உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/725

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சணல்‌ 705

சணல் 705 படி செய்தால் ஹெக்டேருக்கு 3-7 டன் சுண்ணாம்பு இடவேண்டும். ஹெக்டேருக்கு 4-7 டன் மட்கிய எரு அல்லது தொழு உரம் இட்டு உழுதுவிட வேண்டும். தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து உரங்கள் ஒரு ஹெக்டேருக்கு கேப்சுலாரிஸ் வகைகளுக்கு முறையே 40,80 கிலோ தேவைப்படும். இச்சத்துகள் ஒலிட்டோரியஸ் வகைகளுக்கு 20-60 கிலோ அளவில் தேவைப்படும். மணிச்சத்தும் சாம்பல்சத்தும் அடியுரமாக இடப் படும். தழைச்சத்தை மேலுரமாக இரண்டு முறை யாக இடுவது வழக்கம். உருளைக்கிழங்குப் பயிருக்கு முன், சணலைப் பயிரிட்டால் உரமிடுவதில்லை. நெல் அல்லது கோதுமைக்கு முன் பயிரிடப்பட்டால் மணிச்சத்தும் சாம்பல்சத்தும் பரிந்துரைக்கப்பட்ட அளவுக்குக் குறைவாகவே இடப்படும், ஆனால் தழைச் சத்தும் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. சிலர் சாம்பல் சத்திற்காகக் குளத்தாமரைச் (water yacinth) செடிகளைக் கொளுத்தி அச்சாம்பலை இடுகின்றனர். பிரம்மபுத்திரா ஆற்றின் வடக்குக் கரைப்பகுதி. வடக்கு வங்காளப் பகுதிகளில் மெக்னி ஷீயச் சத்து இடப்படுவதால் விளைச்சல் கூடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தழைச்சத்தை 10% அடர் வில் விதைத்த 35,60 ஆம் நாளில் தெளிப்பதும் வழக்கம். தழைச்சத்து உரம் போதிய அளவு கிடைக்காதபோது இவ்வாறு இலைமீது சத்தும் தெளிக்கப்படும். G தழைச் பயிரின் இளம் பருவத்தில் களைகளைக் கட்டுப் படுத்துதல் வேண்டும். இதனால் சணல் செடி செழிப் பாசு வளரும். பரவித் தெளிப்பு முறையில் விதைப் பதற்கு முன் சோடியம் கலந்த 2,2,3, 3 டெட்ரா ஃபுளோர் டிரோபியேனட் களைக்கொல்லியை இட வேண்டும். செடி முளைத்தபின் தெளிப்பாக டைகுளோரோ புரோபியேனேட் களைக்கொல்லி யைத் தெளிக்கலாம். சணல் பயிர் பெரும்பாலும் 120-150 நாளில் அறுவடை செய்யப்படுகிறது. செடியில் ஏறக்குறைய 50% பிஞ்சு தோன்றியிருக்கும் பொழுதோ பயிரின் 135 ஆம் நாளோ செய்வது மிகுதியான, தரமான நாரைத் தருகிறது. தரைக்கருகில் செடிகள் வெட்டப்படுகின்றன. சில இட டங்களில் செடிகள் வேருடன் பறிக்கப்படு கின்றன. அறுவடை விதைப் பயிர்ச் சாகுபடி. நாருக்காகச் சணல் செடிகளை விதை உண்டாகுமுன்பே அறுவடை செய்துவிடுவர். எனவே சணல் விதை உற்பத்தி தனியாகவே நாருக்காக உற்பத்தி செய்யப்படும். பயிரில் ஏறக்குறைய 4% செடிகளை விதைக்காக விட்டு வைக்க வேண்டும். வடிகால் வசதியற்ற இடங்களில் விதைப்பயிரை வளர்க்கக்கூடாது. நார்ப் பயிரை விட இது சற்றுப் பிந்தைய காலத்தில் விதைக்கப்படுகிறது. இதற்குச் சற்று மிகுதியாக இடை வெளி தந்து விதை உண்டாவதற்கு வழி செய்ய அ.