பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முன்னுரை

அவ்வப்போது வானொலியில் என்னுடைய சிறுகதை களும் நாடகங்களும் ஒலிபரப்பாயின. இவ்வாறு வானொலி நிலையத்தினர் வாய்ப்புத் தந்த காரணத்தினால்தான், அத் துறைகளில் தொடர்ந்து பயிற்சி இல்லாத நான் சிறுகதைகளை யும் நாடகங்களையும் படைக்க முடிந்தது. எனவே முதற்கண் இந் நூல் எழுதுவதற்குத் தோன்றாத் துணையாயிருந்துள்ள வானொலி நிலைய நண்பர்களுக்கு நன்றி.

இத் தொகுப்பில் சிறுகதைகள் ஆறும், நாடகங்கள் நான்கும் இடம் பெற்றுள்ளன. படைப்பிலக்கியத்துறையில் அதிகப் பயிற்சி பெறாத நான், இத் துறையிலும் படைப்பு களை வெளிக்கொணர முடியும் என்று நண்பர்கள் தந்த ஊக்கத்தினால் சிறுகதைகளையும் நாடகங்களையும் எழுதி னேன். இவற்றைப் படிப்பவர் பயன்பாட்டில் நான் நடை போட்டிருக்கிறேன் என்று உறுதியாக உணர்வர்.

சிறுகதைகளையும் நாடகங்களையும் பொழுதுபோக்கிற் கென எழுதுவதைவிடச் சமுதாயத்தின் பயன்பாட்டிற்கு, மேன்மைக்கு, உயர்விற்கு எழுதுவது மனத்திற்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது. எனவே கன்னி முயற்சியாக அமைந்துள்ள என்னுடைய முயற்சியினைத் தமிழ்கூறு நல்லுலகம் வரவேற்கும் என நம்புகின்றேன். சி.பா

  • சிறுகதை, நாடங்களாதலின் கதை மாந்தர்களின் பேச்சு நடையிலேயே உரையாடல்களைத் தந்துள்ளேன்.