பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78


ளுக்கு ஏற்கெனவே பழக்கம் உண்டுங்களா, அம்மா?” மெல்லக் கேட்டாள், குழலி.

"பழக்கம் இல்லாமல் என்ன?" மனப்பழக்கம், ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியது. பூவிரல்களில் பூச்சிதறலாக ஈரம் சொட்டவே, திடுக்கிட்டாள் ரேவதி.

"அ...ம்...மா!"

"அம்மா!...மிஸ்டர் ஞானசீலனை பத்தே பத்து விநாடி தனிமையிலே சந்திச்சுப் பேசிட்டா, நான் என் சொந்த மனப்போக்குப் பிரகாரம் ஒரு முடிவுக்கு வர உதவியாக இருக்கும்; அதுக்காகத் தான் அவசரப்படுகிறேன், குழலி!”

"அம்மா..."

"என்ன குழவி?’’

"அழறீங்களா?”

"அழறேனா? இல்லையம்மா!" என்றாள் ரேவதி. அவள் சொற்கள் தடுமாறின. ஆனால், ஆடிப்புனலாக ஒடிய சுடுநீர்க் கண்ணீர் மாத்திரம் தடுமாறவில்லை.

குழலியின் விழிகளும் தளும்பத் தொடங்கின. "அம்மா! நான் உங்க உப்பைத் தின்னத் தொடங்கிட்டேன். சின்னுரண்டு பொண்ணுதான். நான். ஆனாலும், நீங்கள் என்னை நம்பவேணும். அண்ணன்கிட்டே ஆயிரம் குற்றம் குறை இருக்கலாம். ஆனால், எல்லாத்தையும் தாண்டி, இன்னமும் ஒரு மனிதனாக இருக்காருங்க, எங்கள் ஞானசீலன் அண்ணன்! அவர் மறு கல்யாணம் செஞ்சுக்கிறதா இருந்தா, அவரோட அன்பான நெஞ்சிலே நிரந்தரமாகக் கொலு இருக்கிற உங்களை விட்டுட்டு, வேறு ஒருத்தியை ஏறெடுத்தும் பார்க்கவே மாட்டாருங்கம்மா! உங்களோட இன்பக் கனவுப் பிரகாரமே, உங்களை என் அண்ணனோடு மறுபடியும் நல்லபடியாய்ச் சேர்த்து வச்சுப்பிட வேண்டியது என்