உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/742

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

722 சதுப்பு நிலக்காடுகள்‌

722 சதுப்பு நிலக்காடுகள் துளிகள் மேற்புறத்தோலில் மிகுதியாசுக் காணப்படு கின்றன. மேல் மற்றும் கீழ்ப்புறத் தோல்களுக்குக் கீழே 1-3 அடுக்குகளாலான தோல்கீழ் நீர்ச்சேமிப்புத் திசு உள்ளது. இதில் பசுங்கணிகங்கள் இல்லை. இத் திசுவில் டானின் (Tannin) காணப்படலாம். கற்செல்களும் தடித்த சுவருடைய (sclereid ) இத்திசுவில் காணப்படலாம். தோலின் கீழ்ப்பகுதிக்குக் கீழே பசுங்கணிகங்களைக் கொண்ட ஒளிச்சேர்க் கையை நடத்த உதவும் வேலிக்கால் இடைத் (palisade mesophyll) திசு உள்ளது. வளிம மாற்றத்திற்கு உதவும் ஸ்பாஞ்சுத் திசுவில். இலை நரம்புகளைக் குறிக்கும் சாற்றுக்குழாய் (Vascular) இழுவைகள் காணப்படு கின்றன. ஒவ்வோர் இழுவையைச் சுற்றியும் தடித்த சுவர்களையுடைய ஓர் உறை காணப்படுகிறது. இலை நரம்புகளிலிருந்து, பக்கவாட்டில் நீர் உள்ளும், வெளி யும் செல்வனதக் கட்டுப்படுத்த இவ்வுறை உதவு கின்றது. உள்ள தாவர இலைகளை கட விட சதுப்புநிலத் தாவரங்களின் இலைகளில் சாம்பல் சத்தும், சோடியமும் கணக்கிடப்பட்டுள்ளன. லுக்கு அருகில் நன்னீர்க் கால்வாய்களுக்கு அருகில் உள்ள தாவரங் களில் சாம்பலும் சோடியமும் மிகுதியாக இருக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. சதுப்புநிலத் தாவரங்களின் பகுதி உள்ளீர்த்தல் சதுப்புநிலக் காடுகளில் தாவரங்கள் தனித்தனியா கவோ, கூட்டாகவோ சதுப்பு நிலத்தின் வெவ்வேறு பகுதிகளை உள்ளீர்ப்புச் செய்திருப்பதை நன்கு காண லாம். ஆனால் சதுப்பு நிலங்களில் காணப்படும் மேற்கொள் விலங்குகள் இத்தகைய உள்ளீர்த்தவை வதில்லை. இத்தாவர ஊள்ளீர்த்தலை சதுப்பு நிலப்பகுதி கடல்நீரில் மூழ்கும் நிலையை ஒட்டியும், சதுப்பு நிலப்பகுதியில் உள்ள மண்ணின் உப்புத் தன்மையை ஒட்டியும், நிலப் பகுதியில் ஒரு குறிப் பிட்ட இடத்தில் ஓங்கி வளர்ந்து எண்ணிக்கையில் பிற தாவரங்களை விட மிகுதியாக இருக்கும் தாவரங் களின் பெயர்களை ஒட்டியும் வகைப்படுத்துவர். ஓரக்காடுகள். இக்காடுகள் பாதுகாப்பான கடல் ஓரத்திலும் நிலப்பகுதியிலும் வளர்ச்சியடைகின்றன. சில சமயங்களில் வலிமையான காற்றினால் அழிவுறும் வாய்ப்புகளுமுள்ளன. ஆற்றோரக்காடுகள். இக்காடுகள், பெயருக்கேற் றாற்போல் ஆற்றோரங்களிலும், வடிகால் வாய்க் கால் ஓரங்களிலும் வளர்கின்றன. இக் காடுகளில் ரை சோபோரா மாங்கேல் எண்ணிக்கையில் பிற தாவரங் களை விஞ்சி நிற்கும். அலை தழுவும் காடுகள். இக்காடுகள் தாழ்ந்த சிறிய சதுப்பு நிலப் பகுதிகளிலும், பெரிய