202 குறை. இறக்கைப் பூச்சிகள்
202 குறை. இறக்கைப் பூச்சிகள் ஆஃப்ரிக்கா, தெற்கு ஆசிய நாடுகளிலும் காணப்படு கின்றன. மூட்டைப்பூச்சிகள் மனிதரிடையே நோய் களைப் பரப்புகின்றன என்பதற்குக் குறிப்பிட்டுக் கூறத்தக்க சான்று ஏதுமில்லை. ஆனால் வை சில நோயைப் பரப்புகின்றன எனச் சில ஆய்வாளர்கள் ஐயுறுகின்றனர். ஒரு இரவில் சுறுசுறுப்பாகச் செயல்படும் இப்பூச்சிகள் பகலில் சுவர் மரச்சாமான் போன்றவற்றின் இடுக்கு களில் தங்குகின்றன. மூட்டைப் பூச்சிகளின் முன்னிறக் கைகள் குறைவுற்றுச் செதில்கள் போலவுள்ளன : பின்னிறக்கைகள் முற்றிலும் மறைந்துவிட்டன. இவற்றின் உடலிலுள்ள நாற்றச் சுரப்பிகளால் சுரக்கப்படும் ஒரு சுரப்புக் காரணமாக வை கெடு நாற்றத்தை வெளிப்படுத்துகின்றன. பருத்திச் செடிகளில் வாழும் சிவப்புப் பருத்திச் சாறுவுறிஞ்சி யாகிய டிஸ்டெர்க்கஸ் சிங்குலேட்டஸ் (Dysdercus. cingulatus) நெற்பயிரில் காணப்படும் நாவாய்ப்பூச்சி யான லெப்டோக்கோரிஸ் அக்கூட்டா (Leptocoris acuta), பரங்கிச்செடிகளில் வாழும் அஸ்பாங்கோப்பஸ் ஜேனஸ் (Aspongopus janus) போன்றவை தாவரங் களுக்குக் கேடுவிளைவிக்கும் சாறுவுறிஞ்சிகளாகும். நீர்த்தேள்கள் எனப்படும் லேக்கோட்ரஃபெஸ், ரானட்ரர் ஆகியனவும், பெரிய நீர்லாழ் சாறுவுறுஞ்சி யாகிய பெலோஸ்டோமா. நீர்மேல் நடக்கும் பூச்சி யாகிய ஜெர்ரிஸ், படகுப் பூச்சியாகிய கோரிக்சா முதுகு நீச்சல் பூச்சியாகிய நோட்டோநெக்டா ஆகியனவும் நீர்வாழ் சாறுவுறிஞ்சிகளுக்கு எடுத்துக் காட்டுகளாகும், ஹாலோபேட்டஸ் என்னும் ஒரே கடல்வாழ் பூச்சியினம் இவ்வகையைச் சேர்ந்தது. . லேக்கோட்ரஃபெஸ், ரானட்ரா ஆகியவற்றின் முன்கால்கள் தேளின் பற்றுறுப்புகளைப் போலவுள்ள மையால், இவை நீர்த்தேள்கள் எனப்படுகின்றன. நீர்த்தேள்களின் வயிற்றுப் பின்முனையிலிருந்து. இரண்டு நீட்சிகள் பின்னோக்கி நீட்டிக்கொண்டிருக் கின்றன; இவற்றின் உள்பக்கத்தில் நீள்வரிப்பள்ளங் சுன் உள்ளன. இவை இரண்டும் இணைந்துள்ள போது குழாய் போன்ற ஓர் அமைப்பு உருவாகிறது. இக்குழாய் வழியாகக் காற்று வயிற்றின் பின்முனை யிலுள்ள ஓர் இணைச் சுவாசத் துளைகளை அடைந்து மூச்சுக் குழாய்களுக்குள் செல்கிறது. அறுகால் பூச்சி கள் நீரில் வாழ்ந்தாலும் காற்றிலுள்ள ஆக்சிஜனையே சுவாசிக்கின்றன. லேக்கோட்ரஃபெசின் உடல் தட்டையான நீள் வட்டமாகவும், ரானட்ராவின் உடல் குறுகிய உருளை யாகவும் உள்ளன. பெலோஸ்டோமாவின் தட்டை யான, நீள்வட்டமான உடல் ஏறக்குறைய 10 செ.