பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114


(எ—டு) ‘ஐயா, கடைக்காரரே உங்களிடம் வாளபளம் உண்டுமோ?’ என்பர்.

திருச்சிக்கு கிழக்கே, தஞ்சை மாவட்டத்தில் சிலர் ‘ழ’வை ‘ஷ’ ஆக உச்சரிப்பர்.

(எ—டு) மார்கழித் திருவிழா—(வியாழக்கிழமை)

இதனை மார்கக்ஷதித் திருவிஷா வருகிறது என்றால் விசாஷக் கிழமையில் வருகிறது என்று விடையும் கூறுவர்.

இனி, தமிழகத்து வடக்கே சென்னை போன்ற இடங்களில் சிலர் ‘ழ'வை ‘ஸ்’ ஆக்கிப் பேசுவர்.

(எ—டு) இழுத்துக்கொண்டு—என்பதை ‘இஸ்த்துக்கினு’ என்பர்.

திருச்சிக்கு மேற்கே கோவை போன்ற இடங்களில் சிலர்—'ழ'வை ‘ய’ ஆக ஒலிப்பர்.

வாழப்பழத்தை—வாயப்பயம் என்று கூறுவர்.

நான் ஒருதடவை கோவைக்கு சென்றபோது—கடைத்தெருவில்—வாழைப்பழத்தை விற்கும் ஒருவன், ‘வாயப்பயம்’—என்றே கூறி விற்றுக் கொண்டிருந்தான்.

நான் அவனைப் பார்த்ததும், அவன் என்னிடம் வந்து, தட்டை இறக்கி வைத்து—'வாயப்பயம் வேணுங்களா’ என்றான்.

எனக்கு வியப்பு ஒருபுறம்; கோபம் ஒருபுறம். ‘நீ எந்த ஊர் அப்பா’ என்றேன்.

அவன்—'கியக்கேங்க’ என்றான்.

நான் (கிழக்கு) கியக்கேயிருந்து இங்கே எதுக்கு வந்தீங்க?—என்றேன்.