உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 குறை எடை

204 குறை எடை . இயல்புக்கு மாறான மிகையான விளைவுகளால் துன்புறுவர். இத்தகைய விளைவுகளைக் கூருணர்வு மிக்க வினைகள் (hypersensitive reaction) எனலாம். எடுத்துக்காட்டாக, பெனிசிலின் மருந்தைச் செலுத் தும்போது தோல் தடிப்பு, அரிப்பு, ஆஸ்த்துமா இரத்த ஓட்டச்சீர்குலைவு முதலிய விளைவுகளைச் சுமார் 10 சதவீதத்தினரிடம் ஏற்படுகிறது. இது போன்றே காசநோயில் பயன்படும் ஸ்ட்ரெப்டோ மைசின் என்னும் மருந்தும் ஒவ்வாமை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்; இம்மருந்து, காசநோய் மருத்து வத்தில் பெரும் பங்கு வகிப்பதால், சிலசமயங்களில், ஒருவர் இம்மருந்துக்கு ஒவ்வாமை உடையவராக இருந்தும், அவர்களிடத்தில் இம்மருந்தைச் செலுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது. இம்மருந்தைக் கொண்டு குறை உணர் திறனை ஏற்படுத்திக் காச நோய் மருத்துவத்தில் தொடர்ந்து கொடுத்து வர முடியும். மிகக் குறை உணர் திறனை ஏற்படுத்துதல். குறைந்த அளவு மருந்தை முதலில் செலுத்தியபின் ஒருசில மணி நேர இடைவெளியில் மருந்தின் அள வைச் சிறிது சிறிதாக உயர்த்தி, வழக்கமான அளவு மருந்தை, உடல் ஏற்கும் வரை செலுத்த வேண்டும். இச்சமயங்களில் உடனடி ஒவ்வாமை நிலைகுலைவு (anaphylactic shock) தோன்றி மரணம் ஏற்படும் தீமை உள்ளமையால் இம்முறை பரவலாகப் படுத்தப்படவில்லை. பயன் மேற்கூறிய முறையின் மூலம், குறை உணர் திறன் எவ்வாறு ஏற்படுகிறது என்று சரியாகத் தெரிய வில்லை. ஆயினும் இம்முறையால் தடுக்கும் தன்மை கொண்ட எதிர்ப்பொருள்கள் உடலில் தோன்றுவ தாகவும், இவை ஒவ்வாமை உண்டாக்கக்கூடிய பொருள்களுடன் சேர்வதன் மூலம் ஒவ்வாமை வினைகள் ஏற்படாமல் தடுப்பதாகவும் கருதப்படு கிறது. மார்ஃபின் போன்ற மருந்துகளுக்கு அடிமையாக உள்ளவர்களுக்குச் சராசரி மனிதர்களுக்குத் தேவைப் படும் அளவில் மார்ஃபிள் வகை மருந்துகளைத் தரும்போது, அவர்கள் இவ்வகை மருந்துகளின் இயக்கத்திற்குக் குறை உணர்திறன் கொண்டவர் களாக இருப்பர். மருந்தடிமைப் பழக்கம் உள்ளவர் களிடத்தில், உடலின் திசுக்கள் மருந்துகளுக்குத் தங்களைப் பழக்கப்படுத்திக்கொள்வதன் மூலம், இயக்கத்திற்குத் தேவையான தூண்டல் அளவை உயர்த்திக்கொள்வதால் இத்தகைய குறை உணர்திறன் ஏற்படுகிறது எனக் கருதப்படுகிறது. மு. துளசிமணி தங்கள் . நூலோதி. J. Crossland, Lawis's Pharmacology, 5th Edn., Medical Division of Longman group Ltd.. 1980. குறை எடை ஒவ்வொருவருடைய வயதிற்கும், உயரத்திற்கும் தகுந்தவாறு, குறிப்பிட்ட எடை இருக்க வேண்டும். இந்த எடையைவிடக் குறைவான எடை காணப் படும் நிலையையே குறை எடை (underweight) என்பர். மிகு எடையில் ஏற்படும் மருத்துவ முறைப் பிரச்சினைகளைவிடக் குறை எடையால் ஏற்படும் பிரச்சினைகள் குறைவு. காட்டாக, உடல் பருமன் உடையவர்களுக்கு இதய நோய், இரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. குறை எடை உள்ளவர்களுக்கு உடல் இயங்கத் தேவைப்படும் ஆற்றல் மிகக் குறைவு. இதனால், வர்கள் தொற்று நோய்க்கும் ஆளாகின்றனர். எ.கா: காசநோய். பருவ வயதில் குறை உடலில் சேமித்து வைத்திருக்கக் உள்ளவர்களின் கூடிய ஆற்றல் குறைவு. எடை நோய் ஏற்படும்பொழுதும். மன உளைச்சலின் பொழுதும் உணவருந்த வேண்டும் என்ற எண்ணம் அல்லது பசி ஏற்படுவதில்லை; உணவும் குறைகிறது. அப்பொழுது சதைப் பற்றற்ற உடம்பிலுள்ள திசுக் களிலிருந்து தேவைப்படும் ஆற்றல் எடுக்கப்படுவதால் வளர்ச்சி குறைகிறது. உணவு உடலுக்கு வெப்பத்தை யும் தருகிறது. குறை எடையால் பருவப்பெண்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மாதவிலக்கின்போது துன்பங் களுக்கு உள்ளாகின்றனர். இவர்களுக்குக் குறைமகப் பேறு இயல்பாக நிகழலாம். பிறக்கும் குழந்தையும் குறைந்திருக்கும். உள்ளவர் களுக்கு நோய் ஏற்படும் பொழுதும், அறுவை ம மருத்து வத்திற்குப் பிறகும் முழுமையாகக் குணமடைய நீண்ட நாளாகும். எடை குறை எடை குறை எடைக்கான காரணங்கள். வேலைச்சுமை, ஆற்றல் அளிக்கும் உணவுப் பொருள்கள் கொள்ளாமை, ஊட்டச் சத்துடைய உணவுண்டால் உடலைச் பருமனாகி விடலாம் என்னும் அச்சம், . சீராக வைத்துக் கொள்ள வேண்டுமென்ற இக்காலப் போக்கு, குடல்புண், காசநோய், புற்றுநோய், வயிற்று நோய், தைராய்டின் சுரப்பு போன்ற வற்றாலும் எடைக்குறைவு ஏற்படக்கூடும். மிகைச் குறை எடைக்குரிய காரணத்தை மருத்துவர் களிடம் அறிந்து தக்க மருத்துவம் செய்துகொள் வதே நன்று. நெடு நாளாகக் குறை எடை உள்ள வர்கள், மிகு ஆற்றல் அளிக்கும் உணவு, புரதம் மிகுந்த உணவுப் பொருள், இறைச்சி, மீன், முட்டை, பட்டாணி,பால், உளுந்து போன்றவற்றை உண்ண வேண்டும்.