உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/708

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

688 சங்கு முறிவு

688 சங்கு முறிவு நரம்பமைப்பும் இலையடிச் செதில்களுமுண்டு. இலைக் கோணத் தனி மஞ்சரியுண்டு, மலர்கள் இருபால் மலர் கள்: பெரியவை; கவர்ச்சியானவை. பூவடிச் செதில் களுண்டு. புல்லி - 5 இணைந்தவை. அல்லி-5 தனித் தவை. பெரிய கொடியல்லி விசிறி போன்றுள்ளது. இதன் கீழ்ச்சிறகு அல்லி மிகச் சிறியது. இதனுள் உள்ளன. இரண் ணைந்த படகு அல்லிகள் இதனுள் மகரந்தத்தாள் வட்டமும் சூலகமும் உள்ளன. மகரந்தத்தாள் 10, இரட்டைக்கற்றை (9+1) ஒன்பது இணைந்து, ஒரே தாளாகத் தனித் துள்ளது. மகரந்தத்தாள் குழலின் கீழே தேன் தட்டு (honey disc) உள்ளது. மேல் மட்டச்சூலகம், ஒரே சூலக இலையாலானது. சூலகக் காம்பு வளைந்தது. கனி. சூலக தூவியுடையது. வெடிகனி (legume) ஆகும். மலர்கள் வெண்மை, நீல நிறங் களைப் பெற்றவை. முடி பயன். விதையை வறுத்தும், வேரைப் பாலில் வேக வைத்தும் எடுக்க இது தூய்மையாகும். இதன் இலைச்சாறும், இஞ்சிச்சாறும் ஓரளவாக எடுத்துக் கலந்து, ஓரிரு கரண்டி வீதம் கொடுத்துவர இளைப்பு நோயாலுண்டாகும் வியர்வை நீங்கும். இலையை உப்புச் சேர்த்தரைத்து, நெறிக் கட்டிகளுக்குப் பூச வீக்கம் கரையும். இலையைக் கசக்கிச் சாறு பிழிந்து வெள்ளைக் குன்றிமணியும், வாளமும் சம் எடை கொண்டு மேற்கூறிய சாற்றில் அரைத்துக் கொப் பூழைச் சுற்றித் தடவினால் ஒரிரு முறை பேதியாகும். விதையை வறுத்துப் பொடித்து, 2-3 கி.வரை கொடுக்கப் பேதியாகும். விதைத்தூள் 7 பங்கு, இந்துப்புப் பொடி 7 பங்கு, சுக்குத்தூள் 1 பங்கு எடுத்து ஒன்றாகக் கலந்து 3.6 கி. கொடுக்க யானைக் கால் நீங்கும். 500 மி.கி, வேர் எடுத்து 160 மி.லி. நீரில் ஊறவைத்து அதில், 42-84 மி.லி வரை கொடுத்து வர, சிறுநீரைப் பெருக்கி மலத்தைக் கழிக்கும். வேரை அரைத்து ஒன்று அல்லது இரண்டு சுழற்சிக்காய் அளவு யானைக்கால் நோய்க்குக் கொடுக்கலாம். வேர்த்தூள் கொடுக்க, குழந்தை களுக்கு உண்டாகும் வாந்தி, ஏக்காளம், மந்தம், கண் நோய், தலைநோய் ஆகியவை தீரும். வேர், திப்பிலி வேர், சுக்கு, விளாம்பிசின் வகைக்கு 3.5 கிராம் எடுத்து இவற்றைக் கல்லத்தி விட்டு நீர் விட்டரைத்துக் குன்றிமணியளவு மாத்திரை செய்து. ஒரு மாத்திரை வீதம் கொடுக்க நன்கு பேதியாகும். குழந்தைகளுக்கு அரை மாத்திரை கொடுக்கலாம். நல்லெண்ணெய் 2 2 லிட்டர், சித்திர மூலப் பட்டை. விஷ்ணு காந்தி வேர், சங்கு, நாயுருவி, சிறுபூளை இவற்றின் வேர்ப் பட்டை வகைக்கு 17.5 கிராம், வசம்பு 6.10 கிராம் கலந்து அரைத்துப் போட்டு, ஒரு நாள் வைத்து, மறுநாள் காய்ச்சி வேளையொன்றுக்கு ஒரு கரண்டி வீதம் ஏழுநாள் உப்பு, புளி நீக்கிச் சாப்பிடக் கண்டமாலை தீரும். சங்கு, முருங்கை, உத்தாமணி, பாவட்டை, காவட்டம்புல். நுணா, பொடுதலை இவற்றின் ஈர்க்கு வகைக்கு ஒரு பிடி இடித்து, 2.6 லி.நீர்விட்ட பின், ஓமம், திப்பிலி, வசம்பு, ஆமையோடு. கருஞ் சீரகம் இவற்றைத் தனியே ஒரே அளவில் கலந்து அரைத்துத் துணியில் முடிந்து வற்றக் காய்ச்சிய மருந்தை மேற்காணும் கஷாயத்தில் அரைத்துக் சுழற்சிக்காயளவு மூன்று வேளை கொடுக்க ஆம் கணந் தீரும். சங்கு, புளி, வெள்ளைச் சாரணை, பொன்னாங் கண்ணி, சிறுகீரை, கரிப்பான் இலைச்சாற்றை ஒரே அளவாகக் கலந்து சீலையை 6-7 முறை நனைத் துலர்த்தித் திரித்து நண்டின் கொழுப்பில் துவைத்துத் தீயிற்கொளுத்திச் சாம்பலாக்கி அதில்வெண்ணெயைக் கூட்டிக் களிம்பு போலரைத்துக் கண்களில் தீட் வந்தால் கண்வலி, சிவப்பு, கடுப்பு. தினவு, நீர் வடிதல் போன்றவை தீரும். விளா வேம்பு இலை, கையாந்தகரை இலை, லை,தேள் கொடுக்கு இலை, உப்பிலை. சங்கு இலைச் சாறு ஓரளவாகக் கலந்து துணியில் ஊற்றிப் பற்ற வைத்து, அதற்கு நிகர் துத்தம், துருசு வெங்கலப் பொடி, திப்பிலி, இந்துப்புக் கூட்டி எலுமிச்சம்பழச் சாற்றில் அரைத்துலர்த்திய பின்பு வெண்ணெய் கூட்டி அரைத்து அதைத் தீட்டி வர, விழிச்சிவப்பு, படல எழுச்சி, கண்பிரிதல், புழு வெட்டு, புகைச்சல், இமைத் தடிப்பு, நீர்முட்டல் தீரும். சங்கு முறிவு மோ.லோ. வீலா - மு. இராசாங்கம் சே.பிரேமா படிகக் கனிமங்களில் பிளவுத் திசையைத் தவிர்த்தும், திரட்சிக் கனிமங்களில் எந்தத் திசையிலும் உண்டா கும் உடைவுகளின் அமைப்பு அல்லது மேற்பரப்பைக் குறிக்கும் சொல்லே முறிவு (Fracture) எனப்படும். பல திசைகளில் பிளவு சீராக இருந்தால் முறிவு அதிக மாகக் காணப்படுவதில்லை. இது சீரான முறிவு, சீரற்ற முறிவு, கரடுமுரடான முறிவு, மண் முறிவு, சிராய் (splintery) போன்ற முறிவு, சங்கு முறிவு (conchoidal fracture} எனப் பலவகைப்படும்.