பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

229


கெஜல்
அறிவிருந்தும் ஆராய்ந்து பாராமலே!
அன்பிருந்தும் அதன் குரலைக் கேளாமலே!
அணைகடந்த காட்டாற்று வெள்ளம் போலே!- மனதிலே!
ஆவேசம் கொண்டதாலே!


பாட்டு
கோபம் உண்டானதே! ஒன்றாய்க் கலந்தே
குலாவிய குடும்பம் ரெண்டானதே!-முன்
(கோபம்)


கெஜல்
தன்னலம் கண்களை மறைத்ததாலே
தன் தவறைத் தான் உணரா நிலையினாலே!
தனக்கு ஒருநீதி! பிறர்க்கு ஒருநீதி என்று
தர்மநெறி முறைதவறி நினைத்ததாலே!


பாட்டு
அமுதையும் நஞ்சாக வெறுத்திடுதே!
அன்பெனும் வலையை அறுத்திடுதே!
அமைதி இல்லாமல் அலைந்திடுதே!
இவையாவும் முருகா உன் லீலையா?
(கோபம்)
வாழவைத்த தெய்வம்-1959
இசை : K. V. மகாதேவன்