உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 குவாடெலெட்‌, அடால்‌ஃப்‌

12 குவாடெலெட், அடால்ஃப் குவாடெலெட், அடால்ஃப் லாம்பர்ட் அடால்ஃப் ஜேக்ஸ் குவாடெலெட் (Lam bert Adolph Jacques Quatelet) பெல்ஜிய நாட்டில் உள்ள கென்ட்டில் 1796 ஆம் ஆண்டு நகரவை அதிகாரி ஒருவரின் மகனாகப் பிறந்தார். பிரஸ்ஸல் அதினியம் என்னும் கழகத்தில் 1820 இல் கணிதப் பேராசிரியராக நியமனம் பெற்றார். பின்னர் பாரிஸ் நகருக்குச் செயல்முறை வானியல் பற்றிக் சுற்கச் சென்றார், அங்கு கணித அறிஞர் லாப்லாசிடம் நிகழ்தகவுக் கொள்கையைத் தெரிந்து அதில் பயிற்சி யும் பெற்றார். பெல்ஜியம் திரும்பியபின் வானியல் வேலையில் தொடர்ந்து இருந்தபோதும் புள்ளியியல் சார்ந்த சிக்கல்களை அறிவதில் ஆர்வம் கொண்டார். இத்துறையில் நிகழ்தகவுக் கொள்கை மிகவும் பயன் பட்டது. ஹாலந்து நாட்டில் புள்ளியியல் தகவல் நிறுவனம் ஏற்பட்ட பின் 1826 இல் இவர் அதன் தாளாளர் ஆனார். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 1824 இல் (census) நடைபெறத் திட்டமிட்டார். 1830 இல் நடந்த புரட்சிக்குப்பின் பெல்ஜிய அரசு நிர்வாகத் தில் புள்ளி விவர மேற்பார்வையாளரானார். 1841 இல் புள்ளி விவர மையம் நிறுவப்பட்டபோது அதில் பெரும்பங்கேற்றுத் தலைவராக இறுதி வரை செயலாற்றினார். மக்கள் தொகைக் கணக்கெடுப் பின்போது எழுந்த நடைமுறைகளிலிருந்து சில விதி களை உருவாக்கினார். அவர் உருவாக்கிய இவ்விதி கள் இன்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பயன்படுகின்றன. மக்கள் தாகைக் கணக்கெடுப்பு, பொருளாதார வளங்கள் கணக்கெடுப்புப் போன்ற பருப்பொருள்களின் புள்ளியியல் ஆய்வு முறைகளை நெறியியல் புள்ளி விவரங்களுக்கும் (moral statistics) விரிவாக்கினார். இதில் மனவியல் காரணிகள், நெறிசார் காரணிகள் பற்றிய விவரங்கள் அடங்கும். பன்னாட்டுப் புள்ளி விவரங்களை அனைவரும் தெரிந்து ஒப்பு நோக்கிப் படிக்க ஒரே சீரான விதி முறைகளைப் பன்னாட்டு நிறுவனங்களும் பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இவர் முயற்சியால் முதல் பன்னாட்டுப் புள்ளியியல் பேரவை (international statistical பிரஸ்ஸல்சில் 1853 இல் கூடியது. congress) அறிமுறைப் புள்ளியலில் இவருடைய சராசரி மனிதன் எனும் கருத்து முக்கியமானதாகும். மனி தனின் பண்புகளை ஆய்ந்தறியும்போது பண்புகளின் பரவல்களில் இயல்நிலைப்பரவல் (normal distribur- tion) மூலம் ஆய்ந்ததில் சராசரி மனிதன் என்னும் கருத்துத் தோன்றியது. சமூகத்தில் மனிதன் பற்றிய தத்துவ முறையில் சாரமான கோட்பாடாக இக் கருத்து உருவாயிற்று. தத்துவ அறிஞர்களும், புள்ளி