374 கேள்திறன் கூர்மை
374 கேள்திறன் கூர்மை வீக்கம் போன்றவற்றையும் ஏற்படுத்தித் தற்காலிக மாகக் கேள் திறனைக் குறைக்கலாம். செவிப்பறையை அடுத்துள்ள நடுச்செவியில் மூன்று சின்னஞ்சிறிய செவியெலும்புகள் உள்ளன. இவை ஒன்றுக்கொன்று மூட்டுகள் மூலம் இணைக்கப் பட்டு. இரு சிறிய தசைகளால் இயக்கப்படுகின்றன. வெளியில் காற்று மண்டலத்தில் எழுப்பப்படும் ஒலியலைகளை உட்செவியின் நீர் மண்டலத்திற் கேற்ப பதப்படுத்த வேண்டும். அவ்வேலையை நடுச்செவி செய்கிறது. மீண்டும் மீண்டும் செவிப் பறைக்கோ, நடுச்செவிக்கோ சேதம் ஏற்பட்டுத் தொற்று உண்டாயின், அது நடுச்செவியின் இயக்கத் தைக் கட்டுப்படுத்தும். எலும்புகள், மூட்டுகளின் அசைவுகள் குறுக்கப்பட்டுக் கேள்திறனும் குறைக்கப் படும். -விளையாட்டா டாகவும், அறியாமையாலும் காதிற்குள் குச்சிகள். கூர்மையான ஆயுதங்கள் போன்றவற்றைப் போட்டுக் குடைவதன் மூலம், செவிப்பறை கிழிவதுடன், வெளியில் இருந்து தொற்று உட்புகவும், பரலவும் வாய்ப்பு ஏற்படு கிறது. உட்செவியில் வணரியம் (labyrinth) என்றொரு பகுதியுண்டு. இதில் அகவண்ணீர் (endolymph), புறவண்ணீர் (perilymph) என்னும் இரு நீர் மண்டலங்கள் உண்டு. ஒலியலைகள் செவிப்பறையைத் தாக்கும்போது, அதில் அசைவு ஏற்படும். அவ்வசைவு கள் செவியெலும்புகளில் அசைவை உண்டாக்கும். செவியெலும்புகளின் அசைவுகள், உட்செவியின் அக வண்ணீரிலும் அசைவுகளை ஏற்படுத்தும். உட்செவி யின் நீர்மண்டலத்தில் இவ்வாறு ஏற்படும் அசைவு கள், நரம்பிழைகளால் ஏற்கப்பட்டு, நரம்பு உந்தல் களாக மாறி மூளையை நோக்கிப் பாய்கின்றன. பல காரணங்களால் உட்செவியில் ஏற்படக்கூடிய நோய் களும். பாதிப்புகளும் கேள்திறனைக் கெடுக்கும். வணரிய அழற்சி, உட்செவிஇரத்தக் குழாய்க்கேடுகள் போன்றவையும், கேட்கும் உந்தல்களை செல்லும் சுருள்வளை நரம்புப் பாதிப்புகள் ஆகியவை யும் கேள் திறனை இடர்ப்படுத்துகின்றன. ஏந்திச் கேள்விக்குறை. கேள்விக் குறையைச் சாதாரண மாக இரு வகைகளாகப் பகுப்பர். வை கடத்து கைக் குறை, நரம்பியக் குறை எனப்படும். கைக் குறை, ஒலியுந்தல்களின் கடத்துகையில் ஏற் படும் தடைகளாலும், தடங்கல்களாலும் ஏற்படுவது. த்து முதன்மையாக நடுச்செவிக் குறைபாடுகளால் தோன்றுவது, நரம்பியக்குறை, உட்செவி நரம்பிழைக் 3கடுகளால் உண்டாகும் கடத்துகைக்குறை கடத்துகைக் குறையின் நுணுக் தங்களை அறிய நடுச்செவியின் செயல்பாட்டு முறை யைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். நடுச் செனீ சுற்றிலும் நான்கு சுவர்களையும், மேலே ஒரு ன+லையும், கீழே ஒரு தரையையும் கொண்டு, ஆறு பக்கங்களோடு அமைந்துள்ள அறையாகும். அதன் நடுவிலக்கச் சுவரான செவிப்பறையினின்று நடுவண் சுவரான துணைச்செவிப்பறை வரை. மூன்று செவியெலும்புகளும் ஒரு தொடராக இணைந்து, நிற்கின்றன. இந்த அறையின் முன்சுவரிலிருந்து தொண்டைச் செவிக்குழல் புறப்பட்டுத் தொண்டை யை அடைகிறது. தொண்டையின் வழியாக வெளிக் காற்றோடு தொடர்பு கொண்டுள்ள நடுச்செவியில், செவியெலும் புகளைச் சுற்றிக் காற்றுள்ளது. செவிப்பறையின் அசைவுகளால் தாக்கப்படும் எலும்புகளின் அசைவுகள் காற்று மண்டலத்திலேயே நிகழ்கின்றன. எனவே இயல்பாக உணரும் கேள்வி, வளிக்கடத்துகை எனப் படும். நடுச்செவி நோய்களில் செவியெலும்புகள் பாதிக் கப்பட்டு அசைவிழந்து போகும்போதும், நடுச்செவி அழற்சிகளில் அதன் காற்று உறிஞ்சப்பட்டு இயக்கம் இடர்ப்படும்போதும், செவிப்பறையின் அலைவுகள் சுற்றியுள்ள தடுச் செவியின் எலும்புச் சுவர்களில் அலைவுகளை உண்டாக்கும். இவ்வலைவுகள், உள் நோக்கிப்பாய்ந்து வணரியத்தை அடையும். இதில் நடுச் சவியின் காற்றோ, அதன் எலும்புகளோ இடங் கொள்வதில்லை; அதன் சுவர்கள் மட்டுமே செயல் படுகின்றன. இவ்வகை, கேள்வி எலும்புக் கடத்துகை எனப்பெறும். சாதாரணமாக எலும்புக் கடத்துகையை விட வளிக்கடத்துகை ஒவ்வொருவருக்கும் மிகுதி யாவே இருக்கும். ஆயின், நடுச்செவியின் செயல் பாட்டுச் சீர்கேடு கொண்டோரில், அதாவது கடத்து கைக் குறை கண்டோரில், எலும்புக் கடத்துகை மிகுதியாகவிருக்கும். கடத்துகை வகைக் கேள்விக் குறையில் ஒலி குறை வாகக் கேட்கப்படுகிறதேயன்றிக் கலக்கமுறுவதில்லை. எடுத்துக்காட்டாக, இவ்வகைக் கேள்விக் குறையுடை யவருக்கு இன்னொருவர் கூறும் சொல் சரியாகப் புரியாது; அதற்குக் காரணம் அந்தச் சொல்லின் ஒலி முழுமையாக அவரின் நடுச்செவி இயக்கத்தில் அலைவு களைத் தோற்றுவிப்பதில்லை. எனவே நரம்பிழை களாலும், மூளையாலும் இது உணரப்படுவதில்லை. தவிர, அந்தச் சொற்கள் மாற்றப்பட்டோ, மருவியோ உணரப்படுவதில்லை. கூடுதல் ஒலியோடு அதே சொல் சொல்லப்பட்டால் அவரால் அதைப் புரிந்து கொள்ள முடியும். மேலும், தம் சொல்லையும், பேச்சையும் அவரால் சரியாகக் கேட்க முடிவதால் (எலும்புக் சுடத்துகையின் காரணமாக) அவருடைய பேச்சில் எவ்விதக்கோளாறும் காணப்படுவதில்லை. தொண்டையுடன் நடுச்செவிக்கு நேரடித் தொடர் புள்ளதால், சளி, நீர்க்கோப்பு, தொண்டை நோய் போன்றவை தொல்லை தரும்போது கேள்வித் திறன் குறைய வாய்ப்புண்டு.