நிலப்பரப்பு கள், கடலினுள் குறுகிய பகுதிகளாக மாறிச் செல்லும் போதும், சிறிய வளைகுடாக்களிலும் வளர்கின்றன. வடிகாலோரக் காடுகள். இக்காடுகள் நிலப் பகுதி யிலிருந்து ஓடிவரும் நீரை எடுத்துச் சென்று கடலுடன் சுலக்கச் செய்யும் கால்வாய்களின் கரைகளில் வளர் கின்றன. நாளும் அலைகளின் ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கின்றன. இங்கும் ரைசோபோரா மாங்கேல் மிகுதியாகக் காணப்படும். குட்டைக்காடுகள். இக்காடுகள், மேடு பள்ளமற்ற நிலையுடைய கடலோரப் பகுதிகளில் வளர்ச்சியடை கின்றன. இத்தாவரங்கள் குட்டையானவை. 1.5 மீட்டருக்கும் குறைவாக வளர்கின்றன. அளவை சதுப்புநிலத் தாவரங்கள் கடல் அலைகள் எவ் வெவ்விடங்களை நன்கு நனைக்கின்றனவோ அவ்வவ் விடங்களில் நன்கு வளர்கின்றன. இதனால் அவை வளருமிடங்கள் உப்புகளும் சோடியம் மற்றும் குளோரைடு அயனிகளும் நிறைந்தனவாக உள்ளன. கடலருகில் உள்ள சதுப்பு நிலப் பகுதிகளில் உப்புத் தன்மை மிகுந்திருக்கும். நன்னீர் மிகுந்துள்ள பகுதிகளில் உப்புத் தன்மை குறைவாயிருக்கும். மேலும், கடல் அலைகளின் தழுவல் இல்லாமல் நீர் ஆவியாதல் மிகுதியாகக் காணப்படும் இடங் களிலும் உப்பின் அளவு கடல் நீரில் உள்ள விட மிகுந்திருக்கும். சோடியம் மற்றும் குளோரைடு அயன்களைவிடச் சதுப்புநிலத் தாவரங்களின் வளர்ச் சிக்குப்பொட்டாசியம், கால்சியம், அயனிகள் மிகவும் தேவை. ஆனால், சோடியம் குளோரைடு அயனிகளே சதுப்பு நில மண்ணில் மிகுந்துள்ளமையால் சதுப்பு நிலத் தாவரங்கள் இவ்வயனிகளைப் பெருமளவில் உள்ளீர்த்துக்கொள்ள வேண்டிய இன்றியமையாமை ஏற்படுகின்றது. அவ்வாறு இருப்பினும், பெருமளவில் உள்ளீர்க்கப்பட்ட இவ்வயனிகள் இத்தாவரங்களின் ஏனைய உயிர்ச் செயல்களைத் தடைசெய்யா வண்ணம். நாளடைவில் தக அமைவுகளைப் பெற்று அழிவுறா வண்ணம் உள்ளன. சதுப்புநிலக் காடுகளின் பொருளாதார முக்கியத் துவம். மனித வாழ்வில் இக்காடுகளின் பங்கு மிக முக்கியமானது. இருப்பினும் அறியாமையின் காரண மாகச் சிலர் அவற்றை அழிக்கவும் முற்படுகின்றனர். எனவே பன்னாட்டு அரசுகள் தம் நாட்டுக் காடு களைப் பாதுகாக்கப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. வெப்ப நாடுகளிலுள்ள சதுப்பு நிலக்காடுகள், மரம், எரி பொருள், கம்பம், தோல் பதனிட உதவும் டானின், ரெசின், சாயம் ஆகியவற்றைத் தரு கின்றன. அந்தமான் தீவுகளில் புருகீரா ஜிம்னோரை சாவை மரத்திற்கா காகப் பயிர் செய்கின்றனர். னரசோபோரா, அவிசீனியா ஆகியவற்றின் கட்டை கள் எரிபொருளாகப் பயன்படுகின்றன. மலேசியா வில், ரைசோபோரா மற்றும் புருகீராவின் கட்டை கள் கரியைப் பெறப் பயன்படுகின்றன.