சர்க்கரைத் தாவரங்கள் 819
8 சர்க்கரை மனிதரின் அன்றாட வேலைகளைச் செய்வதற்கேற்ற ஆற்றலை அளிப்பதுடன் அவர் களைக் களைப்படையாமல் வைத்திருக்கவும் உதவு கிறது. மேலும் இன்று சர்க்கரையிலிருந்து சுமார் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட துணைத்தொழிற்சாலை வேதிப்பொருள்கள் மக்களுக்குப் பயன்பட்டு வரு கின்றன. கரும்பு சர்க்கரை எடுக்கப்படும் தாவரங்களுள் முதன்மையானதாகிய கரும்பு (Sachhorun Officina- rum) வட இந்தியா, நிகியூகினியா ஆகிய இரு இடங்களிலிருந்து தோன்றி, ஏனைய இடங்களுக்குப் பரவி இருக்கக்கூடும். தாவரவியல் பண்புகள். கிராமினே குடும்பத்தைச் சேர்ந்த இது 2-3மீ. உயரம் வளரும். தண்டு கெட்டி யானது. இதன் அடிக்கணுக்களிலிருந்து வேற்றிட வெளி வேர்கள் கிளம்பும். இந்தியாவில் கி.மு. ஆம் ஆண்டு முதலே கரும்பு பயிரிடப்பட்டு வருகிறது. 327 மண்ணும் கால நிலையும். இது வெதுவெதுப் பான ஈரமுள்ள வெப்பமண்டலங்களில் பயிரிடப்படு கிறது. நல்ல சூரிய ஒளியும் 25-30 °C வெப்பமும் உள்ள இடங்களில் நன்றாக வளரும். மிதமான அல்லது கனமான மண்ணில் நன்றாக வளரும். பயிரிடு முறை. கோண மொட்டுகளுடன் கூடிய இரு கணுக்கள் அடங்கிய நறுக்குகளின் மூலம் இது பயிரிடப்படும். இவை நீளமான பள்ளங்களில் 4 மீட்டர் இடைவெளி விட்டு நடப்படும். துளிர்த்த இரு வாரங்களில் நீர் பாய்ச்சி, எருவிட்டுக் களை நீக்கிப் பயிர்ப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தபின் சுரும்பு 10 மாதங்களில் அறுவடைக்குத் தயாராகும். . சர்க்கரை தயாரிக்கும் முறை. கரும்பு ஆலைகள் மூலம் சாறு பிழியப்படும். சாறு பிழிந்த பின் எஞ்சிய கரும்புச்சக்கை அடுப்பு எரிக்கவும் காகிதம் தயாரிக் கவும் பயன்படும். கரும்புச்சாற்றில் சர்க்கரைப் புரதம், கோந்து, அமிலம், சாயப்பொருள், அழுக்கு முதலியன கலந்திருக்கும். திண்மப்பொருளை நீக்க முதலில் வடி சுட்ட வேண்டும். பிறகு கந்தகம் கலந்து காய்ச்சும் போது குழைந்து திண்மப் பொருளாகும். பிறகு இதில் உள்ள அமிலத் தன்மையை நீக்கச் சுண்ணாம்பு கலக்கப்படுகிறது. வடிகட்டிகள் மூலம் வடிகட்டப் பட்டு, மீண்டும் கொதிக்க வைக்கும்போது சர்க்கரை படிகமாகின்றது. எஞ்சிய சாறு (molasses) ஆல்க ஹால், போதையூட்டும் பானங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. போன்றவை கரும்பில் ஊடுபயிராகச் சோயாமொச்சை, உளுந்து, பாசிப்பயறு, வெண்டை போன்ற பயிர் களைச் சாகுபடி செய்யலாம். இதனால் கூடுதல் வருவாய் கிடைப்பதுடன் நிலவளமும் அதிகரிக்கிறது. கரும்பு அதிக நீர்த்தேவையுள்ள பயிராகும். 1200 மி.