உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேரல்‌, அலெக்சிஸ்‌ 347

மறைந்துபோன மெல்லுடலிகளெல்லாம் மெல்லு டலிப் படிமலர்ச்சியின்போது தோன்றி போனவையாகும். அற்றுப் ஒட்டிக்கொண்டு பெயர்ந்து கடற்படுகையில் நிலையாக வாழ்ந்தவை, தன்னிச்சையாக இடம் வாழ்ந்தவை என இரண்டு வகையாக முள்தோலிகள் (cchinoderms) இருந்தன. கடல் அல்லிகள் எனப் படும் கிரைனாய்டுகளில் ஒரு முனை குறுகியும் மறு முனை கைநீட்சிகளுடனும் காணப்பட்டன. கை நீட்சி களற்ற வட்டமான சில்லுப் போன்ற அல்லது கோள வடிலமுள்ள எட்ரியோஸ்ட்ராய்டுகள் தொடர்ந்து வாழ் வழியின்றிக் கேம்பிரியக் காலத்திலேயே அற்றுப் போயின. முள்தோலிகள் கொந்தளிப்புள்ள கடல்களில் வாழ்ந்தமையாலும் அவற்றின் சட்டகம் முழுமையாக ணையாத சிறு சிறு துண்டுகளாக இருந்தமையாலும் அவற்றின் புதைபடிவங்கள் முழுமையாகக் காணப்படவில்லை. டிரைலோபைட்டுகளுக்கு அடுத்தபடியாகக் கைக் காலிகள் (brachiopods) பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்தன. அக்ரோட்ரெட்டிடுகளின் ஓடுகளில் ஒன்று தட்டையாகவும் ஏனையது கூம்பு வடிவாகவும் இருந் தன அன்று காணப்பட்ட விலங்குகள் இன்று வரை மாற்றங்கள் எதுவுமின்றி வாழ்கின்றன. பஞ்சு யிரிகள் கேம்பிரியக் காலத்தில் மிகுதியாக இருந்தன என்று ஊகித்தறிய முடிகிறது. ஆனால் அவற்றின் புதைப்படிவங்கள் கிடைக்கவில்லை. சுண்ணாம்புச் சட்டகமுள்ள கூம்புவடிவ அல்லது நீள் உருளை வடிவமுடைய பலளவுயிரிகள் ஓரக்கடல் பகுதிகளில் வாழ்ந்தன. கேம்பிரியக் சுடற்படுகை மணவில் நேராக அல்லது வளைவாக அமைந்த குழாய்களில் பல்சுணைப் புழுக்கள் வாழ்ந்தன என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. கிராப்டோலைட்டுகள் அக்காலத்தில் கூட்டுயிரி களாக வாழ்ந்த குறை தண்டுடைய விலங்குகளாகும். பிரிட்டிஷ் கொலம்பியாவின் மலைப்பகுதியில் பர்கஸ் கணவாயிலுள்ள கேம்பிரியக் களிப்பாறை களில் அக்காலத்தில் வாழ்ந்த மென்மையான உடலுடைய விலங்குகளின் பதிவுகள் 1910 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டன. கடற்பாசிகளே அக்காலத்தில் காணப்பட்ட குறிப்பிட்டுக் கூறத்தக்க தாவரங்களாகும். நீலப்பச்சைப் பாசி,கடற்பரப்பில் பெருந்தகடுகள் போலப் பரவிக்கிடந்தது. இவை சுண்ணாம்புப் பொருளை உட்கவர்ந்து அக்காலத்திய சுண்ணாம்புப் படிவுகளாக மாற்றம் பெற்றன. வட கேம்பிரியக் காலத்தில் புலிப்புரப்பு இரண்டு பெரும் கண்டங்களாக இருந்தது. இன்றைய அமெரிக்கா, ஐரோப்பா, சைபீரியா, இந்தோசீனா ஆகிய கண்டங்கள் நெருங்கி அமைந்த நிலப்பரப்பாக இருந்தன. இவற்றிற்கு அருகில் இன்றைய தென் அமெரிக்காவும் இருந்தது. இவை யாவும் சேர்ந்த கேரல், அலெக்சிஸ் 347 பகுதிக்குப் பேன்ஜியா பெருங்கண்டம் என்று பெயர். ஆஃப்ரிக்கா, இந்தியாவின் தென்பகுதி, மடகாஸ்கர், அண்டார்க்டிகா, ஆஸ்திரேலியா. நியுகினியா ஆகியவை மிக நெருக்கமாக இருந்த பகுதிக்கு கோண்டுவானாப் பெருங்கண்டம் என்று பெயர். புவி நடுக்கோட்டுப்பகுதியில் தேத்தியன் என்னும் ஆழமற்ற பெரும் கடல் இருந்தது. தொல்லுயிரி ஊழியின் முதற்பாதிக் காலத்தில் கால நிலை சற்று அதிக வெப்பமுடையதாக இருந்தது. ந. முத்துக்குமாரசாமி Vertebrate நூலோதி. W.N. Mefarland et al. Life, MacMillan Publishing Co. New york, 1979. கே - மெசான் துகள்கள் காண்க: மெசான்கள் கேரல், அலெக்சிஸ் இவர் 1873ஆம் ஆண்டு வியான் (Lyon) என்ற இடத்தில் பிறந்தார். அலெக்சிஸ் கேரல் (Alexis cartel) 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மருத்து வத்தில் மிகவும் புகழ் மிக்க வல்லுநர். பிரான்சில் மருத்துவம் பயின்று ஆரிசன் குழியைப் பற்றியும், மாற்று உறுப்புக்கள் பொருத்துவது பற்றியும் ஆய்வு செய்து 1912இல் நோபெல் பரிசு பெற்றார். லெக்சிஸ் கேரலும் பரோவும் இணைந்து திசுக் களைக் கண்ணாடிக் குடுவைகளில் வளர்த்துக் காட்டி மருத்துவத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியதோடு, உடல் உறுப்பையே உடலுக்கு வெளியில் வளர் த்