கெய்லி, ஆர்தர்
மருத்துவத் துறையில் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்புகளைத் துலக்குவதற்குக் கெய்கர் எண்ணி உதவும். உடலுக்குள் செலுத்தப்படுகிற கதிரி யக்க ஐசோடோப் பயணம் செய்யும் பாதை, சென்ற டைந்த உறுப்பு, உடலில் பரவியுள்ள விதம் ஆகிய கெய்கர் எண்ணியால் கண்ட றியலாம். அளவில் கெய்கர் 61 cm can! வற்றைக் சரியான கதிர்வீச்சுகள் பாய்வதையும் கண்காணிக்கிறது. காணாமல் போகிற அபாயகரமான கதிரியக்கப் பொருள்களைத் தேடிக் காணவும் இது உதவும். கனிமப் படிவுகளில் கதிரியக்கப் பொருள்கள் கலந்திருக்கும் போதுபுவியியல் துறையினர் அவற்றைக் கண்டுபிடிக்க, கெய்கர் எண்ணிகளைப் பயன்படுத்து கின்றனர். அறிவியல் ஆய்வுகளுக்குப் பலவித கெய்கர் எண்ணிகள் உதவுகின்றன. கதிரியக்கத் தடங்காட்டி களைப் பயன்படுத்துகிற வேதியியல் ஆய்வுகளுக்குக் கெய்கர் எண்ணி ஓர் இன்றியமையாத கருவியாகும். இருக்கிற பொருளின் அளவு, தனிமங்கள் மாறுத வடையும்போது விளைகிற கதிரியக்கப் பொருள்களின் வாழ்நாள் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க இவை உதவும். கதிரியக்க வளிமம் நிரம்பிய செய்கர் எண்ணிகளும் வழக்கத்தில் உள்ளன. காஸ்மிக் கதிர் ஆய்வுகளில் கெய்கர் எண்ணிகள் பயன்படுகின்றன. ஆனால் துகள் முடுக்கிகள் தொடர்புள்ள ஆய்வுகளில் இயை உதவா. அயனியாக்கக் கதிர்கள் அளவுக்கு மீறி அதிகமாக வரும்போது கெய்கர் எண்ணிகள் செயலற்றுப் போகும். கே.என். ராமச்சந்திரன் P.Albrecht, நூலோதி: W.Landee, C. Davis, Electronits Designer's fand Book, Second Edition. Mc-Graw Hill Book Company, New York, 1977. கெய்லி, ஆர்தர் இங்கிலாந்திலுள்ள சர்ரேயிலுள்ள ரிச்மண்ட் என்னு மிடத்தில் 1821 ஆம் ஆண்டு ஆகஸ்டுத் திங்கள் 16ஆம் நாள் ஆர்தர் கெய்லி பிறந்தார். இவர் தந்தையார் சோவியத் ஒன்றியக் குடியரசில் வணிகம் செய்து வந்தார். பிளாக்ஹீத்தில் உள்ள தனியார் பள்ளியிலும், லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியிலும் கல்வி பயின் றார். இளம் பருவத்திலேயே சிறந்த கணித மேதை யைப் போல் திறமைமிக்கவராகத் திகழ்ந்தார். மிகப் பெரிய எண் கணக்குகளையும் எளிதாகச் செய்வதைத் தம் பொழுதுபோக்காகக் கொண்டிருந்தார். பள்ளி ஆசிரியர்கள் கெய்லியைப் பிறவி மேதையெனக் கருதி னர். கெய்லி தொடக்கத்தில் கணிதம் பயில்வதை அவர் தந்தையார் விரும்பவில்லை. எனினும் பள்ளி கெய்லி, ஆர்தர் 317 கணிதம் முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க அவர் பயில அனுமதிக்கப்பட்டார். 17 ஆம் வயதில் கேம் பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்தார். கணிதத்தில் மிக்க ஆர்வம் உடையவராக இருந்த போதும் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை விரும்பிர் படித்தார். ஆங்கிலத்துடன் பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி முதலிய மொழிகளையும் அறிந்திருந் தார். கேம்பிரிட்ஜில் மூன்றாம் ஆண்டு இறுதியில் இவரது தேர்வுத்தாளைத்திருத்திய ஆசிரியர் இவரை முதல் மாணாக்கனைவிடச் சிறந்தவர் எனக் குறிப் பெழுதினார். தொடர்ந்து நடந்த மிகக் கடுமை யான தேர்வில் முதலாவதாக வெற்றிபெற்று ஸ்மித் பரிசினைப் பெற்றார். லெக்ராஞ்சு வாப்லாஸ் போன்ற கணித மேதைகளின் ஆராய்ச்சிகளை ஆர்வத்துடன் படித்தார். கெய்லீ தம் முதல் ஆய்வுக் கட்டுரையைச் கேம் பிரிட்ஜ் கணித இதழில் 1841 இல் வெளியிட்டார். பட்டம் பெற்றவுடன் முதலாம் ஆண்டில் 8 ஆய்வுக் கட்டுரைகளையும், இரண்டாம் ஆண்டு 4 ஆய்வுக் கட்டுரைகளையும். மூன்றாம் ஆண்டில் 13 ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டார். 7- பரிமாண வடிவக் கணிதம் (n-dimensional geometry) இயற் கணிதத்தின் மாற்றமிலீக் கொள்கை (theory of algebraic invariants) நீள்வட்டச்சார்பு (elliptic fune tion) முதலியவற்றை மேலும் பயிலத் தொடங்கி னார். 1846 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜை விட்டு லிங்கன் இன் (Linculn's inn) என்னுமிடத்தில் வழக்கறிஞரா வதற்கான முயற்சியை மேற்கொண்டார். மூன்று ஆண்டுகளுக்குப்பின் 1849 இல் வழக்கறிஞரானார். வழக்கறிஞர் தொழிலிலும் மிகத் திறமையுடன் திகழ்ந்தார். சட்டத்துறை தன் கணித வளர்ச்சிக்கு டையூறாக இருப்பதை உணர்ந்து உடனே வழக்