உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெமுர்கி 313

கெமுர்கி 313 தத்துவயியல், இறையியல் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்ற பின்னர் கிரேஸ் லூதரன் பள்ளியில் ஆசிரிய ராசுப் பணியேற்றார். பிராட்ஸ்டண்டு பிரிவைச் சார்ந்த இவர், கத்தோலிக்கராக மாற வேண்டிய நிபந்தனைக்கு விருப்பமில்லாமல் இப்பள்ளியை விட்டு உடனே விலகினார். கலிலியோ, டைகோ பிராஹி ஆகிய வானீயியல் வவ் லுநர்கள் காலத்தில் வாழ்ந்த கெட்ளர், பிராஹி யுடன் இணைந்து ஆய்வுகளில் உதவி புரிந்தார். இருவரும் சேர்ந்து வானியல் அட்டவணை (Rudoi- phine table) ஒன்றைத் தயாரித்தனர். ஆனால் இப்பணி முடியுமுன்னரே பிராஹி இறந்து விட்டார். கெப்ளரின் திறனையறிந்து, ரோமாபுரிப் பேரரசர் இவரைப் பிராஹியின் வாரிசாசு அரசுக் கணித வல்லு நராக நியமித்தார். 1624 இல் வானியல் அட்ட வணையை முடித்து 1627 வெளியிட்டார். தொடக்க காலத்தில் சூரியன் புவியை வட்டப் பாதையில் சுற்றுகிறது எனக் கருதினர். ஆனால் கெப்ளர், தாம் மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து கோபர்னிகசின் கோட்பாடு உண்மையானது என்று வெளிப்படையாக ஒத்துக்கொண்டு, சூரியனை ஒரு குவிமையத்தில் (focus) கொண்டு, பிற கோள்கள், நீள்வட்டப் பாதைகளில் சூரியனைச் சுற்றி வரு கின்றன என்று கண்டுபிடித்தார். இதனையொட்டி இவர் கண்டுபிடித்த மூன்று விதிகள் வானியலில் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இறுதிக் காலத்தில் ஸ்வேபியன் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசியராகப் பணியாற்றி 1630 ஆம் ஆண்டு நவம்பர்த் திங்களில் மறைந்தார். பங்கஜம் கணேசன் கெழுர்கி இது வேளாண்மையுடன் விளைபொருள்களையும் கழிவுப் களைக் பொருள்களையும் பயன்படுத்தும் முறை காணல் ஆகும். குறிப்பாக, வேளாண் பொருள்களை உணவுவகை நீங்கிய பயன்களில் ஈடு படுத்தலாம். கெமுர்கி (chemurgy) என்பது ஒரு கருத்தேயன்றி, அறிவியலில் துறையன்று. வேதியியல், உயிரிய வேதியியல், இயற்பியல், நுண் ணுயிரியல், தாவரவியல், பொறியியல் எனப் பல துறைகளின் ஒருங்கிணைப்பு இக்கருத்தைச் செயல் படுத்துவதற்குத் தேவைப்படும். வில்லியம்ஹேல் என்பார் கிரேக்க, எகிப்திய மொழிச் சொற்களிலிருந்து செயல்படும் வேதியியல் எனும் பொருள்படுமாறு கெழுர்கி என்ற சொல்லை உருவாக்கினார். இக்கருத்திவடங்கும் செயல் முறை களாவன : நன்கு அறியப்பட்ட பயிர் வகைகளுக்கும் வேளாண்மைக்கும் தொடர்பற்ற உணவுவகை யில்லாத பயன்களைக் கண்டறிதல். உணவு வகை யல்லாத பயன்களைக் கொண்ட புதிய பயிர் வகை களைக் காணல், வேளாண்மைக் கழிவுகளைத் திறம் படப் பயன்படுத்துதல். சோனத பயிர் வகையுடன் விளைபொருள்களைப் பல துறைகளில் செவ்வனே ஈடுபடுத்தும் முறைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு: மக்காச்சோளம். மக்காச் சோளத்தின் உண்ணத் தகுதியற்ற பகுதியைக் கச்சாப் பொருளாகக் கொண்டு ஒரு தொழிலையே உருவாக் கலாம். சைலோஸ் எனும் சர்க்கரைப் பொருளும். நெகிழித் (plastic) தயாரிப்பின் மூலப்பொருள்களுன் ஒன்றான ஃபர்ஃபூரல் எனும் பொருளும் தட்டையிலிருந்து தயாரிக்கப்படும். சோளக்கழிவுநீர், பென்சிலின் போன்ற எதிர் உயிரிகள் (antibiotics தயாரிப்பில் பயனாகிறது. இத்தானியத்தின் கூழ்று பகுதி ஆல்கஹாலில் கரையக்கூடியது. இக்கரைசலி லிருந்து சீன் எனும் புரதப்பொருள் பிரிக்கப்படுகிறது. இப்புரதத்தைக் குழைவணத் தயாரிப்பிலும், இழைத் தயாரிப்பிலும் பயன்படுத்தலாம். மரங்களில் இடம்பெறும் லிக்னின் எனும் வேதிப் பொருள் சோளவகையிலும் இடம் பெறுவதால், விக்னனைக் கொண்டு வனிலீன் எனும் நறுமணம் பொருள் தயாரிக்கலாம். சோளம் மட்டுமன்றி, கோதுமை, ஆல்ஃபால்ஃபா எனும் புல்வகை. பருத்திக்கொட்டை, பட்டாணி போன்றவற்றிலிருந்தும் நெகிழிகள் தயாரிக்கலாம். வேளாண்மைப் பொருள்களைத் தொழிலகக் கச்சாப் பொருள்களாகப் பயன்படுத்துவதால், புவியின் பரப்பில் அருகி வரும் கனிய வளத்தைப் பாதுகாத்து, இயன்றவரை மீண்டும் உருவாக்கவல்ல வளத்தைப் பயன்படுத்தி, ஆற்றல் வீணாதலைத் தடுக்கலாம். மே.ரா.பாலசுப்பிரமணியன் நூலோதி. Robert D. Brown, Introduciion to Chemical Analysis, International Student Edition. McGraw-Hill International Book Company, New York, 1983.