பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63


மோகனா: சங்கத் தமிழ் மொழி
கொஞ்சும் வர்ணக்கிளி
எங்கள் இரு விழி நீ!-கண்ணே
இன்பம் தரும் ஒளி நீ!...
எங்கள் இரு விழி நீ! ...

பெண்கள்: சங்கத் தமிழ் மொழி
கொஞ்சும் வர்ணக்கிளி
எங்கள் இரு விழி நீ!-கண்ணே
இன்பம் தரும் ஒளி நீ!...
எங்கள் இரு விழி நீ!...

மோகனா: தங்க நிற மலரே!-தொட்டிலில்
தவழும் சந்திரனே!
பிஞ்சுத் தளிர்க் கரத்தால்-ஜாடை
பேசிடும் சுந்தரனே!...
முத்தே! மரகதமே! திகட்டாத
முக்கனியின் சுவையே!...
புத்தமுதே! தேனே! எழுதா
சித்திரமே வாடா!...