இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
28
அறிவியல் திருவள்ளுவம்
தம் அறிவுப் பெருமிதத்தையோ, அருள் பெருமிதத். தையோ பேசுபவர் யாம்' என்றே பேசுவர்.
“யாம் அவண் நின்றும் வருதும்”¹
“இஃது யாம் இரந்த பரிசிலல்”²
“யாம் இரப்பவை பொன்னும் பொருளும் போகமும் அல்ல”³
“படையமை மறவரும் உடையம் யாம்”
இவை போன்றவை பெருமிதம் காட்டுபவை. இப்பெருமிதப் பொருளைவிட,
கண்ணகி
“என் காற்சிலம்பு” என்று கூற
மன்னன் பாண்டியன்,
“யாம் உடைச்சிலம்பு” என்றான். இந்த “யாம்” அரசுப் பேருமிதம். இக்காலத்து இதனை ஆங்கிலத்தில் (Royal We) என்பர்[1] [2] [3] [4] [5]