இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13
- இத்தாலிய இயற்பியலார் ஜியாம்பட்டிஷ்டா டெல்லா போர்ட்டா. நிறுவிய ஆண்டு 1560.
36. முதல் இயற்பியல் நோபல் பரிசைப் பெற்றவர் யார்?
- ஜெர்மன் அறிவியலார் ராண்ட்ஜன், 1901.
37. கலிலியோ எவ்வாறு தற்பொழுது சிறப்பிக்கப்பட்டுள்ளார்?
- இவர் பெயரில் விண்ணகத்தை ஆராய 1991இல் ஒரு விண்வெளிக்கலம் ஏவப்பட்டுள்ளது. இவர் தற்கால இயற்பியலின் தந்தை.
1. பொருள் என்றால் என்ன?
- இடத்தை அடைத்துக் கொள்வதும் நிறை உள்ளதுமான பருப்பொருள். கண்ணால் பார்க்கவும் கூடியது. எ-டு. உலோகம்.
2. பொதுவாகப் பொருள் உள்ள மூன்று நிலைகள் யாவை?
- திண்மம், நீர்மம், வளி.
3. பொருளின் நான்காம் நிலையாகக் கருதப்படுவது எது?
- கணிம நிலை (பிளாஸ்மா).
4. கணிம நிலை என்றால் என்ன?
- உயர் வெப்ப நிலையில் தடையிலா மின்னணுக்களும் அயனிகளும் உள்ள நிலை.
5. திண்மம் என்றால் என்ன?
- கெட்டிப் பொருளே திண்மம்.
6. திண்மத்தின் பண்புகள் யாவை?
- 1. துகள்கள் நெருக்கமாக இருக்கும். 2. வடிவத்தை மாற்றுவதை எதிர்ப்பது.
7. பாய்மம் என்றால் என்ன?
- வளியும் நீர்மம் சேர்ந்தது.
8. நீர்மம் என்றால் என்ன?
- நீருக்கும் வளிக்கும் இடைப்பட்டது. எ-டு. எண்ணெய்.
9. நீர்மத்தின் பண்புகள் யாவை?
- 1. ஓடக்கூடியது. 2. தன் மட்டத்தை அடைவது.3. வடிவம்