யலாளர்களும் இக்கருத்தை எதிர்த்து விமர்சனம் செய்யவும் நேர்ந்தது. எனினும் இக்கருத்து எழு வதற்கு அடிப்படை இல்லாமல் இல்லை. மனித உடல் (statue) அளவுகளின் பரவல்களை ஆய்ந்ததன் விளைவாகச் சராசரி மனிதன் எனும் கருத்து அவரிடம் உருப்பெற்றது. எதிர்பாராது நேரும் பிழைகளின் நிகழ்தகவுப் பரவலே, மனித உடல் அளவுகளின் பரவலாக விளையும் என்பது கிடைத் தது. எனவே, சராசரி மனிதனை அடிப்படை மாதிரி யாகக் (basic type) கொள்ளலாம் எனக் கூறினார். தட்பவெப்பம், சூழ்நிலை, பழக்கவழக்கங்கள், சமூக அமைப்புகள் மாறினாலும், இயற்கையில் மனித ரிடையே நிலைத்த சில மாதிரிகள் அமைகின்ற தன என அவர் நம்பினார். இம் மாதிரிகளைப் பிரித்தறி யும் அறிவியலைச் சமூக இயற்பியல் (social physics) எனக் குறிப்பிட்டார். இவ்வாறு நெறிசார்ந்த - அறி வார்ந்த பொருளாக மனிதனைக் கருதிப் படிக்கும் போது மனித குலத்தை ஒட்டு மொத்தமாக நோக்கிக் கிடைக்கும் விவரங்கள் உண்மையில் இயற்பியல் பண்பு வாய்ந்தவையே கருத வேண்டும். மேலும், மக்கள் தொகை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகரிக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு தனிமனிதனின் விருப்பமும், உரிமை உணர்வும் மறைந்து, சமூகம் நிலைபெற்று நீடிக்க உதவியான பொதுவான பண்பு கள் விஞ்சி நிலைபெற்று நிற்கும். இவ்வாறாக மனிதனின் சராசரி ஆயுட்காலம், பிறக்கும்போது ஆண் பெண் விகிதம், ஆண்டுதோறும் நிகழும் திரு மணங்களின் எண்ணிக்கை, தற்கொலை, குற்றம் இவை பற்றிய விவரங்கள் இயற்பியல் போன்றே உறுதி வாய்ந்த விதிகளுக்குட்பட்டவை எனவும் கூறி னார். எதிரான விமரிசனங்களை எதிர் நோக்க வேண்டி இருந்தாலும் அவரது சராசரி மனிதக் கருத்து, செல்வாக்குப் பெற்று விளங்கிற்று. சமூகவிய லிலும் தீர்மானமான உறுதிபெற்ற விதிகள் உண்டு என்ற கருத்து உருப்பெற்றது. குவாடர்னரிக் காலம் எனக் -பி.ஞானசுந்தரம் . ருவத்திலும் வலிமையிலும் மிகப்பெரியனவாக ளங்கிய பல ஊர்வனவற்றின் அழிவுக்குப் பின் நில வாழ்விகளின் வரலாற்றில் புதியதொரு திருப்பம் குவாடனரிக்காலத்தில் தான் ஏற்பட்டது. இக் காலத்தில் தான் பாலூட்டிகளின் படிமலர்ச்சி சிறப் புற்றிருந்தது: மனித இனம் தோன்றியதும் இக் காலத்தில் தான், குவாடர்னரிக்காலத்தைத் தொல்லு பிரியல் வல்லுநர் பிளீஸ்ட்டோசின் என்றொரு கால அளவாகவும் தற்காலம் அல்லது ஹோலோசின் என்று மற்றொரு கால அளவாகவும் பிரித்துள்ளனர். ஐரோப்பாவின் கடல் தொல் படிவங்களில் காணப் படும் முதுகுநாண் அற்ற விலங்குகளின் படிமலர்ச்சி நிலையை அடிப்படையாகக் கொண்டே குவாடர்னரிக் காலம் இவ்வாறு இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.