க.- 45 லாம். விதைகள் மிகுதியாகக் கிடைப்பதற்கு உரிய நேரத்தில் செடி நுனியைக் கிள்ளுதலும் போதிய அளவு உரமிடுதலும் தேவைப்படும். வளமில்லாத நிலங்களிலும் குறைவாக மழை பெய்யும் களிலும் இவற்றைக் கடைபிடிப்பதில்லை. இயற்கை யாக இச்செடியில் அயல் மகரந்தச் சேர்க்கை உண்டாவது மிகக்குறைவு. ஒரு நிலத்தில் கேப்சுலாரிஸ் வகைகளும் ஒலிட் டோரியஸ் வகைகளும் மாறிமாறிப் பயிரிடப்படுவ தில்லை. இதனால் பல - விதைகளின் விதைகள் கலக்கப்படுவது தடுக்கப்படுகிறது. விதைப்பயிருக்குக் குறைவாகத் தழைச்சத்து இட்டால் போதும். நாருக்குச் செடிகளை அறுவடை செய்த 4-6 மாதங் களில் விதைகளை அடித்துத் தொகுக்கலாம். ஒரு ஹெக்டேரில் கேப்சுலாரிஸ் வகைகளின் சராசரி விதை விளைச்சல் 380-500 கி.கி ஆகும். கேப்சுலாரிஸ் வகைகளான JRO 878, 7835 வகைகளில் 170-250 கி.கி விதையும் JRO 632 வகையில் 300 கி.கி விதை யும் கிடைக்கும். விதைகளைச் சூரிய ஒளியில் நான்கு நாளுக்கு நன்கு உலர்த்தி நெகிழி உள்துணி அமைப் புள்ள சாக்குப் பைகளில் தொகுத்து வேண்டும். விதைகளைக் காற்றுப் புகாத கவன் களில் முளைப்புத் திறன் குன்றாமல் நான்கு ஆண்டு களுக்கு வைக்கலாம். நூறு கிராம் எடையில் ஒலிட்டோரியஸ் வகைகளில் 50,000 விதைகளும் கேப்சுலாரிஸ் வகைகளில் 65,700 விதைகளும் இருக்கும். நோய்களும் பூச்சிகளும் . வைக்க சணல் பயிரைப் பல நோய்களும் பூச்சிகளும் தாக்கி அழிக்கும். நோய்களுள் தண்டமுகல், தண்டுக் கொப்புளநோய், ஆந்த்ரக்னோஸ், பாக்டீரிய இலைப் புள்ளி, பாக்டீரிய வாடல், இலைத்தேமல் முதலியவை குறிப்பிடத்தக்கவை. தண்டழுகல் (stem rot). மெக்ரோஃபோமினா ஃபேசியோலினா (Macrophomina phaseolina) என்னும் பூசணத்தால் நோய் உண்டாகின்றது. இந்நோய் அஸ்ஸாம், வங்காளம், பீஹார், ஒரிஸ்ஸா மாநிலங் களில் வளர்க்கப்படும் சணல் பயிரைத் தாக்கிப் பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது. இதனால் சணலின் தரமும் விளைச்சலும் குறையும். செடியின் எப்பருவத்திலும் இந்நோய் பாதிப்பை ஏற்படுத்தும். நோயுற்ற செடிகள் அழுகி இறந்து விடுவதால் ஆங் காங்கே டைவெளிகளைக் காணலாம். இந்நோய், விதை, மண் மூலமாகப் பரவுகிறது. நோயில்லாத செடிகளிலிருந்து விதைகளைப் பெறுவதுடன் விதை களை ஒரு கிலோவுக்கு 2 கிராம் வீதம் பெண்டோ குளோரோநைட்ரோ பென்சீன் அல்லது கார்பெண்ட சிம் கலத்து விதைக்க வேண்டும். எதிர்ப்புத்திறன் கொண்ட வகைகளைப் பயிரிட்டும் நோயைக் கட்டுப் படுத்தலாம். நிலத்தில் சாம்பல் சத்துக் குறை