மீ நீளம் உள்ளது. முன்கால்கள் பற்றுறுப்பாகச் செயல் படும் வகையிலும், நடுக்கால்களும் பின்கால்களும் நீரில் நீந்துவதற்கேற்பத் தட்டையாகவும் அமைந் துள்ளன. இது பிறவுயிரிகளைப் பிடித்து அவற்றின் களால் உடல் நீர்மத்தை உறிஞ்சி உண்ணும் பழக்கம் உடை யது. பிற சிறுபூச்சிகள், நத்தைகள், சிறு மீன்கள், தவளைகள் ஆகியன இப்பூச்சிகளுக்கு உணவாகின் றன. இரவில், குளத்திற்கு அருகிலுள்ள மின்விளக்கு ஈர்க்கப்பட்டு நீரை விட்டுப் பறந்து சென்று நிலத்தை அடைகின்றன. நிலத்தின் வழியாக ஒரு குளத்திலிருந்து அருகிலுள்ள வேறு குளங்களுக்குச் சல்கின்றன. நீர்மேல் நடக்கும் பூச்சியாகிய ஜெர்ரிஸ், நீண்ட மெல்லிய கால்கள் பெற்றுள்ளது. நீண்ட உருண்ட உடலின் மேற்பரப்பு முழுதும் நுண் மயிர் உள்ளது. அதனால் நீர் உடல் தோலை அடைவ தில்லை. சுவாசத்துளைகளும் நீரால் மூடப்படுவ தில்லை. நீரின் மேற்பரப்பில் வேகமாக நகர்ந்து செல்லும் இப்பூச்சிகள், நீரில் வாழும் மற்றப் பூச்சி களையும், நீர்ப்பரப்பிற்கு அருகில் பறக்கும் பூச்சி களையும் பிடித்து அவற்றின் உடற்சாற்றை உறிஞ்சு கின்றன. படகுப் பூச்சியான கோரிக்சா, துடுப்புகளால் தள்ளப்பட்டதுபோல உந்தி நீரில் விரைந்து நீந்திச் செல்லும் தன்மையுடையது. முதுகு நீச்சல் பூச்சி மேற்பக்கம் கீழ்நோக்கியவாறு நீரில் மல்லாந்து கிடக்கும் நிலையில் நீந்திச் செல்கிறது. றக் ஒருதன்மையிறக்கையுடையன. ஒருதன்மை கையுடைய உள்வரிசையைச் சேர்ந்த பூச்சிகள் உட் காரும்போது அவற்றின் இருபக்கத்து இறக்கைகளும் வயிற்றின் மேல் பக்கத்தில் ஒரு கூரை போல அமை கின்றன. இப்பூச்சிகளின் இறக்கைகள் முழுதும் ஜவ்வு போல உள்ளன. இந்த உள்வரிசையைச் சேர்ந்த பல பூச்சிகள் இறக்கையற்றுள்ளன. நெல், கரும்பு, சோளம், பருத்தி, மா, பலா போன்ற பொருளாதார முக்கியத்துவமுடைய பல தாவரங்களுக்கு இந்த உள் வரிசைப் பூச்சிகளால் அழிவு உண்டாகிறது. சோலைகளிலும் காடுகளிலும் 'கிரீச்-கிரீச்' என ஒலி எழுப்பும் சிக்காடா (cicada) எனப்படும் சிள் வண்டு இந்த உள்வரிசையைச் சேர்ந்த பூச்சியாகும். ஒருதன்மை இறக்கையுடைய பூச்சிகளுள்சின்வண்டுகள் மிகப்பெரியவை, நீண்டகாலம் வாழ்பவை. சிள்வண் கள் உண்மையான வண்டுகள் அல்ல; உண்மையான வண்டுகளின் முதல் இறக்கைகள் தடித்த மூடி இறக் கைகளாக மாறியிருக்கும். 13 முதல் 17 ஆண்டுகள் வரை வாழும் இப்பூச்சிகளின் வாழ்நாளின் பெரும் பகுதி இளஉயிரியாசு நிலத்திற்கு அடியில் கழிகிறது. ஆண் பூச்சியின் மார்பின் கீழ்ப்பக்கத்தில் பின் கால் களுக்கு அருகில் ஓர் இணை ஒலி எழுப்பும் உறுப்புகள் உள்ளன. இந்த உறுப்பு ஒவ்வொன்றும் ஒரு நுண்குழி போல உள்ளது: குழியினுள் விறைப்பான ஒரு ஜவ்வு உள்ளது. இந்த ஜவ்வு தசைகளால் அசைக்கப்படும் போது ஒலி உண்டாகிறது. பெண் சிள்வண்டுகளில் இத்தகைய ஒலி எழுப்பும் உறுப்புகள் இல்லை. இலைத் தத்துக்கிளிகள் இந்த உள் வரிசையைச் சேர்ந்த சிக்காடெல்லிடே குடும்பத்தில் வகைப் படுத்தப்பட்டுள்ளன. மரம், புதர்ச்செடி, புல்வெளி