கோட்டம் 541
கோட்டம் 541 கோட்டம் கூர்மையாக ருக்கும். இலையுறை குழல் போன்றது. இலைக்காம்பின் நீளம் 1 செ.மீ; மஞ்சரிக் கதிர் (spike) இலை கக்கத்தில் உருண்டையாகத் தோன்றும். பூவடிச்செதில்கள் நீள்சதுரமாகவோ, முட்டை யாகவோ, சிவப்பு நிறத்தில் 2 செ.மீ. அளவில் விறைப்பாக இருக்கும். பூக்காம்புச் செதில் நீள்சதுர மானது, சிவப்பானது. புல்லிவட்டம் குழாய் போன்று உ செ.மீ. நீளமுடையது. 3 முக்கோண வடிவக் கதுப்புகளைக் கொண்டது. 5 மி.மீ. அளவானது. அல்லிவட்டம் வெள்ளை; கதுப்புகள் நீள் சதுரம் அல்லது முட்டை வடிவில் 480.08 செ.மீ. அளவில் உள்ளன. மகரந்தத்தாளின் நீளம் 2.5 செ.மீ. மகரந்தப்பை 5மி.மீ. அளவுடையது. சூல்பை 1 செ.மீ. அளவில் உருண்டையாக இருக்கும். 3 திசு வறைகளைக் கொண்டது. சூல்கள் அச்சு ஒட்டு முறையில் அமைந்துள்ளன. சூலகத் தண்டு 4 செ.மீ. நீளமுடையது. சூலகமுடி பிறைவடிவிலும் மென் மயிர்களுடனும் இருக்கும். கோட்டம் வளரும் பகுதிகள் வடமேற்கு இமாலயப் பகுதியுள் கீழ் மலைப்பகுதி. ஜம்முகாஷ்மீர். இமாசலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இதில் அடங்கும். இங்கு விளையும் மருந்துத் தயாரிப்புக்குரிய தாவரப் தரமானது. வணிகத்திற்கு இதனைச் சேகரிப்பது மிகவும் பொருள் (கிழங்கு) ஏற்றது. ஆனால் கடினம். மேல்கங்கைச் சமவெளிப்பகுதி. இப்பகுதியில் எந்த இடத்திலும் இச்செடி கூட்டமாகக் காணப் படுவதில்லை, பழத்தோட்டங்களில் களைச்செடியாக முளைத்திருக்கும். இருப்புப்பாதை, சாலையோரத் தாழ்வான பகுதிகளில் உத்தரப்பிரதேசம் பீஹார் மாநிலங்களில் இதனைக் காணலாம். தென்கிழக்கு மாநிலங்கள், வங்காளத்தின் வடக்குப் பகுதி, அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயம் ஆகிய பகுதிகளில் உள்ள நிழலும் ஈரமும் நிறைந்துள்ள பசுமை மாறாக் காடுகளில் இச் செடியைக் காணலாம். இச்செடி விரைவாக வளர்ந்து 2 மீ. உயரத்தை அடைகிறது. அஸ்ஸாம், திரிபுரா மாநிலச் சமவெளிகளில் களைச்செடியாக முளைத் திருக்கும். மத்திய இந்தியா. கோட்டச்செடி இப்பகுதியில் அரிதாகக் காணப்படுகிறது. இது மத்திய பிரதேசக் காடுகளில் கூட்டமாக வளர்ந்திருக்கும். இதனைச் சாகுபடி நிலப் பகுதிகளில் காணலாம். கிழக்குக் கடற்கரைப்பகுதி. இது ஓரிஸ்ஸா, ஆந்திரப்பிரதேசக் கடற்கரைப் பகுதிகளில் களையாக ஆங்காங்கே காணப்படுகிறது. இங்கு விளையும் கிழங்கு தரம் குறைந்திருக்கும். மேற்கு மலைத்தொடர். கர்நாடக மாநிலத்தில் பாக்கு, ஏலத்தோட்டங்களில் இது ஒரு சுளைச் செடியாகக் காணப்படுகிறது. இச்செடிக் கிழங்குகளை வணிக முறையில் சேகரித்துப் பயன்படுத்துவது மிகு வருவாய் இல்லை. இதற்கு இங்கு விளையும் கிழங்கில் குறைவான அளவு டயோஸ் ஜெனின் உள்ளதே காரணமாகும். தருவதாக மேற்குக் கடற்கரை. பம்பாய், திருவனந்தபுரக் கடற்கரைப் பகுதிகளில் உள்ள ஈரம் நிறைந்த நெல் வயல், பழத்தோட்டம், தென்னந் தோப்புகளில் இதைக் காணலாம். கேரளாவில் பசுமை மாறாக் காடுகளில் உள்ள மரங்களின் நிழல் பகுதியில் காணப் படும். கோவா, வடக்குக் கேரளப் பகுதிகளில் மிகு அளவில் கிழங்குகளைச் சேகரிக்கலாம். செடி பூக்கத் தொடங்கும் பொழுதுதான் டயோஸ்ஜெனின் மிகுதியுமுள்ளது. காய்த்துக் கொண்டிருக்கும் இது அளவில் குறைகிறது. ஜெனின் செப்டம்பர் - டிசம்பர் வரை - டிசம்பர்- ஏப்ரலில் டயோஸ் சத்துக் கூடுகிறது. இச்சமயத்தில் கிழங்குகள் உறக்க நிலையில் இருக்கும். ஆனால் இவ்வாறு டயோஸ்ஜெனின் உயரும் அளவு பூக்கும்