உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 கூவைக் கிழங்கு

294 கூவைக் கிழங்கு கிழங்கு தேவைப்படுகிறது. நட்ட 3 அல்லது 4 மாத காலத்திற்கு நிலத்தில் தோன்றும் களைச் செடிகளை அகற்ற வேண்டும். அவ்வப்போது தோன்றும் பூக் களையும் கூவைக்கிழங்குச் செடியிலிருந்து நீக்கிவிட வேண்டும். பாசு களைக்கட்டுப்பாட்டிற்காக முளைப்பிற்கு முன் ஹக்டேருக்கு 1.7 கி.கி வீதம் மோனூரான் அல்லது டையூரான் போன்ற களைக்கொல்லிகளில் ஏதாவதொன்றைப் பயன்படுத்தலாம். மட்டநிலத் தண்டின் துண்டுகளை நட்ட 14ஆம் வாரத்தில் ஹெக்டேருக்கு 72 கிலோ தழைச்சத்து, 45 கிலோ மணிச்சத்து, 126 கிலோ சாம்பல் சத்து வேண்டும். முதிர்ச்சியுற்ற செடியில் இலைகள் வாடி உதிர்ந்து விடுகின்றன. அறுவடை தாமத மானால் ஸ்டார்ச் சத்துக் குறைந்து சர்க்கரைச்சத்து மிகுந்து விடும். செடிகளைச் சுற்றியுள்ள மண்ணைத் தோண்டிக் கிழங்குகள் கைகளால் அறுவடை செய்யப்படுகின்றன. மாவு தயாரிப்பதற்கு அனுப்பும் வரை நிலத்தி லேயே கிழங்குகளை விட்டு வைப்பர். அறுவடை செய்த கிழங்குகளில், பனானா வகையாயின் இரண்டு நாளிலும், கிரியோல் வகையாயின் 7 நாளிலும் மாவு தயாரித்து விட வேண்டும். இல்லையேல் கிழங்குகள் அழுகிக் கெட்டு விடும். ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பில் சராசரியாக 12,5 டன் விளைச்சல் கிட்டும். வளமான நிலங்களில் கட்டுக்கோப்பான சாகுபடி முறைகளைக் கையாண்டால் 31 டன் வரை விளைச்சல் பெறு வதற்கு வாய்ப்புண்டு. வகைகள். கூவைக்கிழங்கில் இருபதுக்கு மேற் பட்ட வகைகள் இருந்தபோதும் கிரியோல், பனானா என்னும் இரண்டு முக்கிய வகைகளே பெருமளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றுள் கிரியோவில் கிழங்குகள் மெலிந்தும், நீளமாக நன்கு பரவியும், நிலத்தில் ஆழமாகச் சென்றும் காணப்படுகின்றன. வளமில்லாத நிலத்தில் வளர்க்கப்பட்டால் இந்த வகை, சிறுத்த பயனில்லாத கிழங்குகளையே தரு கிறது. விவசாயிகள் இவ்வகையையே பெரும் பரப்பில் சாகுபடி செய்கின்றனர். பனானா என்னும் வகையில் கிழங்குகள் குட்டையாகவும் தடித்தும் தரை மட்டத் திற்கருகில் கொத்தாகவும் உண்டாகின்றன. கிழங்கில் நார் குறைந்தே இருக்கும். கிழங்குகளை எந்திரத்தின் உதவியால் எளிதாக அறுவடை செய்யலாம். இதில் தரம் குறைந்த கிழங்குகள் குறைவாகவே காணப்படு கின்றன. இந்த வகை உயர் விளைச்சல் தரும். இவ்விரு வகைகளின் கிழங்குகளும் வெள்ளை நிறத் திலேயே இருக்கின்றன. டாமினக்கா என்னுமிடத்தில் கிழங்குகள் சிவப்பாக உள்ளன. பூச்சி நோய்கள். ரைசோக்டோனியா சொலானி பெல்லிக்குலோரியா ஃபிலமெண்டோசா என்னும் பூசணங்கள் இலைக்கருகல் நோய்களை