசுத் தென்படுவதால் இவற்றின் தன்மைகள் பற்றி மிகுதியாகத் தெரியவில்லை.. ஆனால் தீரிகள் மிகக் கொடிய பாம்புகளையும் கால்ல வல்லவை என்பது உண்மை. கீரிக் குடும்பத்தைச் சேர்ந்த சூரிகேட்டா என்னும் மேற்கு ஆஃப்ரிக்கப் பேரினத்தில் ஒரே இனமான சூரி கேட்டாடெட்ராடாக்டைலா மட்டுமே அடங்கி யுள்ளது. இது மீர்கேட் என்று அங்குள்ள மக்களால் குறிப்பிடப்படுகிறது. ஒரு காலில் நான்கு விரல்கள்; பாதத்திலும் விரல்களிலும் மயிர் இல்லை. இவை பொதுவாகக் குகைகளிலும் பாறை இடுக்கு களிலும் கிறது. மீர்கேட்களின் வாழ்கின்றன. கீரி வளைகளில் வாழ் வளைகள் தரையின் கீழ் . ஒரு ஒன்றரை மீட்டர் ஆழமும் பன்னிரண்டு மீட்டர் நீளமும் கொண்டவை. இவை. பூச்சி. பல்லி, தேள். முட்டை போன்றவற்றை உண்ணுகின்றன. இவை இறந்த விலங்குகளை உண்பதில்லை. சில வேளைகளில் பாம்பும் மீர்கேட்களுக்கு இரையா கின்றது. கீரிகள் பெரிய நல்ல பாம்புகளையும் கூட்டமாகச் சென்று தாக்கித் தின்றுவிடும். பாம்பைச் சுற்றிப் பல கீரிகள் வளையவரும். அவற்றில் ஒன்று திடீரென பாம்பின் தலையைக் குறிவைத்துப் பாய்ந்து கடித்துக் குதறிவிடும். பிறகு ஏனைய கீரிகள் பாம்பின் உடலைப் பங்கு போட்டு உண்ணும்..மீர்கேட் கீரிகள் குடும்பம் குடும்பமாகக் கூட்டு வாழ்க்கையை நடத்துகின்றன. ஒரு கூட்டத்தில் ஒரு கீரி, பகைவரைப் பற்றித் தகவல் தரும். அதன் தகவலைப் பின் பற்றியே அந்தத் தொகுதியைச் சேர்ந்த பிற கீரிகள் அனைத்தும் செயலாற்றுகின்றன. ஆணும் பெண்ணும் ணைந்தபிறகு மூன்று வாரத்தில் பெண் கீரி இரண்டு முதல் ஐந்து குட்டிகளை ஈனும், குட்டிகள் எண்ணிக் கையில் மிகுதியானால் அத்தொகுதியைச் சேர்ந்த னைய பெண் கீரிகள் குட்டிகளுக்குப் பால் கொடுத்துக் காப்பாற்றுகின்றன. கீரிப்புரண்டான் . மாடசுவாமி இதன் வேறு பெயர்கள் கீரிப்பூண்டு, கீரிச்செடி என்பன. ஓஃபியோரைசா மாங்கோஸ் (Ophiorthita mongos) என்பது இதன் தாவரவியல் பெயராகும். இச்செடி ரூபியேசி குடும்பத்தைச் சேர்ந்தது. கீரி, பாம்புகளுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் பாம்பைக் கடித்துக் கொன்ற கீரி தன் நஞ்சைப் போக்கிக் கொள்வதற்கு இச்செடியைக் கொறிப்பதால் கீரிப் புரண்டாள் என்னும் பெயர் வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இச்செடியை இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் காடு மற்றும் மலைப்பகுதிகளில் காணலாம். காசி மலைப்பகுதியிலும், மேற்குத் தொடர்ச்சி மலையில் வயநாடு முதல் ஆனைமலை வரையிலும், திருவாங்கூர், திருநெல்வேலிப் பகுதி களிலும் அந்தமான், நிக்கோபார் தீவுகளிலும் காணலாம். செடி. இச்செடி 45-60 செ.மீ. உயரம் வளரும். லைகள் முட்டை - ஈட்டி வடிவமானவை. முனை குறுகியிருக்கும். இதில் உண்டாகும் பூக்கள் வெள்ளை நிறமானவை. மஞ்சரி சைம்களாகும். சுனிகள் தட்டையாகத் தோல் போன்றிருக்கும். விதைகள் எண்ணற்றனவாகக் கோண வடிவத்துடன் ளம் பழுப்பு நிறமாக இருக்கும். பொருளாதாரப் பயன்கள். இதன் வேர் மிகவும் சுசக்கும் என்றாலும் உடலுக்கு உரந்தரும் தன்மையது. வேர்ச்சாற்றில் பீட்டா - ஸ்டீரால் உள்ளது. லை