இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
164
- எத்தனை எத்தனை இன்பமடா!-இவை
- எல்லாம் உனக்கே சொந்தமடா!(எத்தனை)
- மரம் படைத்தான்! ஒரு கொடி படைத்தான்! -அந்த
- மரத்தைத் தழுவி அதைப் படர வைத்தான்! படர வைத்தான்!
- மலர் படைத்தான்! நறு மணங் கொடுத்தான்-அதில்
- வடியும் தேனையும் உனக்களித்தான்!(எத்தனை)
- உன்னைப் படைத்தான்! ஒரு பெண்ணைப் படைத்தான்!-காதல்
- உறவு கொள்ளவும் வழிவகுத்தான்! வழிவகுத்தான்!
- பொன்னைப் படைத்தான்! பல பொருள் படைத்தான்-இந்த
- பூமியில் சொர்க்கம் காண வைத்தான்!(எத்தனை)
- கண் கொடுத்தான் நீ காண்பதற்கு! பல
- காட்சி தந்தான் கண்டு களிப்பதற்கு! களிப்பதற்கு!
- மனங் கொடுத்தான் உன்னை நினைப்பதற்கு-நல்ல
- மதி கொடுத்தான் எண்ணிப் பார்ப்பதற்கு(எத்தனை)
யாருக்குச் சொந்தம்-1963
- இசை : K. V. மகாதேவன்
- பாடியவர் : T. M. செளந்தரராஜன்