கோழித் தீவனம் 621
டோஸிஸ் என்னும் நோயையும் பரவச் செய்கின்றன. இவை 11 ஆண்டுகள் எவ்வித உணவும் இல்லாமல் வாழும் ஆற்றல் பெற்றவை. நீலநிற மூட்டைப்பூச்சி. இவ்வகை மூட்டைப் பூச்சிகள் இரத்தத்தை உறிஞ்சுவதில் ஆற்றல் மிக்கவை. இவை முழு வளர்ச்சி அடைய எட்டு வாரங்கள் எடுத்துக் கொள்கின்றன. பூச்சிக்கொல்லி மருந்துகள். கோழிகளை ஒட்டுண்ணிகளிடமிருந்து பாதுகாக்கப் பல வகை யான மருந்துகள் பயன்படுகின்றன. கோழி வீடுகளில் தெளிப்பான் மூலம் மருந்து தெளித்தல் கோழிகளை மருந்து நீரில் மூழ்கி எடுத்தல் போன்ற முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. கீழ்க்காணும் மருந்துகள் பயன்படுகின்றன. . கையுறை மற்றும் முகத்திரை அணிந்து கொள்ளல், மருந்து நிறுவனம் கொடுத்திருக்கும் அறிவுரைகளைத் தவறாமல் பின்பற்றல், தீவனம் மற்றும் நீர்த் தொட்டிகளை முன்கூட்டியே காலி செய்துவிடுதல், நல்ல காற்றோட்டம். வருமாறு திரைகளை உயர்த்திவிடல், கருவிகளை வெளியில் எடுத்து வைத்துத் தெளித்தல், அயர்ச்சி நேரங்களில் இம்மருந்துகளைப் பயன்படுத்தாமை, கழிவு செய் வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தெளிக்காமை, சரியான கலவை அளவைப் பயன்படுத்தல், தேவைப் பட்டால் நான்கு வாரம் கழித்து மீண்டும் தெளித்தல், கலவை நீரில் முக்கும்பொழுது கோழிகளின் தலைப் பகுதி, மருந்து நீரில் மூழ்கிவிடாமல் பார்த்துக் கொள்ளல், இளம் வெயிலில் மூழ்க வைத்துக் கோழி களை நன்றாக உலரவிடல் மூழ்கச் செய்த பிறகு தேவையான அயர்ச்சி நீக்க மருந்துகளைக் கொடுத் தல், தீவனம் மற்றும் நீர்த்தொட்டிகள் நன்றாக உலர்ந்தபின்பு மீண்டும் பயன்படுத்தல், மூலை முடுக்கு களில் ஒளிந்திருக்கும் உண்ணிகளைத் தீப்பிழம்பு aerosol burner) கொண்டு அழித்தல். கால்நடை மருத்துவரின் அறிவுரை பெற்றே எதையும் செய்தல் என்பன பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன் படுத்தும்போது கவனிக்க வேண்டிய வழிமுறைகள் ஆகும். . கோழித் தீவனம் ஆர்.கோவிந்தராஜு தீவனம் தரமாகவும் செறிவு மிகுந்ததாகவும் இருந் தால்தான் அதிக முட்டைகளையும் நல்ல இறைச்சியை யும் பெற முடியும். நாட்டுக்கோழிகள் இன்றும் ஆண்டுக்கு 30-50 முட்டைகளிடுகின்றன. அவற் றிற்குச் சிறப்புத் தீவனம் அளிப்பதில்லை. பண்ணை யில் வளர்க்கும் கோழிகளுக்குத் தாதுப்பொருள்கள். கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்ட . கோழித் தீவனம் 621 மின்கள் ஆகியவற்றைத் தேவையான அளவில் கலந்து அளிப்பதால் நாட்டுக்கோழிகளை விட வை பல மடங்கு அதிகமான முட்டைகளையும் இறைச்சியை யும் அளிக்கின்றன. இந்தியாவில் 1935 இல் தாதுப்பொருள்களின் இன்றியமையாமையை உணர்ந்து, மாங்கனீஸ் போன்ற பொருள்களைத் தீவனத்தில் கலந்து அளித் தனர். சில சில ஆண்டுகள் கழித்துப் புரதப் பொருள் களின் சிறப்பை உணர்ந்து தேவையான அளவைத் தீவனத்தில் சேர்த்தனர். முதலில் தாவரப் புரதங் களை மட்டுமே சேர்த்து வந்தனர். பின்னர் ஊன் புரதமும் சேர்த்த பிறகு கோழிகள் மிகுதியான எடையுடன் அதிக முட்டைகளையும் பின்னர் வைட்டமின்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் அவற்றையும் தீவனத்தில் சேர்த்து நல்ல பலனடை தனர்.நுண்ணுயிர்க் கொல்விகள் சேர்ந்த தீவனத்தை அண்மைக் காலத்தில் அளித்ததில் குஞ்சுகள் விரைவில் வளர்வதைக் சுண்டனர். இட்டன. ந் மாடுகளுக்குத் தீவனமளிப்பதும் பராமரிப்பதும் எளிது. ஆனால் கோழிப்பண்ணையில் தீவிர கலனத் துடன் சத்துள்ள தீவனங்களை அளித்து நல்ல முறை யில் வளர்த்தால் ஊட்டச்சத்துள்ள முட்டைகளை யும், இறைச்சியையும் பெற முடியும். மேலும் மிகவும் இலாபகரமான தொழில்களில் இதுவும் ஒன்று. தானியம், தவிடு. லை, பண்ணைக் கழிவுப்பொருள். தாதுப்பொருள் முதலானவற்றை உண்டு. இவை சத்துள்ள முட்டையையும் நல்ல இறைச்சியையும் அளிக்கின்றன. கோழிகள் தீவனத்தை முட்டை, இறைச்சி கொடுக்கும் திறன் பசுவைவிட இவற்றில் இரண்டு மடங்காகும். 2 கிலோ எடை யுடைய கோழி ஆண்டு ஒன்றுக்கு 10 கிலோ எடை யுடைய 200-220 முட்டைகளை அளிக்கிறது. 400 கிலோ எடையுள்ள நல்ல கறவைமாடு 12% திண்மப் பொருளைக் கொண்ட 3000 கிலோ பாலை அளிக் கிறது. உண்டு கோழியின் உடலிலுள்ள நீர் போக உலர்ந்த பொருள்களை ஓர் ஆண்டுக்கு அளித்த முட்டையி லுள்ள உலர்ந்த பொருள்களுடன் ஒப்பிட்டால், கோழி தன் உடலிலுள்ள உலர்ந்த பொருள்களை விட 6 மடங்கு அதிகமாக முட்டையிலுள்ள உலர்ந்த பொருள்களை அளிக்கிறது. கறவைமாடு தன் உடலி லுள்ள உலர்ந்த பொருள்களைப் போல 2 மடங்கு உலர்ந்த பொருள்களையே பால் மூலம் அளிக்கிறது. எனவே தீவனத்தை மனிதனுக்கு வேண்டிய உணவுப் பொருளாக மாற்றும் திறன் கோழிகளிடம் அதிகமாக உள்ளது. 2 கிலோ எடையுள்ள கோழி ஆண்டுக்கு 250 முட்டையிட்டால் 14 கி.கி. எடை முட்டையில் 2 கி.கி. புரதம், 1.5 கி.கி. கொழுப்பு, மிக 1.4 கி.கி. கால்சியம் கார்பனேட் இருக்கும். கோழி உறுப்புகளின் செயல்திறன் வியப்புக்குரியதாக ஒரு முட்டையிடும் எந்திரமாகவே உள்ளது.