592 கோலாக் கரடி
592 கோலாக் சுரடி ஆய்வுமுறைகள் (analytic methods in probability theorem) என்னும் கட்டுரையில் மார்க்கோவின் வாய்ப்பு விளைவுகள் (Morkov random process) என்னும் பகுதியை ஏற்படுத்தினார். இத்துடன் கண இடத்தியல் (set toplogy, தோராய இயல் (approxi- mation theory), கொந்தளிப்புப் பாய்வு இயல் (urb- ulent flow theory), சார்பியல் பகுப்பாய்வு (functior al analysis கணிதந்தின் வரலாறு மற்றும் வழிமுறைகள் ஆகிய பல துறைகளிலும் அவ ரின் புலமை வெளிப் பட்டது. ஒரு துறையில் ஏற்படும் முன்னேற்றம் பிறிதொரு துறையிலும் பயன்பட்டுப் பல துறைகளும் இணைந்து வளர்வதற்கு இவரின் கருத்துகள் அடிப் படையாயின. இடத்தியலில் இவரின் படைப்புகளுள் சிறந்தது. கோஹோமாஜிக் குலங்கள் எனப் பின்னர் பெயர்பெற்ற குலங்கள் ஆகும். 历 1931 இல் கோல்மொகொராவ், மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியரானார். 1933 இல் ஆராய்ச்சிக் கழகத்தில் இயக்குநரானார். இளைஞர்களைத் தேர்ந்து ஊக்கமூட்டிக் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தினார். இவரிடம் முனைவர் பட்டம் பெற்ற மாணாக்கர் எண்ணிக்கை அறுபதுக்கு மேல் இரு கக்கூடும். எ.ஐ.மால்ட்செவ், ஐ.எம்.ஜெல் ஃபாண்ட், பி.வி. ஜினடெங்கோ ஆகியோர் இவ மாணாக்கருள் சிலர். இவரின் புலமை மிக்க துறை யான நிகழ்தகவுக் கொள்கையில் இவர் பணி சிறந்து விளங்கியது. பாய்வு விளைவுத் துறையின் அடிப் படையான சுருத்துகள் இவர் உருவாக்கியவையே. இக்கருத்துகளைப் பின்பற்றியே வில்லி ஃபெல்லர் என்னும் யுகோஸ்லாவிய அறிஞர் கடந்த நாற்பது ஆண்டுகளாகப் புதிய ஆய்வுகளை நிகழ்த்தினார். வற்றின் விளைவாக இயற்பியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் புதிய பயன்பாடுகள் ஏற்பட்டன. 1939 இல் சோவியத் ஒன்றியத்தின் கழக உறுப் பினர் ஆனார். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் நாட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டார். போருக் குப் பின்னர் இவர் பணியாற்றிய துறைகள் செய்தி யியல் (information theory). இயக்க அமைப்புகள் (dynamical system), பண்டைய எந்திரவியல் (classical mechanics) ஆகியனலாம். 1960 இல் புள்ளியியல் முறைகளைப் பயன்படுத்தி யாப்புப் பற்றி ஆராய்ந் தார். ஏறியடையியல் (ballistics), உயிரியல், பேரளவு உற்பத்தியியல், கணித முறைக் கட்டுப்பாட்டு இயல் (mathematical control theory}ஆகியவற்றில் ஆராய்ச்சி செய்தார். இவ்லாறாகக் கணிதத்தின் பல துறை களிலும் இவராற்றிய சிறந்த பணிக்காகச் சோவியத் அரசு லெனின் பரிசு அளித்தது. பல நாட்டு அறிவியற் சுழகங்கள் இவரைத் தம் உறுப்பினராக்கிச் சிறப்புப் பெற்றன. 