85
மனிதர் மாறி விட்டாரே...
"பரவாயில்லை. நீங்கள் உட்காரு நீங்க!”
"மிகவும் நன்றி.”
ஞானசீலன் உண்மையின் பிரதிநிதியாகவும் ஒழுக் கத்தின் சாட்சியாகவும் கம்பீரமான மிடுக்கோடு சோபாவில் அமர்ந்தான். 'சபாரி' உடுப்புகள் அவனது அழகுக்கு அழகு சேர்த்தன. புதிதாக முளைத்திருந்த இளைய மீசை புதுக் கருக்கோடு பொலிந்தது.
மீனாட்சிக் குங்குமத்திலே, ஆச்சரியக்குறி வியந்தது.
"நீங்கள் வந்த விஷயத்தை இன்னும் சொல்லவே இல்லீங்களே.” ரேவதி ஒரக்கண்ணால் பேசினாள்.
“அதை இதுவரையிலும் நீங்கள் கேட்கவே இல்லீங்களே?"
ரேவதிக்கு இன்னம்கூட நெஞ்சழுத்தம் குறைந்த தாகத் தோன்றக் காணோமே!...
“சரி; சொல்லுங்க."
"நீங்கள் பத்திரிகையில் கொடுத்திருந்த 'மணமகன் தேவை' விளம்பரம் பார்த்தேன். அது தொடர்பாகத் தான் உங்களை நேரில் காண இப்ப நான் இங்கே வந்திருக்கேன், செல்வி ரேவதி.”
"ஒ! அப்படியா!" ரேவதிக்கு சின்ன ஏமாற்றம். சிறிது நேரத்தில் எவ்வளவு பெரிதாக ஏமாந்து விட்டோம் என்று முகத்தைச் சுழித்தாள்.
"ஆமாம் அம்மணி.’’
"அந்த விளம்பரம் உங்களையும் விட்டு வைக்கலே போலிருக்கு!’’