பக்கம்:ஆசிய ஜோதி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 ஆசிய ஜோதி பக்குவம் செய்த பாலமுது இதுவாம். பிள்ளை பிறந்தால் பெருந்திரு அமுது வனத்தின் கடவுள் வாழ்மரத் தடியில் வைத்து நின்று வணங்குவேன் என்றொரு நேர்த்திக் கடன்முன் நேர்ந்திருந்தனன். இன்று, மைந்தனைப் பெற்ற மகிழ்ச்சியால், அந்த நேர்த்திக் கடனை நிரப்பிட வந்தேன்; இனியென் வாழ்வெலாம் இனியநல் வாழ்வாம்; யாதும் ஐயம் இலை' எனக் கூறினள். புத்தர் மசுவை வாழ்த்தல் அப்பால், மதலையைப் பொதிந்த மஞ்சள் நிறத்தணை ஆடையை மெல்ல அகற்றி, நம் அண்ணல் உவந்தில் உலகெலாம் உய்ய உழைக்கும் திருக்கரங் களை அதன் சிரசின் மீது வைத்து நின்று, 'மங்கையே, உனக்கு மனத்தில் இன்பம் வளர்ந்து வருக! மைந்த னிவனும் மாநிலமீது வருந்தாது இனிய வாழ்வு வாழ்க! தான் யாரென்று கூறல் காணுதற் கரிய கடவுள் யானலன்; மண்ணிற் பிறந்தஓர் மனிதனே அம்மா! ஆதியில் உலகாள் அரசிளங் குமரன்; இந்நாள், வையக மாந்தர் மனஇருள் போக்கும் உண்மை ஞான ஒளியினைத் தேடி (45) (50) (55) (60), (653)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/71&oldid=1513114" இலிருந்து மீள்விக்கப்பட்டது