பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 ❖ லா. ச. ராமாமிர்தம்

முடியுமா? ஒரு தடவை தட்டினால் மூணு
தடவை தட்டும். நான் எதைப்பற்றியும்
ஒண்ணுமே பேசவில்லை. சரி சரி, பாரு
வைப் பற்றி இத்தோடு விட்டுவிடுவோம்.

மனோ-1-கற்பு எண். ஒரு தடவை ஒரே
தடவை முதல் தடவை. முதலும் கடைசியும்
அதுவே. அதில் ஏதோ தத்துவம், மகிமை
இருக்கத்தான் இருக்கிறது. நாம் இனி எங்கே
சந்திக்கப் போகிறோம்? சந்திக்கவும் வேண்
டாம். ஏன் மனோ உனக்கு மட்டும் வயசாகி
யிருக்காதா? கலியாணம், கார்த்தி, குழந்தை
குட்டி, பேரன், பேத்தி என்று பெருகி
உன் தோற்றமும் மாறியிருக்க மாட்டாயா?
அவர்கள் நடுவே சீர்குலைகிறாயோ சீர்
பெருகுகிறாயோ? இல்லை உன் வேளை
வந்து உன்னை எடுத்துக்கொண்டு போய்
விட்டதோ?

மனோ, நம் சந்திப்பு மறுபடி இலாத அதன்
ஒன்றினால் ஒரு பவித்ரத்தைப் பெற்று
விட்டது. எல்லாம் நான் நினைத்துக் கொள்
வதுதான். உனக்கு அப்படித் தோன்று
கிறதோ இல்லையோ? உனக்கும் என்
நினைப்பு இருக்கிறது என்று என்ன நிச்சயம்,
ஆதாரம், அவசியம்?

ஆனால் நீ அத்துடன் அழிந்துவிடவில்லை.
அதுதான் அதிசயம். நாள் ஏற ஏற வருடக்
கணக்கில் மலையாய் குவிந்து விட்டிருக்
கும் நினைவுச் சருகுகளினடியில் பொறி
புதைந்து புகைச்சல்கூடத் தெரியாமல்