உண்டாக்கு கின்றன. கூவைக்கிழங்கின் பயிரில் ரோசெல்லினியா பியூனோடஸ் என்னும் நோயும் கேலோபோடெஸ் எத்லியஸ் என்னும் இலைச் சுருட்டுப்புழுவும் அழிவை உண்டாக்குகின்றன. இலைச்சுருட்டுப் புழுவினால் இலைகள் விழுந்து கிழங்கு விளைச்சல் குறையும். கிழங்கு அழுகல் நோய், வடிகால் வசதியில்லாத பெரு மழை பெய்யும் இடங்களில் உண்டாகும். சில சமயங்களில் ஏசியா மொனுஸ்டி ஓர்சைஸ், நியோகுர்ட்டில்லா ஹெக்சாடேக்டைலா, டெரிஸ்கஸ் விசினஸ் என்னும் பூச்சிகளும் பிரேசில் மற்றும் வெனிசுலாப் பகுதிகளில் அழிவுண்டாக்கு கின்றன. டெல்டாமெத்ரின் என்னும் பூச்சிக்கொல்லி இலைப் புழுக்களை நன்கு கட்டுப்படுத்தும். ஸ்கேப் பொருளாதாரப் பயன்கள். கூவைக் கிழங்கிலிருந்து ஸ்டார்ச் மாவு தயாரிக்கலாம். இம்மாவு எனிதில் செரிக்கும். எனவே இம்மாவு குழந்தைகள் உடல் நலமில்லாதவர் ஆகியோருக்குரிய உணவாகிறது. பிஸ்கட்டுகளிலும் இம்மாவு சேர்க்கப்படுகிறது. கிழங்கை உரித்துச் செதுக்கி நீரில் துழாவுவதால் மாவு வேறாகி நீரின் அடியில் படியும். அதை நீரில் பலமுறை வடித்து மாலைப் பிரித்து எடுப்பர். துணியில் வடிகட்டுவதும் வழக்கம். ஆனால் எந்தி ரத்தின் உதவியால் தேவைப்படும் அளவிற்கு மாவைத் தயாரிக்கலாம். தூய்மையான ஆரோரூட் ஸ்டார்ச் வெள்ளையாகவும், அதிலுள்ள ஈரம் 13%க்கு மிகா மலும், கார அமில நிலை 4,5-7.0 க்குள்ளும் இருத் தவ் வேண்டும். ஏனைய மாவுகளை விட இம்மாவுக்கு குழைவுத் தன்மை மிகுதி. இம்மாவை நீரில் கரைத்து அடுப்பி விட்டுக் கொதிக்கவைத்து வயிற்றுப் போக்கிற்கு, குறிப்பாகக் குழந்தைகளுக்கு தருவது வழக்கம். இம்மாவு முகத்துக்குப் பூசும் மணந்தரும் தூள்களில் கலக்கப்படுகிறது. சிலவகை ஒட்டும் பொருள்களிலும் ம்மாவைச் சேர்ப்பதுண்டு. ஏனைய ஸ்டார்ச் மாவைவிட அதிக விலையுடையதாகையால் இதைக் குறைவாகவே பயன்படுத்துகின்றனர். ஸ்டார்ச் மாவு எடுத்த பின்பு எஞ்சியுள்ள நார் நிறைந்த சக்கை கால்நடைகளுக்குத் தீவனமாகும். இச் சக்கையை நிலத்திற்கு எருவாகவும் இடலாம். மர வள்ளிக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு போலக் கூவைக் கிழங்கைப் பச்சையாகவோ அவித்தோ உண்ண முடிவதில்லை. இதில் நார்ச்சத்து மிகுந்து உள்ளதே இதற்குக் காரணம். புத்தம் புதிய கிழங்கை நசுக்கி நச்சு அம்புகள் உண்டாக்கிய காயங்களுக்கு வைத்துக் கட்டுவது மேற்கிந்தியர்களின் வழக்கமாகும். மேலும் இக்கிழங்குகளைக் காயம், சீழ்ப்புண் முதலிய வற்றைக் குணமாக்குவதற்கும் பயன்படுத்தி கின்றனர். கிழங்கு மாவு பேரியக்கஞ்சித் தயாரிப் பிலும் விரைவில் சிதைய வேண்டிய மருந்துகளிலும் பயன்படுகிறது. வரு கோ. அர்ச்சுணன்