1973 ல் பதாண்டு நிறைவை ஒட்டிச் சோவியத் அறிய கழகம் பாராட்டு தலைத் தெரிவித்தது. பொன். ஞானசுந்தரம் கோலாக் கரடி இது ஆஸ்திரேலிய நாட்டில் மட்டுமே காணப்படும் ஒரு பைப்பாலூட்டி (marsupial) வகை விலங்காகும். அந்நாட்டு மொழியில் கோலா என்றால் நீர் குடிக் காதவன் எனப் பொருள்படும். கோலாக்கரடி (koala bear) காடுகளின் இயற்கைச் சூழ்நிலையில் வாழும் போது நீர் அருந்துவதில்லை. இவற்றிற்கு உணவாகும் குங்கிலிய இலை மற்றும் யூக்கலிப்டஸ் இலைகளி லிருந்து தேவையான நீர் கிடைக்கிறது. அதனால் இவ்விலங்குகளுக்கு நீர் வேட்கையே இருப்பதில்லை. உருவத்தில் ஒரு பொம்மையைப் போலத் தோற்றம் அளிப்பதால் இதைப் பொம்மைக் கரடி (teddy bcar) எனவும் குறிப்பிடுவர். இது குழந்தைகளால் வளர்ப்பு விலங்காக வளர்க்கப்படும். . நீளமான மயிர்க்கற்றைகளுடைய நீண்ட நிமிர்ந்த பெரிய காதுகள், அச்சமும் சொல்லொணா ஏக்கமும் கொண்ட பார்வையுடைய சிறிய அழகிய கண்கள். பெரியழக்கு. நீண்டு குறுகிய முகமுனை போன்ற உருவ அமைப்புகள் இவை இக்கரடிக்கு அழகிய தோற்றம் அளிக்கின்றன. இது ஏறத்தாழ 60 செ.மீ. உயரமுய் 16 கிலோ எடையும் உடையது. கோலாக்கரடிக்கு வால் இல்லை. ஆனால் வாலெலும்பு மேடு காணப் படுகிறது. உணவைத் திரட்டி வைத்துக் கொள்ள, கன்னப்பைகள் உள்ளன. நான்கு கால்களும் பற்றிப் பிடிப்பதற்கு ஏற்ப அமைந்துள்ளன. முன்கால்களின் முதலிரண்டு விரல்களும் ஏனைய மூன்று விரல்களுக்கு எதிரான வகையிலும், பின்கால்களின் கட்டைவிரல் பிற விரல்களுக்கு எதிரான வகையிலும் காணப்படு கின்றன. பின்காலின் இரண்டு, மூன்றாம் விரலும் உடல்தோலால் இணைக்கப்பட்டிருக்கும். பெண் விலங்குகளில் காணப்படும் மதலைப்பை (brood pouch) பின்னோக்கித் திறக்கிறது. உடல் முழுதும் மென்மையான, அடர்த்தியான அழகிய மயிர் மிகுந்து காணப்படுகிறது. உடலின் முதுகுப் பக்கம் சாம்பல் அல்லது பழுப்பு நிறமாகவும், பின் இடுப்புப் குதி வெளிர் மஞ்சளாகவும், வயிற்றுப்பக்கம் வண்மையாகவும் இருக்கும். கோலாக் கரடி முற்றிலும் மரங்களிலேயே வாழும். ஒரு மரத்தை வீட்டு மற்றொரு மரத்திற்குச் செல்வ தற்காகவோ நாளினால் மண்ணை நக்கி உட்கொள் வதற்காகவோ தரைக்கு வருவதுண்டு, மண்ணை தக்கும் பழக்கம் அதன் உணவுச் செரிமானத்துடன் தொடர்புடைய வழக்கமாகக் கருதப்படுகிறது. கால்கள் குட்டையாக இருந்தாலும் வலிமை மிகுந் முன்கால்களை நீட்டி மரத்தைப் பற்றிக் கொண்டு தாவித்தாவி மரத்தில் ஏறும். பகல் முழுதும் கிளைகளைப் பற்றிக்கொண்டு உடலைச் சுருட்டிக் கொண்டு உறங்கும். சற்றுப் பேரொலி எழுப்பி உறுமும் வழக்கம் உண்டு. ஆனாலும் து ஏனைய விலங்குகளைத் தாக்குவதில்லை. தவை.