இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
229
- கெஜல்
- அறிவிருந்தும் ஆராய்ந்து பாராமலே!
- அன்பிருந்தும் அதன் குரலைக் கேளாமலே!
- அணைகடந்த காட்டாற்று வெள்ளம் போலே!- மனதிலே!
- ஆவேசம் கொண்டதாலே!
- பாட்டு
- கோபம் உண்டானதே! ஒன்றாய்க் கலந்தே
- குலாவிய குடும்பம் ரெண்டானதே!-முன்
- (கோபம்)
- கெஜல்
- தன்னலம் கண்களை மறைத்ததாலே
- தன் தவறைத் தான் உணரா நிலையினாலே!
- தனக்கு ஒருநீதி! பிறர்க்கு ஒருநீதி என்று
- தர்மநெறி முறைதவறி நினைத்ததாலே!
- பாட்டு
- அமுதையும் நஞ்சாக வெறுத்திடுதே!
- அன்பெனும் வலையை அறுத்திடுதே!
- அமைதி இல்லாமல் அலைந்திடுதே!
- இவையாவும் முருகா உன் லீலையா?
- (கோபம்)
வாழவைத்த தெய்வம்-1959
- இசை : K. V. மகாதேவன்