மீ. வரை நீர் தேவைப்படுகிறது. தற்போது அ. க.9-52 அ சர்க்கரைத் தாவரங்கள் 819 சொட்டு நீர்ப்பாசனம் மூலம் கரும்பு வளர்க்கப் படுகிறது. இதனால் நீர்ச் செலவில் சிக்கனம் ஏற் படுவதுடன் சுளைகளும் சுட்டுப்படுத்தப்படுகின்றன. முதிர்ச்சி அடைந்த கரும்பை விரலால் தட்டி னால் கணீரென்ற ஒலி கேட்கும். அப்போது கரும்புச் இருக்கும். சத்துப் பெருமளவில் கரும்பில் உள்ள திண்மப் பொருள்களின் சதவீதத்தை ஒரு கருவி மூலம் அறியலாம். ஒளிவிலகல் அளவி (refractro meter) என்ற கருவியின் மூலம் கரும்பில் உள்ள சர்க்கரைச் சத்தைக் கண்டறியலாம். சர்க்கரை அளவி (sacchari meter) என்ற கருவியின் மூலமும் சர்க்கரைச் சத்தின் சதவீதத்தை அறியலாம். பீட்ரூட். பீடா வல்காரிஸ் (Beta Vulgaris) என்னும் தாவர வேர்க் கிழங்கிலிருந்து சர்க்கரை தயாரிக்கப்படும். இது குளிர் மண்டலங்களில் பயிரிடப்படும் இருபருவச் ரெடியாகும். முதல் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் இதிலிருந்து சர்க்கரை எடுக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. பயிரிடு முறை, நீர்ப்பாசன வசதியுள்ள, கோடை யில் 70°C வெப்பமுடைய இடங்களில் விதைகளின் மூலம் ஏப்ரல் மாதத்தில் பயிராகும். அடுத்த ஆண்டில் கிழங்கு முற்றி அறுவடைக்கு வரும். சர்க்கரை எடுக்கும் முறை. கிழங்குகள் மென்மை யானவையாக இருப்பதால் எளிதில் சாறு எடுக்க முடியும்.சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய கிழங்கு வரிசையான தொட்டிகளில் காய்ச்சப்படுகிறது. இம் முறையால் 97% சர்க்கரை வெளிப்படுகிறது. இதைத் தூய்மைப்படுத்திச் சுண்ணாம்பு. கார்பன் டை ஆக்சைடு சேர்த்துக் குழைய வைக்கிறார்கள். இதி லிருந்து தூய்மையான சாறு வடிகட்டப்பட்டுப் படிகச் சர்க்கரை கிடைக்கிறது. எஞ்சிய சக்கை கால் நடை உணவாகவும் உரமாகவும் பயன்படுகிறது. கால் குளிர்காலச் சர்க்கரைப் பீட்ரூட் அக்டோபர் மாதத்தில் பயிரிடப்பட்டு ஏப்ரல்-மே மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது. ஒரு ஹெக்டேரில் 35-45 மெட்ரிக் டன் கிழங்குகள் கிடைக்கும். சர்க்கரை 15-16% அடங்கியுள்ளது. சர்க்கரையைத் தவிர இதில் இருந்து கிடைக்கும் துணைப் பொருள் களான பீட்ரூட் கூழ், பீட்ரூட் பாகு ஆகியன நடைகளுக்குத் தீவனமாகவும் மருந்துப் பொருள் பயன்படும். தயாரிக்கவும் சர்க்கரைப் பீட்ரூட் வண்டல் மற்றும் களிப் பிடிப்புள்ள வண்டல் நிலங் களிலும், உவர் நிலங்களிலும், சோடியம் உப்பு மிகுந்துள்ள நிலங்களிலும் நன்கு வளர்கி கிறது. இத்தகு நிலங்களைச் சீர் செய்வதில் பீட்ரூட் சிறந்த பயிராகத் திகழ்கிறது. நீர் வடியாத அல்லது நீர் தேங்கி நிற்கக்கூடிய நிலங்கள் ஏற்றவையல்ல. சர்க்கரைப் பீட்ரூட், விதைகள் மூலம் சாகுபடி செய்யப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட நாற்றுகளை